search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "churches"

    • வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்.
    • இகழ்ச்சியிலும், இன்னலிலும் கிறிஸ்துவை முன்னிட்டு அகமகிழ்ந்தார்.

    இறைமகன் இயேசு கிறிஸ்துவின் விண்ணுலகப் பயணத்திற்கு பிறகு அவருடைய சீடர்கள் மறை பரப்புப் பணியைச் செய்தனர். அவர்களோடு திருத்தூதுவர்கள் பலரும் இணைந்து இத்திருப்பணியைத் திறம்படச் செய்து வந்தனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தூய பவுல் அடிகளார். இவருடைய தீவிர நற்செய்திப் பணியின் காரணமாக பல திருச்சபைகள் உருவாயின. செயலற்றுப் போயிருந்த பல திருச்சபைகளை உயிர்ப்போடும், இறையியற் தெளிவோடும் செயல்பட வைத்தார்.

    தூய பவுல், ஆண்டவரின் திருவாக்காக கூறுகிறார்: 'என் அருள் உனக்குப் போதும் வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்'. (2 கொரி.12:9)

    தன் பலவீனத்தில் இறைபலத்தை உணர்ந்த தூய பவுல், யூத சமயத்தின் மீதிருந்த பக்தி வைராக்கியத்தினால் யூத சமயத்தின் தலைவர்களின் அனுமதியுடன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்காக தமஸ்கு சாலையில் பயணம் செய்தவர், கிறிஸ்துவின் தூதுவராக அழைக்கப்படுகிறார்.

    தான் உருவாக்கிய பல திருச்சபைகளுக்கு கடிதங்களை எழுதி அவர்களோடு நல்ல தொடர்பில் இருந்தார். நற்செய்தி பணிக்காக பல்வேறு துன்பங்களையும், இழப்புகளையும், தண்டனைகளையும், சிறைக்கூட அனுபவங்களையும் மகிழ்ச்சியோடும், பெருமையோடும் ஏற்றுக்கொண்டார். தன் பலவீனங்களைக் குறித்தும் அவர் மேன்மை பாராட்டினார். 'என் வலுவின்மையே எனக்குப் பெருமை' (2 கொரி.12:5) என்கிறார்.

    உடலில் தைத்த முள்

    கடவுளின் வழிநடத்துதலை நேரடியாகவும், மறைமுகமாகவும், இறைத்தூதர்கள் மூலமாகவும் பல்வேறு வெளிப்பாடுகளை பெற்ற தூய பவுல் அடிகளார் தன் உடலில் இருக்கின்ற ஒரு மாபெரும் பலவீனத்தைக் குறித்து பெருமையோடு கூறுகிறார். தூய பவுல் அடிகளார் எவ்விதத்திலும் பெருமை அடையாதபடி துன்பப்படுத்தும் ஒரு நோயை அவர் அனுபவிக்க வேண்டியதாயிற்று.

    அதனால் தான் 'உடலில் தைத்த முள்' என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லப்படுகிறது. சிலர் `கிட்டப்பார்வை குறைபாடு' என்றும், வேறு சிலர் `மலேரியா காய்ச்சல்' என்றும், இன்னும் சிலர் `காக்காய் வலிப்பு' என்றும் கூறுவர். (கலா 4:13-15).

    ஆனால் உண்மை அடிப்படையில் `உடலில்' என்பதை `உடலின் நிமித்தம்' என்று வாசிப்பது தான் மிகவும் பொருத்தமானது. அப்படியானால் இங்கே `முள்' எனக் குறிப்பிடுவது ஒரு கடுமை மிக்க ஆவிக்குரிய சோதனையைக் குறிக்கும். அவரின் பலவீனம் அவருடைய மறை பரப்பு பணியைப் பெரிதும் தடைசெய்யும் இன்னல்களை, வலிகளைக் கொடுத்த போதும் அச்சம் கொள்ளவும், நம்பிக்கை இழக்கும்படியான சோதனைக்குட்பட்டார் என்பது உண்மை.

    அத்தகைய சோதனை ஏற்பட கடவுளின் அனுமதி இருந்தாலும் `அதை எனைக்குட்டும் சாத்தானின் தூதன்' எனக்கூறுகிறார். 'குட்டும்' எனும் போது தொடர்ந்து இடைவிடாமல் நிகழும் தன்மையை குறிப்பிடுகிறார். பவுல் அடிகளார், 'அதை என்னிடமிருந்து நீக்கிவிடுமாறு மூன்று முறை ஆண்டவரிடம் வருந்தி வேண்டினேன்' (2 கொரி 12:8) என்கிறார்.

    ஆனால் ஆண்டவர், 'என் அருள் உனக்குப் போதும். வலுவின்மையில் தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்' என்கிறார். ஆண்டவர் இயேசு கெத்சமனே தோட்டத்தில் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும் என்று மூன்று முறை ஜெபித்தார். நேர்ந்த இன்னல் நீக்கப்படவில்லை. ஆனால் அதை தாங்குவதற்கு வலிமை அளிக்கும் விதமாக அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் தோன்றி அவரை வலுப்படுத்தினார்.

