search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவாலயம்"

    • 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது
    • கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் ‘மணிப்பூர் கலவரம்’ தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது

    'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு (2023) மே மாதம் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளம் ஆகிய மொழிகளில் வெளியாகியது. அந்த படத்தின் கதை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததால் படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இந்த படம் வெளியானபோது, அந்த படம் ஓடிய தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தூர்தர்ஷன் டெலிவிஷனில் மார்ச் 5-ம் தேதி) இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கும் பதிவில், 'தி கேரளா ஸ்டோரி' படத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் நேஷனல் எடுத்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வகுப்புவாத பதட்டங்களை அதிகப்படுத்த மட்டுமே முயல்கிற திரைப்படத்தை ஒளிபரப்புவதை தூர்தர்ஷன் கைவிடவேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

    சர்ச்சைக்கு உள்ளான 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடும் எதிர்ப்புகளை மீறி கடந்த வாரம் தூர்தர்ஷன் தொலைக்காட்சி வெளியிட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மணிப்பூர் ஸ்டோரி ஆவணப்படத்தை கேரளாவில் உள்ள தேவாலயங்களில் திரையிட முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் 'மணிப்பூர் கலவரம்' தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது.

    கற்பனையான 'தி கேரளா ஸ்டோரி' படத்தை திரையிடும்போது, ஏன் உண்மை சம்பவமான 'மணிப்பூர் கலவர ஸ்டோரியை மக்களுக்கு காண்பிக்க கூடாது? மக்கள் மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவாலய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கேரளாவில் கிறிஸ்தவர்கள் 18% உள்ளனர். அங்கு அண்மை காலமாக குறிப்பிடத்தக்க கிறிஸ்தவர்கள் பாஜகவிற்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஆகையால் மணிப்பூர் கலவர ஆவணப்படம் கேரளாவில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    • அங்கு இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
    • இந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது.

    பழங்கால கட்டுமானங்கள் பல ஆண்டுக்கணக்கில் கட்டப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருப்போம். அவற்றை எப்படி கட்டி இருப்பார்கள் என்பது நமக்கு தெரியாது. அதில் இடம்பெற்றிருக்கும் நுணுக்கமான கலை வடிவங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதனை பார்வையிடும் பலரும் எப்படித்தான் இப்படி கலை வேலைப்பாடுகளை செய்திருப்பார்களோ என்று வியப்பில் ஆழ்ந்து போவார்கள். எத்தனை ஆண்டுகளாக கட்டி இருப்பார்கள் என்று யூகிப்பார்கள்.

    ஆனால் நூற்றாண்டுகளை கடந்தும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. பழமை மாறாமல் அந்த கட்டுமானத்தை நிர்மாணிக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஆண்டுக்கணக்கில் கட்டுமானம் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

    அந்த கட்டிடம் பார்சிலோனா நாட்டில் அமைந்திருக்கிறது. அது தேவாலயமாக எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாக்ரடா பேமிலியா கதீட்ரல் எனப்படும் அந்த தேவாலயத்தின் கட்டுமானப்பணி 1881-ம் ஆண்டு தொடங்கி இருக்கிறது. கட்டிடக் கலைஞர் ஆண்டனி கவுடி என்பவர் இந்த கட்டுமானத்திற்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார். உலகமே வியந்து பார்க்கும் வகையிலான பிரமாண்டமாக, கலை வேலைப்பாடுகள் கொண்ட கட்டிடமாக அமைய வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். அதற்காக ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்.

    கட்டுமான வரைபடம் தயாரிப்பதற்கு மட்டுமே சுமார் 10 ஆண்டுகாலம் செலவிட்டிருக்கிறார். அவர் எதிர்பார்த்தபடியே கட்டுமான வரைபடம் அமைய, உற்சாகமாக பணியை தொடங்கி இருக்கிறார். ஆனால் இப்போது போல் கட்டுமான தொழில்நுட்பட்பம் அந்த காலத்தில் இல்லை என்பதால் கட்டுமான பணி மெதுவாக நடந்திருக்கிறது. அவர் எதிர்பார்த்தபடி கட்டுமானத்தில் ஒரு பகுதி கூட நிறைவடையாத நிலையில் 1926-ம் ஆண்டு ஆண்டனி கவுடி உயிரிழந்துவிட்டார்.

    அதனால் கட்டுமான பணியில் சுணக்கம் ஏற்பட்டது. அங்கு நடைபெற்ற உள்நாட்டு போரும் கட்டுமான பணியை பாதிப்புக்குள்ளாகிவிட்டது. போரின்போது கட்டுமான வரைபடத்தை சிதைத்துவிட்டார்கள். அதனால் ஆண்டனி கவுடி திட்டமிட்டபடி கட்டுமானத்தை எழுப்புவது சவாலாக மாறியது. அவர் ஏற்படுத்தி கொடுத்த அடித்தள கட்டுமானத்தின் அடிப்படையில் கட்டுமான பணிகளை செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.

