என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaala Bairavar"

    • திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்யலாம்.
    • பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதால் இது சக்திவாய்ந்த அபிஷேகமாக பார்க்கப்படுகிறது.

    பைரவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், நல்லெண்ணெய், மற்றும் பலவகையான பழச்சாறுகள் கொண்டு அபிஷேகம் செய்து பார்த்திருப்போம். ஆனால், கன்னிகைப்பேர் என்ற ஊரிலுள்ள சிவாநந்தீஸ்வரர் கோவில் பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பைரவருக்கு எதற்காக மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

    பைரவருக்கு மிளகாய்ப்பொடியில் அபிஷேகம் செய்வதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்குவதாகவும் அதனால் இது சக்திவாய்ந்த அபிஷேகமாகவும் பார்க்கப்படுகிறது.

    யார் யாரெல்லாம் இந்த அபிஷேகம் செய்யலாம் :

    * பணம் மற்றும் தங்கம் முதலானவற்றை தொலைத்தவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், திருட்டு மற்றும் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகத்தை மேற்கொள்ளலாம்.

    * திருட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அபிஷேகத்தை செய்யும் போது, திருடியவர்கள் சட்டத்தின் முன் வந்து நிற்பார்கள் என்றும் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    * மிளகாய்ப் பொடியால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேறியவர்கள், பால் அபிஷேகம் செய்து பைரவரை குளிர்வித்து, பிரார்த்தனையை நிறைவு செய்ய வேண்டும்.

    சென்னை - பெரியபாளையம் சாலையில், 36 கி.மீ., துாரத்தில் உள்ளது, கன்னிகைப்பேர் என்ற கிராமம். இங்கிருந்து, 4 கி.மீ., தொலைவில்  சிவாநந்தீஸ்வரர் கோவில் உள்ளது . திருவள்ளூரில் இருந்தும் பெரியபாளையம் வழியாகவும் இக்கோவிலுக்கு செல்லலாம்.


    எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த நாளில் பைரவரை வழிபட வேண்டும்:

    * சிம்ம ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமையிலும், கடக ராசிக்காரர்கள் திங்கட் கிழமையிலும் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய்க் கிழமையிலும் பைரவரை வழிபாடு செய்யலாம்.

    * மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் புதன்கிழமையிலும், தனுசு, மீனம் ராசிக்காரர்கள் வியாழக்கிழமையிலும், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் வழிபாடு செய்யலாம்.

    * மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் சனிக்கிழமையிலும் பைரவரை வழிபாடு செய்ய நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.

    • பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருக வேண்டி மஹா காலபைரவருக்கு யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம் பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகர் ஸ்ரீசித்தர் பீடத்தில் 11அடி உயரத்தில் மஹா பிரத்தியங்கிரா தேவி-மஹா காலபைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

    பைரவரின் பிறந்த தினமான மஹாதேவ காலபைரவாஷ்டமியை முன்னிட்டு உலகில் கொடிய நோய்கள் இல்லாமல் அன்பு-அமைதி நிலவ வேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும்,

    பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருக வேண்டியும், நோய், நொடிகள், கடன் தொல் லைகள் இல்லாமல் செல்வங்கள் பெருகி வளமாக நலமாக வாழ வேண்டியும் ஸ்ரீசித்தர் பீடத்திலுள்ள ஸ்ரீமஹா காலபைரவருக்கு மஹா யாகத்துடன் கூடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    காலை 8.45மணிக்கு விநாயகர் வழிபாடுடன் தொடங்கிய யாக வழிபாட்டில், காலை 10.30மணிக்கு மஹா கால பைரவருக்கு சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பால், பழம், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர், விபூதி, குங்கும், நெல், அன்னம், சங்கு, ருத்திராட்சம், தாமரை, புனுகு, அருகம்புல், மலர்கள் உள்ளிட்ட 64 வகையான சிறப்பு அபிஷேகம் மிக பிரம்மாண்டமாக பக்தர்கள் திரளாக பங்கேற்க ''பைரவா போற்றி போற்றி... காக்கும் கடவுளே மஹா கால பைரவா போற்றி போற்றி, கருணையின் தெய்வமே காலபைரவா போற்றி போற்றி '' என பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து, மதியம் 12மணிக்கு ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை என பலவகையான மலர்களான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனையுடன் கூடிய சிறப்பு வழிபாடுகளும், தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு மஹா அன்ன தானமும் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

    சிறப்பு வழிபாடு களுக்கான ஏற்பாடுகளை சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக்கு ழுவினர், மகளிர் அணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    • வளர்பிறை அஷ்டமியில் இந்த பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.
    • பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம்.