    அதேபோல் பவுல் அடியாருக்கும் ஆண்டவர் 'என் வல்லமை பூரணமாக விளங்கும்' என்ற பதிலையேத் தருகிறார். ஒருமுறை மட்டும் தான் இத்திருவாக்கு அருளப்படினும் அதன் நிறைபலனைத் தொடர்ந்து அனுபவித்து வருகிறார். பவுலடியார் தன் பலவீனத்தைக் குறித்துப் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறார். தன் வலுவின்மையிலும், இகழ்ச்சியிலும், இன்னலிலும் கிறிஸ்துவை முன்னிட்டு அகமகிழ்ந்தார். ஏனெனில் தான் வலுவற்றிருக்கும் போது வல்லமை பெற்றவனாக உணர்ந்தார்.

    பிரியமானவர்களே, நீங்களும் உங்கள் பலவீனத்தைக் குறித்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாம். உங்கள் பலவீனத்தால் உங்கள் வாழ்வு பொருளிழந்து, அருளிழந்து, மகிழ்விழந்து போனதாக நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கலாம்.

    `கடவுளே இந்த பலவீனம் மட்டும் என் வாழ்வில் இல்லாமல் போயிருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன். என் வாழ்க்கைத் தரம் மென்மேலும் உயர்ந்து இருக்கும். என் வாழ்வில் இருக்கின்ற இந்த பலவீனம் என் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விட்டது. என் வாழ்வின் முன்னேற்றத்தைக் குலைத்து என் வாழ்வின் நிலை உயரமுடியாமல் செய்துவிட்டது' என்று மனதிற்குள்ளாக நீங்கள் கலங்கிக்கொண்டிருக்கலாம்

    ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் இந்த பலவீனம் தான் கடவுளின் கிருபையை, வலிமையை, அன்பின் ஆழத்தை உங்களுக்கு உணர்த்துகிறது. உங்கள் பலவீனத்தில் தான் கடவுளின் நிறைவான இறையாற்றலை உங்களில் அனுபவிக்க வாய்ப்புத் தருகின்றது. உங்கள் பலவீனம் தான் இறைவனோடு உங்களுக்கு இருக்கின்ற உறவை, ஐக்கியத்தை வலுப்பெறச்செய்கின்றது. ஆதலால் உங்களுடைய பலவீனத்தைக் குறித்து தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் நம் வலுவின்மையில் தான் கடவுளின் வல்லமை நிறைவாய் வெளிப்படும்!

    • டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    கேரள மாநிலம் கொச்சியில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் தேவாலயங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் டி.ஜி.பி உத்தரவின்பேரில் கண்காணிப்பு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மிஷன்வீதி ஜென்ம ராக்கினி, தூய இருதய ஆண்டவர் ஆலயம், வில்லியனூர் லூர்தன்னை, நெல்லித்தோப்பு விண்ணேற்பு அன்னை தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாநில எல்லைகளிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    • கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது.
    • 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும் மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதி உதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகளான தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகளுக்கு அனுமதி அளிக்கப்ப ட்டுள்ளது.

    தேவாலய கட்டிடம் கட்டி 10 முதல் 15 ஆண்டுகள் இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகள் இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும் மானிய தொகை உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்க ளுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழி வுகளுடன் சிறுபான்மை யினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும்.

    நிதி உதவி 2 தவணை களாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பர்.
    • கடந்த ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி மற்றும் திருப்பலியுடன் துவங்கியது.

    திருப்பூர் :

    ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கையை நினைவுபடுத்தும் வகையில் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாள் கொண்டாடு கின்றனர். இதையொட்டி 40 நாட்கள் தவக்காலம் அனுசரிப்பர்.கடந்த பிப்ரவரி 21-ந்தேதி சாம்பல் புதனுடன் தவக்காலம் துவங்கியது.தேவாலயங்களில் வெள்ளி தோறும் சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப்பட்டது.

    பக்தர்களை ஆன்மிக பாதையில் வழிநடத்தும் வகையில் கத்தோலிக்க, சி.எஸ்.ஐ.., உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களி லும், சிறப்பு நற்செய்தி கூட்டங்கள் நடத்தப்பட்டன.தவக்காலத்தின் புனித வாரம் கடந்த ஞாயிற்றுக்கி ழமை குருத்தோலை பவனி மற்றும் திருப்பலியுடன் துவங்கியது.

