search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    • டுவிட்டரில் #Vote4INDIA எனப் பதிவிட்டதால் விமர்சனம்.
    • தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம்- குஷ்பு

    பா.ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு இன்று காலை தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். பின்னர். வாக்கு செலுத்திவிட்டேன் என விரலை காண்பிக்கும் போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் #Vote4INDIA #VoteFor400Paar ஆகிய ஹேஸ்டேக்குகளை பதிவிட்டிருந்தார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கூட்டணி இந்தியா (INDIA Alliance) எனப் பெயர் வைத்துள்ளது. இதனால் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது இந்தியா என்று அழைக்கமாட்டார். இண்டிக் (Indic) என அழைப்பார்.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க கூறியதற்கு நன்றி என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும், முதல்கட்ட வாக்குப்பதியின் போது குஷ்பு தனது பக்கத்தை மாற்றுக்கொண்டார். உண்மையான பச்சொந்தி என விமர்சனம் செய்யப்பட்டது. மேலும், விமர்சனங்களுடன் டிரோல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அதில் "ஏன் உங்களை முட்டாளாக்கிக் கொள்ள வேண்டும்?. தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம். காங்கிரஸ் குடும்ப வளர்ச்சியில் நம்பிக்கை வைப்பதால் இது உங்களுக்குப் புதிது. #Votefor400Paar மற்றும் #ModiKaParivaar ஆகியவற்றைப் படிக்கிறீர்களா அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குருட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறீர்களா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • மோகன் 'ஹரா' என்ற ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் 93 வயது சாருஹாசன் தாதா வேடத்தில் நடித்துள்ளார்

    'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

    80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி உள்ளிட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்தார். ரேவதியுடன் நடித்த 'மெளன ராகம்' படத்தின் பாடல்கள் மோகனுக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.

    தற்போது விஜய்யின் 'கோட்' படத்தில் மோகன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.




    இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' என்ற ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில்,குஷ்பு, யோகி பாபு, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். இந்த படத்தை, கோயம்புத்தூர் மோகன் ராஜ் , ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தை விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார்.




    'ஹரா' படத்தின் 'டீசர்' வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் மோகன் ராஜ் பேசியபோது "இது நாங்கள் தயாரிக்கும் 2- வது திரைப்படமாகும். இப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்படுகிறது. இந்த படம் மீண்டும் மோகனுக்கு வெற்றியை பெற்று தரும்.

    இப்படத்தில் 93 வயது சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார். டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் தாதா வேடத்தில் அவர் நடித்துள்ளார்" என்றார்


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    வேலூர்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.

    எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் என அவர் கூறினார்.


    இந்த நிலையில் குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கி உள்ளார்.

    கடந்த சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார்.

    • தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது.
    • மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது.

    அரியலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர் , விருதுநகர் தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். 3 தொகுதிகளுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.

    தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பண்பாடு, சனாதன தர்மம் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் எதிரணியில் உள்ள தி.மு.க.வினர் சனாதனத்தையும், கலாசாரத்தையும் எப்படி ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.

    பாராளுமன்றத்தில் மோடி தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டு வர நினைக்கும் போதெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசாரும், அவரை பேசவிடாமல் செய்து விடுகிறார்கள். ஆகவே தமிழக கலாசாரம், பண்பாடு, மொழியை பாதுகாக்க பா.ஜ.க. பாடுபட்டு கொண்டிருக்கிறது.

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது. கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் தோற்றுபோனாலும் கூட, மோடி அவர்கள் நிர்வாகத்தை திறமையாக கையாண்டதினால், இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    2024-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமரானால் பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா பொருளாதாரத்தில் 6 மடங்கு வளர்ச்சி பெற்று உள்ளது. 2014-ல் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த செல்போன்களில் 97 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தது.

    ஆனால் தற்போது 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா செல்போன்களே பயன்பாடடில் உள்ளது. அதற்கு காரணம் பா.ஜ.க.வின் தெளிவான பொருளாதார கொள்கைதான். கார் உற்பத்தியில் ஜப்பான் முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் இருந்தது. தற்போது இந்தியா 2வது இடத்திற்கு வந்து விட்டது.