    பிரச்சனைகளை தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை காலபைரவர் வழிபாடு

    ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அல்லது ராகு காலத்தில் ருத்திர அபிஷேகம், மிளகு வடை மாலை சாற்றி ஒரு பூசணி மிளகு தீபம் அல்லது மற்ற பழங்களில் மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் பாக்கியம் கிட்டும்.

    ஜாதக கர்ம வினைகள் அகலும், காரியத்தடைகள் நீங்கும், நினைத்தது கைகூடும், எதிரி வசியமாவார், மறைமுக எதிரிகளும் பைரவரை பூஜிப்பதால் மறைந்து விடுவார்கள்.

    கடன் தொல்லை தீர

    கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந்தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு ஆப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்யமிடவும்.

    ஒரு தலைவாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பிரப்பி அதன் மீது ஒரு தலைவாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ண பரைவரை வழிபடலாம்.

    இந்த வழிபாட்டை செய்யும் போதுபைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீபைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வ செழிப்பைப்பெறலாம்.

    பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.

    பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.

    இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது.

    மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.

    நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.

    ஸ்ரீ ஸ்வர்ணபைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால்பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம்.

    பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.

    • பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும்.
    • மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியை சொல்லலாம்.

    ஸ்ரீ பைரவர் 108 போற்றி

    ஓம் பைரவனே போற்றி

    ஓம் பயநாசகனே போற்றி

    ஓம் அஷ்டரூபனே போற்றி

    ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி

    ஓம் அயன்குருவே போற்றி

    ஓம் அறக்காவலனே போற்றி

    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி

    ஓம் அடங்காரின் அழிவே போற்றி

    ஓம் அற்புதனே போற்றி

    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி

    ஓம் ஆனந்த பைரவனே போற்றி

    ஓம் ஆலயக்காவலனே போற்றி

    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி

    ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி

    ஓம் உக்ர பைரவனே போற்றி

    ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி

    ஓம் உதிரம் குடித்தவனே போற்றி

    ஓம் உன்மத்த பைரவனே போற்றி

    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி

    ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி

    ஓம் எல்லை தேவனே போற்றி

    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி

    ஓம் கபாலதாரியே போற்றி

    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி

    ஓம் கர்வ பங்கனே போற்றி

    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி

    ஓம் கதாயுதனே போற்றி

    ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி

    ஓம் கருமேக நிறனே போற்றி

    ஓம் கட்வாங்க தாரியே போற்றி

    ஓம் களவைக் குலைப்போனே போற்றி

    ஓம் கருணாமூர்த்தியே போற்றி

    ஓம் கால பைரவனே போற்றி

    ஓம் காபாலிகர் தேவனே போற்றி

    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி

    ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி

    ஓம் காசிநாதனே போற்றி

    ஓம் காவல்தெய்வமே போற்றி

    ஓம் கிரோத பைரவனே போற்றி

    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி

    ஓம் சண்ட பைரவனே போற்றி

    ஓம் சட்டை நாதனே போற்றி

    ஓம் சம்ஹார பைரவனே போற்றி

    ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

    ஓம் சிவத்தோன்றலே போற்றி

    ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி

    ஓம் சிக்ஷகனே போற்றி

    ஓம் சீர்காழித்தேவனே போற்றி

    ஓம் சுடர்ச்சடையனே போற்றி

    ஓம் சுதந்திர பைரவனே போற்றி

    ஓம் சிவ அம்சனே போற்றி

    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி

    ஓம் சூலதாரியே போற்றி

    ஓம் சூழ்வினை அறுப்பவனேபோற்றி

    ஓம் செம்மேனியனே போற்றி

    ஓம் ளக்ஷத்ரபாலனே போற்றி

    ஓம் தட்சனை அழித்தவனே போற்றி

    ஓம் தலங்களின் காவலனே போற்றி

    ஓம் தீது அழிப்பவனே போற்றி

    ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி

    ஓம் தெற்கு நோக்கனே போற்றி

    ஓம் தைரியமளிப்பவனே போற்றி

    ஓம் நவரச ரூபனே போற்றி

    ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி

    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி

    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி

    ஓம் நாய் வாகனனே போற்றி

    ஓம் நாடியருள்வோனே போற்றி

    ஓம் நிமலனே போற்றி

    ஓம் நிர்வாணனே போற்றி

    ஓம் நிறைவளிப்பவனே போற்றி

    ஓம் நின்றருள்வோனே போற்றி

    ஓம் பயங்கர ஆயுதனே போற்றி

