search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Planet"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகம்.
    • வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டுபிடித்துள்ளது.

    வாஷிங்டன்:

    பூமியை போன்று வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் சூரிய குடும்பத்துக்கு வெளியே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பூமியில் இருந்து 97 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகத்தின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்து இருப்பதை நாசாவின் ஹப்பிள் தொலை நோக்கி கண்டு பிடித்துள்ளது.

    நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் கடந்த 2017-ம் ஆண்டு ஜிஜே 9827டி என்று பெயரிடப்பட்ட கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் விட்டத்தில் ஏறக்குறைய இரண்டு மடங்கு இருக்கும் இந்த கிரகத்தில் நீர் நிறைந்த வளிமண்டலங்கள் இருப்பதை ஹப்பிள் தொலைநோக்கி தற்போது கண்டறிந்துள்ளது. இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். மீனம் நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் ஒரு குறு விண்மீனை சுற்றி வரும் இந்த கிரகம் ஒவ்வொரு முறை இந்த சூரியனை கடந்து செல்லும் நேரத்தில் எடுக்கப்படும் நிறமாலை தரவுகளின் அடிப்படையில் அந்த கிரகத்தில் உள்ள மூலக்கூறுகள் கண்டறியப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த கிரகத்தில் நீர் மூலக்கூறு நிறைந்த வளிமண்டலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பூமியில் உள்ள கடலை போன்று இரண்டு மடங்கு அதிகமாக நீராவியை இந்த கிரகம் பெற்றிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த கிரகம் வெள்ளி கிரகத்தை போல 800 டிகிரி பாரன்ஹீட் வெப்பமாக இருப்பதால், வளிமண்டலம் நீராவியாக இருப்பதாக கூறப்படுகிறது.

    பாறைகள் நிறைந்த கிரகங்களில் வளிமண்டலங்களின் நீர் மூலக்கூறுகள் இருப்பது உயிர்கள் வாழ்வதற்கான இது ஒரு முக்கியமான படியாகும் 97 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் மீனம் நட்சத்திர மண்டலத்தில் பூமியைப் போன்ற வளிமண்டலம் பெற்ற ஒரு கிரகத்தை கண்டறிந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது.

    இதற்கு முன்பு கண்டறிந்த நீர் மூலக்கூறு ஆக்சிஜன் இருக்கும் கிரகங்களை ஒப்பிடுகையில், தற்போது கண்டறிந்துள்ள கிரகம் மிக அருகில் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    சூரியனைப் போல் நட்சத்திரத்தையும் புதிய கோள் ஒன்று சுற்றி வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
    சென்னை:

    விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு அப்பாலும் பல்வேறு அதிசயங்கள் உள்ளன. இதுபற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடந்து வருகின்றன. அதில் புதிய கோள்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும், இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இதில், அகமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி கூடத்தை சேர்ந்த பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையில் என்ஜினீயர்களும், பொறியாளர்களும் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதில், சூரியனைப் போல் நட்சத்திரத்தை சுற்றி வரும் புதிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சூரியனை பூமி சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும். இதுபோல், சனிகிரக பாதைக்கு கீழும், நெட்டியூன் கிரக பாதைக்கு மேலும் இருக்க கூடிய நட்சத்திரத்தை புதிய கோள் ஒன்று சுற்றி வருவதை பேராசிரியர் அபிஜித் சக்ரவர்த்தி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.

    நட்சத்திரத்தை சுற்றி வரும் இந்த கோள் பூமியின் எடையை போல் 27 மடங்கு பெரிதானது. பூமியின் ஆரத்தை போல 4 மடங்கு ஆரம் கொண்டது என்பது தெரிய வந்துள்ளது.

    இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 1.2 மீட்டர் தொலை நோக்கியுடன் கூடிய மேம்பட்ட பி.எல்.ஆர். கருவியின் உதவியால் இந்த கோளின் எடையளவு துல்லியமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று துல்லியமாக கிரகங்களின் எடையை கண்டறியும் இது போன்ற நிறமாலை கருவிகள் உலகில் ஒரு சிலதான் உள்ளது. இந்தியாவில் உள்ள இந்த பாரஸ் நிறமாலை கருவிதான் ஆசியாவிலேயே முதலாவது கருவியாகும்.

    இந்த கண்டுபிடிப்பின் மூலம் நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் உருவாவதை அறிய இந்த கண்டுபிடிப்பு உதவும். இதன் மூலம் சூரிய குடும்பத்துக்கு அப்பாற்பட்டு நட்சத்திரங்களை சுற்றியுள்ள கோள்களை கண்டுபிடிக்கும் திறமையுள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#tamilnews
    ×