    நேற்று புனித வியாழன், அனுசரிக்கப்பட்டது. ஏசு கிறிஸ்து, சிலுவைப்பாடு களை அனுபவிக்க துவங்கும் முன், தம் சீடர்களின் கால்களை கழுவி அவர்களுடன் உணவு அருந்திய நிகழ்வு நினைவு கூறப்பட்டது. இன்று ஏசுவின் சிலுவைப்பா டுகளை நினைவு கூறும் சிலுவைப்பாதை ஆராதனை திருப்பூர் ஆலயங்களில் நடத்தப்பட்டது. வருகிற 9-ந்தேதி ஈஸ்டர் பெருநாள் கொண்டாடப்படுகிறது.

    • தேவாலய கட்டிடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாட்டில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு 2016-17-ம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதுக்கேற்ப மானியத்தொகை உயர்த்தியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர்வசதிகள் உருவாக்குதல் ஆகிய பணிகளுக்கு கூடுதலாக பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவாலய கட்டிடத்தின் வயது 10 முதல் 15 வருடம் வரை இருந்தால் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக மானி–யம் உயர்த்தப்பட்டுள்ளது. 15 முதல் 20 வருடம் வரை இருந்தால் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக மானியம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கலெக்டர் தலைமையிலான குழு, பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொண்டு கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணையாக தேவாலயத்தின் வங்கி கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

    • இந்நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினார் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
    • கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று சேல்சம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள், தொழுநோயாளிகள் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோகளின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது.

    இந்நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினார் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்ள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இந்த திருச்சபைகளின் பரிதுரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

    வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி உதவித் தொகை 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி, பட்டப்படிப்பு வரை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ.1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித் தொகை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20 ஆயிரம், ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.5 ஆயிரம், திருமண உதவித் தொகை ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று சேல்சம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • தென்னிந்திய திருச்சபையின் நெல்லை திருமண்டலம் சார்பில் பாலர் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • மேலப்பாளையம் சேகரத்திற்கு உள்பட்ட சேவியர்காலனி தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சபை ஊழியர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    தென்னிந்திய திருச்சபையின் நெல்லை திருமண்டலம் சார்பில் பாலர் ஞாயிறு பண்டிகை கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெற்றன. மேலப்பாளையம் சேகரத்திற்கு உள்பட்ட சேவியர்காலனி தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சபை ஊழியர் கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

    காமராஜர் சாலை, அந்தோணியார் ஆலய சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. தொடர்ந்து உலகின் அனைத்து பகுதியிலும் வசிக்கும் குழந்தைகள் கல்வி, ஆரோக்கியத்தில் சிறந்து விளங்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மேலும் மழைவளம் பெருக வேண்டியும், சமாதானம், சமத்துவம் உருவாக வேண்டியும் மழலைகள் ஜெபம் செய்தனர். தொடர்ந்து ஞாயிறு பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும்.
    • சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்காக நிதியுதவி அளிக்கும் திட்டம் 2016-2017 ஆம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுது மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சமும், 15-20 வருடமாக இருப்பின் ரூ.2 லட்சமும், 20 வருடத்திற்கு மேலிருப்பின் ரூ.3 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான தகுதிகளாக கிறிஸ்தவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும். தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது என்ற சான்றிதழ் அளிக்க வேண்டும். சீரமைப்பு பணிக்காக ஒரு முறை நிதி உதவி அளிக்கப்பட்ட தேவாலயத்திற்கு மறுமுறை நிதி உதவி 5 ஆண்டுகளுக்கு பின்னர் வழங்கப்படும்.

    கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதலுக்கான விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ இணையதள முகவரியிலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழை பூர்த்தி செய்து, அதில் கோரப்பட்டுள்ள ஆவணங்களோடு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினரால் அவ்விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களை தர ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைப்படம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும்.

    நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    பாவ மன்னிப்பு நிகழ்ச்சி குறித்த மகளிர் ஆணைய பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பிரதமரிடம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கோரிக்கை விடுத்துள்ளார். #AlphonsKannanthanam #PMModi
    கொச்சி:

    கேரள மாநிலத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பாவ மன்னிப்பு கேட்க சென்ற பெண் ஒருவரை சில பாதிரியார்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவாலயங்களில் நடைபெறும் பாவ மன்னிப்பு நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக சில பரிந்துரைகள் அடங்கிய மனு ஒன்றை தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா மத்திய அரசிடம் வழங்கினார்.



    ஆனால் இந்த பரிந்துரையை நிராகரிக்க வேண்டும் என பிரதமரிடம் மத்திய சுற்றுலாத்துறை மந்திரி அல்போன்ஸ் கன்னன்தானம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘பாவ மன்னிப்பு நிகழ்ச்சி, கிறிஸ்தவ தேவாலயங்களின் அடிப்படை நம்பிக்கை’ எனக்கூறி உள்ளார்.

    இதைப்போல உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது, இது குறித்து பரிசீலிப்பதாக அல்போன்ஸ் கன்னன்தானத்திடம், ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  #AlphonsKannanthanam #PMModi  #Tamilnews 
    ×