    ஓம் பகையளிப்பவனே போற்றி

    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி

    ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி

    ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி

    ஓம் பால பைரவனே போற்றி

    ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி

    ஓம் பிரளயகாலனே போற்றி

    ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி

    ஓம் பூஷண பைரவனே போற்றி

    ஓம் பூதங்களின் நாதனே போற்றி

    ஓம் பெரியவனே போற்றி

    ஓம் பைராகியர் நாதனே போற்றி

    ஓம் மல நாசகனே போற்றி

    ஓம் மகோதரனே போற்றி

    ஓம் மகா பைரவனே போற்றி

    ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி

    ஓம் மகா குண்டலனே போற்றி

    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி

    ஓம் முக்கண்ணனே போற்றி

    ஓம் முக்தியருள்வோனே போற்றி

    ஓம் முனீஸ்வரனே போற்றி

    ஓம் மூலமூர்த்தியே போற்றி

    ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி

    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி

    ஓம் ருத்ரனே போற்றி

    ஓம் ருத்ராட்சதாரியே போற்றி

    ஓம் வடுக பைரவனே போற்றி

    ஓம் வடுகூர் நாதனே போற்றி

    ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி

    ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி

    ஓம் வாரணாசி வேந்தே போற்றி

    ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி

    ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி

    ஓம் விபீஷண பைரவனே போற்றி

    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!

    • பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு
    • குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள்.

    பதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்

    குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள்.

    இதற்கு பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர்.

    அந்த வகையில், அகத்தியர், ''சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதி சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே'' என்கிறார்.

    பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோயில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார்.

    ''அஞ்சருவி சலத்தருகு யடுத்தே வரகலூராம் காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டை செங்கனூராம் முழு மண்டலமே.

    தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே'' என்கிறார்.

    இப்பாடலின் பொருள்:

    குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள். காரைக்குடியில் பைரவர்.

    சோழபுரத்தில் பைரவ சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர், திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி.

    திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர்.

    அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.

    வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.

    பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது.

    செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.

    ''போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும்.

    பைரவர் படத்தை வீட்டில் வடக்குப்புறம் வைத்தால் & வாஸ்து தோஷத்தினால் வரக்கூடிய பீடை அகலும் என்கிறார் காக புஜண்டர்

    • சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் மாதம் ஒரு பைரவராகக் காட்சி தருகிறார்.
    • ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்

    சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.

    எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.

    சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்

    வைகாசி தாதா - ருரு பைரவர்

    ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்

    ஆடி அரியமான் - கபால பைரவர்

    ஆவணி விஸ்வான் - ஸ்வர்ணாகர்ஷண பைரவர்

    புரட்டாசி பகன் - வடுக பைரவர்

    ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்

    கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்

    மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்

    தை விஷ்ணு - குரோதன பைரவர்

    மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்

    பங்குனி பூஷா - சட்டநாத பைரவர்.

    • அனைத்து சிவாலயங்களில் பரிகார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.
    • இந்த வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது.

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம்

    படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஆற்றும் பைரவரின் வழிபாடு வடக்கேயிருந்து வந்த கபாலிக வழிபாட்டின் ஒரு பகுதியாகும்.

    அனைத்து சிவாலயங்களில் பரிவார தெய்வமாக பைரவ வழிபாடு உள்ளது.

    இல்லங்களில் திரிசூல வழிபாடாக போற்றப்படுகிறது.

    வீடுகளில் காவல் தெய்வமான பைரவர் வடிவங்களை சிலைகளாகவோ படமாகவோ வைத்து வழிபடுவதற்கு பதில் வீட்டின் சுவரில் திரிசூலத்தை வரைந்து அதன் அருகில் திருவிளக்கேற்றி வழிபடுகின்றனர்.

    அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடு சூரியனிடம் இருந்து ஆரம்பித்து அர்த்தஜாமப் பூஜையாக பைரவருடன் முடிவடைகிறது.

    இரவு அர்த்தஜாமப் பூஜை முடிந்ததும் பைரவருக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து ஆலயத்தின் கதவுகளை மூடி ஆலய சாவிக்கொத்தை அவரின் காலடியில் வைப்பது வழக்கம்.

    பாதுகாப்பற்ற இந்நாளில் இப்படி சாவிகளை வைப்பதை தவிர்த்து பூஜை முடிந்ததன் அடையாளமாக கைமணியையும் அபிஷேக கலசம் அல்லது கைச்செம்பையும் வைக்கின்றனர்.

    ஆலயங்களில் நடைபெறும் வருடாந்திர பிரமோற்சவத்திற்கு முன்னும் பின்னும் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

    விசேஷ தினங்களில் இவருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அந்த விசேஷ தின பூசையில் எட்டுவித பட்சணங்களும், எட்டுவித அன்னங்களும், நைவேத்திய பொருட்களாக நிவேதிக்கப்படுகின்றன.

    மேலும் பைரவருக்கு எட்டு வித மலர்களால் அர்ச்சனை செய்து எட்டுவித ஆரத்திகளும் செய்யப்படுகின்றன.

    பைரவருக்குரிய வழிபாட்டு நேரம் நள்ளிரவாகும். இந்த அகால நேரத்தில் பராசக்தியானவள் பைரவி என்னும் பெயரில் நடமாடுகின்றாராம்.

    அவளுடன் இறைவனும் பைரவராக தலத்தை வலம் வருவாராம். அதனால் சித்தர்கள் அந்த நள்ளிரவு நேரத்தில் திரிபுர பைரவியையும் பைரவரையும் தியானிக்கின்றார்கள்

    இந்த வழிபாடு உயரிய ஆற்றலையும் சக்தியையும் கொடுக்க வல்லது. பைரவரை மனம் உருகி வழிபடுவர்களுக்கும், உரிய முறைப்படி தீபம் ஏற்றி வழிபடுபவர்களுக்கும் இந்த சக்தி கிடைக்கும்.

    • ஆதிபைரவரிடம் இருந்து எட்டு பைரவர்கள் தோன்றினர்.
    • பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது.

    கிரக தோஷத்தை நீக்கும் பைரவர்!

    ஆதிபைரவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.

    பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக,

    ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள்.

    பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன.

    பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.

    மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள்.

    பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள்.

    பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது.

    அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன.

    அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.'

    • தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும்.
    • தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் செல்வ வளம் பெறலாம்.

    பயம் போக்கும் பைரவர்

    சிவாலயங்களில் நீங்கள் சன்னதியை சுற்றி வரும் போது வட கிழக்குப் பகுதியில் பைரவர் வீற்றிருப்பதைப் பார்த்து இருப்பீர்கள்.

    சிவபெருமானின் முக்கிய அம்சமான இவரை ஒவ்வொருவரும் அவசியம் வழிபட வேண்டும்.

    ஏனெனில் பைரவரை மனம் உருகி வழிபடாவிட்டால், நீங்கள் சிவாலயத்துக்கு சென்று வழிபட்டதற்கான நோக்கமே பயன் தராமல் போய்விடக் கூடும்.

    அந்த அளவுக்கு பைரவர் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தவர். பைரவர் என்றால் நம் பயம், துன்பம், துயரம் எல்லாவற்றையும் போக்கி நம்மை காப்பவர் என்று பொருள்.

    வாழ்வில் உங்களுக்கு எப்போதாவது இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்... மனம் கலங்காமல், நம்பிக்கையுடன் "பைரவா... காப்பாற்று'' என்று அழைத்துப் பாருங்கள், காகம் விரட்டும் போது கோழி தன் குஞ்சுகளை எப்படி தன் இறக்கைக்குள் வைத்து காப்பாற்றுகிறதோ, அப்படி ஓடோடி வந்து பைரவர் உங்களை காப்பாற்றுவர்.