    கட்டுமானத்திற்கு நிதி கிடைப்பதில் ஏற்பட்ட சுணக்கமும் தாமதத்தை அதிகப்படுத்திவிட்டது. இப்போது உலகின் பல பகுதிகளில் இருந்தும் நிதி குவிந்து கொண்டிருக்கிறது. நவீன கட்டுமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழமை மாறாமல் கட்டுமானத்தை எழுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஆண்டனி கவுடி தேவாலயத்தின் முகப்பு பகுதிகளை நுணுக்கமான வேலைப்பாடுகளால் அலங்கரித்துவிட்டார். தேவாலயத்திற்குள் நுழைவதற்கு 3 நுழைவு வாயில்கள் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தார். அவற்றுள் இரண்டு நுழைவு வாயில் பகுதிகள் அமைக்கப்பட்டுவிட்டன. மூன்றாவது நுழைவு வாயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த தேவாலய கட்டுமான பணி 2026-ம் ஆண்டு முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கட்டுமான பணி முடிவடையும்போது இது உலகின் மிக உயரமான தேவாலயமாக மாறும்.

    ஆண்டனி கவுடி, தேவாலயம் 18 பெரிய, சுழல் வடிவ கோபுரங்களை கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார். 12 அப்போஸ்தலர்கள், 4 சுவிசேஷகர்கள், கன்னி மேரி மற்றும் இயேசு என ஒவ்வொரு கோபுரத்திலும் வெவ்வேறு உருவங்கள் இடம் பெற வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். அதன்படியே கட்டுமானம் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

    நான்கு சுவிசேஷ கோபுரங்களும் 135 மீட்டர் உயரம் (சுமார் 443 அடி) கொண்டிருக்கின்றன. 138-மீட்டர் (453-அடி) உயரம் கொண்ட கன்னி மேரியின் கோபுரத்தின் மேல் 12 ஸ்டார்கள் கொண்ட பெரிய நட்சத்திரம் வடிவமைக்கப்பட்டது. இந்த கோபுர கட்டுமானப்பணி 2021-ம் ஆண்டு இறுதியில் முடிவடைந்தது.

    இயேசு கிறிஸ்துவை குறிக்கும் கோபுரம் 172.5 மீட்டர் (566 அடி) உயரம் கொண்டதாக இருக்கும். 1984-ம் ஆண்டில், இந்த கட்டிடம் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. 2010-ம் ஆண்டு வழிபாட்டிற்காக பதினைந்தாம் போப் பெனடிக்ட்டால் புனிதப்படுத்தப்பட்டது. இந்த தேவாலயத்தையும், அதன் கட்டுமான பணியையும் காண்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    • நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று.
    • ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.

    ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்:

    நாட்டின் முக்கியமான ஆசிரமங்களில் புதுச்சேரியில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமும் ஒன்று. கடந்த 1926-ம் ஆண்டில் இந்த ஆசிரமம் நிறுவப்பட்டது. இதை நிறுவிய ஸ்ரீஅரவிந்தர், அவரது தலைமை சிஷ்யையாக விளங்கிய ஸ்ரீஅன்னை ஆகியோரது சமாதிகள் இங்கு உள்ளன. இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் எராளமான பக்தர்கள் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்கு வந்து செல்கிறார்கள். யோகா, மன அமைதியை விரும்புவோரை ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் கவர்ந்து வருகிறது.

    ஆரோவில்:

    புதுச்சேரியில் உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் புகழ் பெற்றது. உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர். ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.

    பொட்டானிக்கல் கார்டன்:

    புதுச்சேரி புது பஸ் நிலையம் அருகில் உள்ள பொட்டானிக்கல் கார்டன் 1826&ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். பிரெஞ்சு ஸ்டைலில் அமைக்கப்பட்டு உள்ள இந்த பொட்டானிக்கல் கார்டன் தென்னிந்தியாவின் மிகச்சிறந்த பொட்டானிக்கல் கார்டன்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 1500-க்கும் மேற்பட்ட தாவர வகைகள் இங்கு உள்ளன. இங்கு வார இறுதி நாட்களில் காட்சிப்படுத்தப்படும் இசைக்கு ஏற்றாற்போல ஆடும் இசை நீரூற்று குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

    அரிக்கமேடு:

    பழங்காலத்தில் ரோமானியர்களின் வர்த்தக மையமாக திகழ்ந்த இடம் அரிக்க மேடு ஆகும். புதுச்சேரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. ரோமானியர்கள், சோழர்கள், பிரெஞ்சுக்காரர்கள் தொடர்பான குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன. வரலாற்று விரும்பிகளுக்கு பிடித்த இடம்.

    இவை தவிர 300 ஆண்டு பழமையான மணக்குள விநாயகர் கோவில், கி.பி. 600-ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட வரதராஜ பெருமாள் கோவில், பிரெஞ்சு மிஷனால் கட்டப்பட்ட சேக்ரட் ஹார்ட் ஆப் ஜீசஸ், தேவாலயம், பழமையான ஜமாய் மசூதி போன்ற ஆன்மீக தலங்களும், சில்ட்ரன்ஸ் பார்க், பிரெஞ்சுப் போர் நினைவுச் சின்னம், காந்தி மியூசியம், பிரெஞ்ச்- இந்திய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் ராஜ் நிவாஸ் அரசுக் கட்டிடம், புதுச்சேரி மியூசியம், பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்கள் புதுச்சேரியில் பார்க்கத் தகுந்தவை.

    • நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
    • சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது.

    வாடிகன்:

    இத்தாலி வாடிகன் நகரில் உலக பிரசித்தி பெற்ற புனித பீட்டர் தேவாலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள்.

    இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் தேவாலயத்துக்கு வந்தார். திடீரென அவர் உக்ரைனில் நடந்து வரும் போரை எதிர்ப்பதாக கூறி தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார். இதைபார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.

    மேலும் அந்த வாலிபர் தனது உடலில் கைவிரல் நகத்தால் கீறி ஆவேசத்துடன் சத்தம் போட்டார். தனது முதுகு பகுதியில் உக்ரைனில் உள்ள குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பெயிண்டால் எழுதி இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது பற்றி அறிந்ததும் இத்தாலி போலீசார் அங்கு விரைந்து வந்து நிர்வாண போராட்டம் நடத்திய வாலிபரை மடக்கி பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் பிற்பகல் வாடிகன் தேவாலயம் சிறிது நேரம் மூடப்பட்டது. வாலிபரின் நிர்வாண போராட்டத்தை சுற்றுலா பயணிகள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

    • ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    திருவாரூர்:

    ஏசு சிலுவையில் அறைந்த தினமான புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை கடந்த 7-ந் தேதி உலகம் முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடந்தது.

    இதில் ஏசு இறந்ததை போன்று அவரது சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    அதையடுத்து ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அதன்படி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பகுத்தறி மாணிக்கம் அந்தோணியார் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    • தேவாலய கட்டிடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதுக்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர்வசதிகள் உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கு கூடுதலாக பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவாலய கட்டிடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக மானி–யம் உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 வருடம் வரை இருந்தால் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கலெக்டர் தலைமையிலான குழு, பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொண்டு கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணையாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

    • பெரம்பலூர் பாளையம் கிராமத்தில் 1861 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரெஞ்சுக்காரர்களால் புனித சூசையப்பர் தேவாலயம் கட்டப்பட்டது.
    • 160 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தேவாலயம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் பாளையம் கிராமத்தில் 1861 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிரெஞ்சுக்காரர்களால் புனித சூசையப்பர் தேவாலயம் கட்டப்பட்டது. இந்த தேவாலயம் 61 அடி உயரம் மற்றும் 8,800 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

    கும்பகோணம் டையோசிசன் வாயிலாக இந்த தேவாலயம் நிர்வகிக்கப்பட்டு வந்தது. கடந்த 2009-ல் அதன் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தேவாலயத்திற்குள் சென்று பிரார்த்தனை செய்வது நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் 2016-ல் அந்த தேவாலய வளாகத்தில் புதிய தேவாலயம் கட்டப்பட்டது.

    தற்போது அப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி பழமையான அந்த தேவாலயத்தை இடிக்க முடிவு செய்யப்பட்டது. 160 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தேவாலயம் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. கட்டுமானம் வலுவாக இருப்பதால் இடிப்பது கடினமாக உள்ளது என பாதிரியார் ஜெயராஜ் தெரிவித்தார்.

    இந்த தேவாலயத்தின் இரும்பு சிலை 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது. தற்போது புதுப்பிக்கப்பட்டு புதிய தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த டேனியல் பிரகாஷ் என்பவர் கூறும் போது, இந்த தேவாலயத்தை என்னால் மறக்க முடியாது. எனது தாத்தா முதல் மகன் வரை நான்கு தலைமுறைகளுக்கு பெயர் சூட்டும் விழா இங்குதான் நடந்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு ஞானஸ்தானம் இந்த தேவாலயத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

    சிறுவயதில் எங்கள் நேரத்தை அதிகம் தேவாலயத்தில் செலவழித்துள்ளோம். தேவாலயம் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது அதை இடிப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. இந்த தேவாலயத்தை பொருத்தமட்டில் எங்கள் நினைவில் என்றும் இருக்கும்.

    இன்னொருவர் கூறும்போது இந்த தேவாலயம் நூற்றாண்டு விழாவை கொண்டாடியுள்ளது. இதனை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்தார்கள். ஆனால் செய்ய முடியவில்லை. இது எங்களுக்கு ஒரு தனிப்பட்ட இழப்பு ஆகும் என்றார்.

    • கிறிஸ்தவ சப்பரம் பவனி திருவிழா நடந்தது.
    • 2 ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் வருடம் தோறும் சப்பரம் என்னும் தேர் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். 2 ஆண்டுகளாக நோய்த்தொற்று காரணமாக இந்த திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்த ஆண்டு சிங்கம்புணரி பங்குத்தந்தையால் தேவாலயத்தில் ஜெப நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளான மேல கச்சேரி தெரு, பொன்னமராவதி சாலை, ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகளில் சப்பரம் வலம் வந்தது.

    சப்பரத்தை சாதி மத பேதமில்லாமல் அனைத்து மதத்தினரும் கண்டு களித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமுழுக்கு யோவான் ஆலய நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

    ×