    இதற்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்தது. தற்போது தரமான மருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம். மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது. பெட்ரோலிய துறையிலும் 106 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறையிலும் நாடு முன்னேறும்.

    ஏழை மக்களின் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம், படித்த இளைஞர்களின் உயர்வு, விவசாயிகளின் பாதுகாப்பு, பட்டியலின மக்களின் வாழ்க்கை தரம் உயர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்த மோடி செயல்பட்டு வருகிறார். ஏழ்மையை அகற்றி வலிமையான இந்தியாவாக உருவாக்க அவர் பாடுபட்டு கொண்டிருக்கிறார்.

    80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி, அல்லது 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் 25 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் வந்து விட்டனர் என்று உலக வங்கி கூறுகிறது.

    நாடு முழுவதும் 11.78 கோடி விவசாயிகளுக்கும், அதில் தமிழகத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு கவுரவ நிதியாக 6 ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் மட்டும் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    10 கோடி பெண்களுக்கு இந்தியாவில் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கும், சிதம்பரம் தொகுதியில் 2.5 லட்சம் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 16 லட்சம் தமிழகத்திலும், 43 ஆயிரம் வீடுகள் சிதம்பரம் தொகுதியிலும் கட்டப்பட்டு உள்ளது.

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 11.4 கோடி குடிநீர் இணைப்பும், இதில் தமிழகத்தில் 80 லட்சம், சிதம்பரத்தில் 4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனி கவனம் உள்ளது. அதற்கு உதாரணம் தமிழகத்தின் வருவாய் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

    மத்திய அரசு நிதியானது 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.1650 கோடி வழங்கப்பட்டு உள்ளது. கிராமபுற சாலை திட்டங்களுக்கு ரூ.630 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்திற்காக ரூ.822 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம வளர்ச்சிக்காக ரூ.10,800 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

    ரெயில்வே திட்டங்களுக் 7 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை, திருச்சி, ஓசூர், கோவை, சேலம் உள்ளது. இதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளோம், 11 ஸ்மார் சிட்டி தமிழகத்திற்கு மோடி தந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மீது மோடிக்கு மிகப்பெரிய பாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஊழலை ஒழிப்பேன் என்று மோடி சபதம் ஏற்று உள்ளார். இந்தியா கூட்டணியோ ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று சபதமேற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    வாரிசு அரசியல், பணம் கொள்ளை யடித்தல், கட்டப்பஞ்சாயத்து என்று தி.மு.க. குடும்ப ஆட்சியின் கூடாரமாக இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை மைதானத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக செந்துறை ரோடு அமீனாபாத், இறைவன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

    இந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா, ஐ.ஜே.கே., அ.ம.மு.க. உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பாஜக தேசிய தலைவர் நட்டா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • பாஜக சார்பில் குஷ்பு பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
    • பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு, குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கடந்த சில தினங்களாக பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட விபத்தில் எனக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த 5 ஆண்டுகளாக என்னை கஷ்டப்படுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. பிரசாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் என்னால் முடிந்தவரை பிரசாரம் செய்தேன். எதிர்பார்த்தபடியே உடல் நிலை மோசமாகி உள்ளது.

    நீண்டநேரம் நிற்கவும், உட்காரவும் சிரமமாக உள்ளது. எனவே எனது பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன்.

    நமது பிரதமர் தொடர்ந்து 3-வது முறையாக பதவி ஏற்பதை நான் எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    குஷ்பு நாளை மும்பை செல்கிறார். அங்கு டாக்டர்கள் சொல்லும் ஆலோசனையை பொறுத்து லண்டன் சென்று சிகிச்சை பெற உள்ளதாக கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருணாச்சல பிரதேசத்தில் பல நிறுவனங்களில் சீன மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசின் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான்.