    பைரவரை நீங்கள் தொடர்ந்து தினமும் வணங்கினால், நவக்கிரக தோஷங்கள் விலகி, தீவினைகள் அழிந்து, பிறவிப் பயனை உணர்ந்து, சுப மங்களமாக, தலைகுனியா வாழ்க்கையை நிச்சயம் வாழ்வீர்கள்.

    8 மற்றும் 64 என்ற எண்ணிக்கையில் பல கோலங்களில் பைரவர் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். பைரவருக்கு சந்தன காப்பு அபிஷேகம் செய்து வழிபடுவது மிக, மிக பிடிக்கும்.

    தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, சந்தன மாலை அணிவித்து சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், தேன், அவல் பாயசம் மற்றும் பழ வகைகளை படைத்து பைரவரை வழிபட்டால் நாம் விரும்பியதை எல்லாம் பைரவர் தருவார்.

    தினமும் பைரவர் காயத்ரியை சொல்லி வந்தால் செல்வம் பெருகும். இது நிதர்சனமான உண்மை.

    செல்வத்தை நமக்கு வாரி வழங்கும் அஷ்ட லட்சுமிகள், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு தங்களது செல்வவள சக்தியை மேம்படுத்தி கொள்கிறார்கள்.

    எனவே நாமும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவரை வழிபட்டால் மங்காத செல்வ வளத்தை பெறலாம் என்பது ஐதீகமாகும்.

    தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி செவ்வாய் தோறும் பைரவரை வழிபட்டு வந்தால் உங்கள் வாழ்வு சிறக்கும்.

    • பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
    • பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் கால பைரவர் சன்னதி இருக்கிறது.

    இவரது சிலையை திருவாசியுடன் ஒரே கல்லில் வடித்திருக்கின்றனர்.

    எட்டு கைகளில் ஆயுதங்கள் ஏந்தி, கபால மாலையுடன் காட்சி தருகிறார்.

    தலையில் பிறைச்சந்திரன் இருக்கிறது.

    ஆணவ குணம் நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    பிரம்ம லிங்கம் என்ற பெயரில் சிவன், இங்கு தனி சன்னதியில் காட்சி தருகிறார்.

    பிரம்மா, இங்கு சிவனை வழிபட்டதன் அடிப்படையில் இந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.

    பிரம்மா, தனது நான்கு முகங்களுடன் எப்போதும் வேதத்தை ஓதிக் கொண்டிருப்பவர்.

    இதை உணர்த்தும் விதமாக இந்த லிங்கத்தின் நான்கு பக்கங்களிலும், நான்கு முகங்கள் உள்ளன.

    மாணவர்கள் படிப்பில் சிறந்து திகழ, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

    • போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும்.
    • பைரவர் படத்தை வீட்டில் வடக்குப்புறம் வைத்தால் & வாஸ்து தோஷத்தினால் வரக்கூடிய பீடை அகலும்

    குலதெய்வ கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால்

    தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய

    நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள்.

    இதற்குப் பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை நாடியில் கூறியுள்ளனர்.

    அந்த வகையில், அகத்தியர், ''சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா & பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதிச் சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே'' என்கிறார்.

    பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோவில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார்.

    ''அஞ்சருவிச் சலத்தருகு யடுத்தே வரகலூராம் & காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டைச் செங்கனூராம் முழு மண்டலமே. தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே'' என்கிறார்.

    இப்பாடலின் பொருள்:

    குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள்.

    காரைக்குடியில் பைரவர். சோழபுரத்தில் பைரவச்சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர்.

    திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி.

    திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர்.

    அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.

    வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.

    பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது. செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.

    போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும்.

    பைரவர் படத்தை வீட்டில் வடக்குப்புறம் வைத்தால் & வாஸ்து தோஷத்தினால் வரக்கூடிய பீடை அகலும் என்கிறார். காக புஜண்டர்:

    • சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது.
    • சிறப்புப் பூஜைகள் செய்வதால் சனிதோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.

    ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு.

    இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார்.

    சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. காலபைரவர் பாம்போப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.

    பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது.

    எதிரிகள் அழிவர். பில்லி சூன்யம், திருஷ்டி அகலம். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. எமபயம் தவிர்க்கப்படும்.

    பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும்.

    சிறப்புப் பூஜைகள் செய்வதால் சனிதோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.

    ×