    வேலூர்:

    வேலூரில் இன்று நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

    இந்த சூழ்நிலைக்கு காங்கிரசும் தி.மு.க.வும் தான் காரணம். ஆனால் தேர்தலுக்காக மறைத்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

    அருணாச்சல பிரதேசத்தில் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர்கள் பரப்பி வருகின்றனர்.

    அருணாச்சல பிரதேசத்தில் பல நிறுவனங்களில் சீன மக்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே அவர்களுக்கு புரியும் வகையில் சீனா மொழியில் பெயர் பலகை வைத்துள்ளனர். இது ஆக்கிரமிப்பு என்று கூற முடியாது.

    உத்தர பிரதேசம் பீகாருக்கு அதிக நிதி வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் தமிழகத்திற்கும் ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் மக்களுக்கு என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும்.

    நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசின் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான்.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் இந்த தேர்வினை யாராலும் நீக்க முடியாது. இதனை காங்கிரஸ் சிதம்பரத்தின் மனைவி வக்கீல் நளினி சிதம்பரமே கோர்ட்டு முன்பு தெரிவித்துவிட்டார்.

    தற்போது தேர்தலை ஒட்டி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தி.மு.க.வும், மாநில அரசு விரும்பினால் அதிலிருந்து விலக்கு அளித்துக் கொள்ளலாம் என்று காங்கிரசும் தெரிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் பிரசாரம். இதனை மக்கள் நம்பமாட்டார்கள். பா.ஜ.க. மேல் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந்தேதி வேலூருக்கு பிரசாரம் செய்ய வருகிறார்.

    காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 6-ந்தேதி தென் சென்னையில் பிரசாரம் செய்து டாக்டர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டுகிறார்.
    • வாக்குப்பதிவு முடிவடைந்ததும் கேரள மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு செல்கிறார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு வருகிற 4-ந்தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    4-ந்தேதி (வியாழக்கிழமை), 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 2 நாட்கள் வேலூரில் பிரசாரம் செய்கிறார்.

    6-ந்தேதி தென் சென்னையில் பிரசாரம் செய்து டாக்டர் தமிழிசைக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    7 மற்றும் 8-ந்தேதி ஆகிய 2 நாட்கள் அந்தமான் தீவில் பிரசாரம் செய்கிறார். 9-ந்தேதி மும்பையில் பிரசாரம் செய்கிறார்.

    மீண்டும் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடும் குஷ்பு 11-ந்தேதி கிருஷ்ணகிரியிலும், 12 மற்றும் 13-ந்தேதிகளில் நாமக்கல்லிலும் பிரசாரம் செய்கிறார். 14-ந்தேதி திருப்பூரில் பிரசாரம் செய்கிறார்.

    அதன் பின்னர் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் கேரள மாநிலத்துக்கு பிரசாரத்துக்கு செல்கிறார்.

    வருகிற 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை கேரள மாநிலத்தில் பிரசாரம் செய்கிறார்.

    • தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார்.
    • மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார்.

    சேலம்:

    சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடந்த பா.ஜனதா கூட்டத்தில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'இங்கு கூடியுள்ள கூட்டம் காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல. நரேந்திர மோடி மீது உள்ள பாசத்தால் வந்த கூட்டம். நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்.

    தமிழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஏராளமான திட்டங்கள் கொடுத்து உள்ளார். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது எத்தனை திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று தி.மு.க.வினரால் பட்டியல் கொடுக்க முடியுமா? மீண்டும் தாமரை மலரும். தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான எம்.பி.க்களை டெல்லிக்கு அனுப்ப வேண்டும்' என்றார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் இதுவரைக்கும் ஆளும் கட்சியில் இருந்து எங்களை தாண்டி வேறு யாரும் வரமுடியாது என்று உட்கார்ந்து இருக்கின்றனர். நிச்சயம் பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது என்பதை அனைவரும் பார்க்க போகிறார்கள்' என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், 'பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மோடி போன்று பிரசாரத்திற்கு வேறு எந்த பிரதமரும் தமிழகத்திற்கு வந்தது இல்லை. பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவதை பிரமிப்பாக பார்க்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்யும் பிரதமராக மோடி உள்ளார். தேர்தலில் போட்டியிட இதுவரை நான் (குஷ்பு) சீட் கேட்கவில்லை' என்றார்.

    • குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
    • பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை:

    சென்னையில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப் பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான பா.ஜனதா நிர்வாகி நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல்வேறு நகரங்களில் தி.மு.க.வினர் குஷ்பு கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னையில் தி.மு.க. மகளிர் அணியினர் இன்று மாலை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். ஒட்டு மொத்த சென்னை மாவட்ட மகளிர் அணியினர் திரளாக பங்கேற்கும் இந்த போராட்டத்தில் குஷ்பு கொடும் பாவியையும் கொளுத்த இருக்கிறார்கள்.

    மகளிர் அணியினர் முன்னெடுத்துள்ள இந்த போராட்டத்தில் மகளிர் தொண்டர் அணியினர், மகளிரணி அமைப்பாளர்கள் திரளாக பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.
    • மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார்.

    நாகர்கோவில்:

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். அதன் பிறகு முதல் முறையாக இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    அவருக்கு குமரி மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு மகளிர் உரிமைத்தொகை தருவதை வரவேற்கிறேன். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம் ஜெயலலிதாவால் கொண்டு வந்த காரணத்தால் அதை நிறுத்தி உள்ளார்கள். மகளிர் உரிமைத்தொகை நியாயமான பெண்களுக்கு சென்று சேரவில்லை. கட்சியை சேர்ந்த பெண்களுக்கு அதில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்குவதாக கூறியிருந்தது. ஆனால் தற்போது குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும்தான் வழங்கப்பட்டு வருகிறது. இதைதான் குஷ்பு கேட்டுள்ளார். அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

    உரிமை தொகை வாங்குபவர்கள் பிச்சைக்காரிகள் என்று குஷ்பு கூறியிருப்பது அவருடைய கருத்து. என்ன அர்த்தத்தில் அவர் பேசினார் என்று எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு இல்லை. நிறைய பெண்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி வருகிறார்கள்.

    நன்றாக பேசுபவர்கள் சட்டசபையில் முன் இருக்கையில் இருக்க வேண்டும். ஆனால் எனக்கு முன் இருக்கையில் அமர வாய்ப்பு கிடைக்கவில்லை. 2-வது முறையாக வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அதிகாரத்தின் மீது நம்பிக்கை இல்லாத கட்சிகள்தான் காங்கிரசும், தி.மு.க.வும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெண்களுக்கு பதவி கொடுக்காமல் எப்போது வேலை பார்த்தீர்கள் என்று ஒரு பெண்ணிடம் கேட்க முடியாது.

    பாரதிய ஜனதாவில் எனக்கு பதவி கண்டிப்பாக கொடுப்பார்கள். விரைவில் அங்கீகாரம் கொடுப்பார்கள். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். பெண்களுக்கு எந்த சீட்டு கொடுத்தாலும் சரி, பதவிகள் கொடுத்தாலும் சரி, அதற்கு 2 விஷயங்கள் மையமாக கொண்டிருக்கும்.

    ஒன்று பெண்களை அங்கீகாரப்படுத்தும், அதிகாரப்படுத்தும் முயற்சி இருக்கும். பெண்கள் களப்பணி ஆற்று தளத்தை உருவாக்குவார்கள். அது தான் பாரதிய ஜனதாவின் சீரிய தன்மை. அதை விரைவில் செய்வார்கள்.


    பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த நாங்கள் வந்துள்ளோம். குடும்பக் கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் எந்த சுயநலமும் இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மக்கள் பணியை மட்டுமே பிரதான பணியாக நினைக்க கூடியது பாரதிய ஜனதா. மக்கள் பணி ஆற்றுவதற்காக சுயநலம் இல்லாமல் பணியாற்ற நான் பாரதிய ஜனதாவில் இணைந்து உள்ளேன்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தந்தை எம்.பி.யாக இருந்தால் மகன் எம்.எல்.ஏ.வாக இருப்பார். என்னைப் பொறுத்தவரை சாமானிய மக்கள் பதவிக்கு வர வேண்டும். நான் சாமானிய பெண். ஆனால் என்னை உயர்த்த காங்கிரஸ் கட்சி நினைக்கவில்லை.

    அதே நேரம் அவர்களது குடும்ப வாரிசுகளை தலைவர் ஆக்குவார்கள். வாரிசுகள், அதிகாரம், பணம் இருப்பவர்கள் காங்கிரசில் இருக்க முடியும். ஆனால் சாமானிய மக்களால் பாரதிய ஜனதாவில் இருக்க முடியும்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியிலும் வாரிசுக்கு தான் சீட்டு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது பணிகள் நடந்து இருக்கிறதா? எதுவும் செய்யவில்லை. மீண்டும் ஆட்சிக்கு மோடி தான் வரப்போகிறார். எனவே அதற்கு ஏற்றார் போல் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் ஒருவர் வர வேண்டும்.

    இங்கிருந்து 2014-ல் 39 எம்.பி.க்கள் சென்றார்கள். அவர்கள் சென்று என்ன பிரயோஜனம். எதுவும் இல்லை. பாராளுமன்ற வாசலில் போராட்டம் நடத்தி விட்டு வந்து விடுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு எதுவும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது.

    மத்தியில் ஆளக்கூடிய கட்சி இங்கும் வெற்றி பெற வேண்டும். இங்கு வெற்றி உறுதி செய்யப்பட்டால் தான் மக்களுக்கு இன்னும் பலன்கள் கிடைக்கும். இந்த முறை களம் பெரிய அளவில் மாறி இருக்கிறது. தமிழ்நாட்டில் அந்த மாற்றமும் ஏற்றமும் பாரதிய ஜனதாவை உயர்த்தி பிடிக்கும். அதை நாங்கள் உறுதியாக எடுத்து செல்வோம்.

    தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அனைத்து உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வெளியே போய்விடுகிறார்கள். விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டீர்கள்? ஆனால் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட போவதில்லை. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட கட்சி தலைமை முடிவு செய்தால் போட்டியிடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை.
    • மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    சென்னை செங்குன்றத்தில் பா.ஜனதா சார்பில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பா.ஜனதா நிர்வாகியுமான நடிகை குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1,000 பிச்சை போட்டால் ஓட்டு போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார்.

    குஷ்புவின் இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:-

    நடிகை குஷ்பு முதலமைச்சர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை பற்றி மிக இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கும் தொகையை பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி உள்ளார்.

    உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் அவர் என்பதை இதன்மூலம் அறிய முடிகிறது.

    குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை என்னவென்று தெரியுமா?. அந்த ஆயிரம் ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும்.இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலன் தருகிறது.

    இதனை சிலர், 'முதலமைச்சர் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதலமைச்சர் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்கிறார்கள்.

    நீங்கள் உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீர்கள். நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.
    • பா.ஜ.க.-வை சேர்ந்த குஷ்பு தேர்தலில் போட்டியிடுவது குறித்து பதில் அளித்துள்ளார்.

    வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்த போது, பாராளுமன்றத்தில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "கமல்ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளார்கள். தி.மு.க.வில் பிரசாரம் செய்வதற்கு யாரும் இல்லை. தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் போன்ற முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை. அதைத் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைத்துள்ளார். கூட்டத்திற்காக முதலமைச்சருக்கு கமல்ஹாசன் தேவையா?"

    "பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா எங்கு நிற்க சொன்னாலும், நிற்பேன். நாடு முழுக்க பிரசாரம் செய்ய சொன்னாலும் முழுவீச்சில் பிரசாரம் செய்வேன்," என்று தெரிவித்தார்.  

    ×