search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    தோஷம் போக்கும்  பைரவர் வழிபாடு
    X

    தோஷம் போக்கும் பைரவர் வழிபாடு

    • சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது.
    • சிறப்புப் பூஜைகள் செய்வதால் சனிதோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.

    ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். அந்த வகையில் ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு பெயர் உண்டு.

    இதில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.ஒவ்வொரு சிவன் கோவிலிலும் வடகிழக்குப் பகுதியில் தனிச்சந்நிதியில் காலபைரவர் எழுந்தருளி இருப்பார்.

    சில கோவில்களில் சூரியன், பைரவர், சனி பகவான் என்ற வரிசையில் காட்சி தருவதும் உண்டு. காலபைரவர் பாம்போப் பூணுலாகக் கொண்டு, சந்திரனை சிரசில் வைத்து, சூலம், மழு, பாசம், தண்டம் ஏந்தி காட்சி தருவார்.

    பைரவரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லப்படுவதால் சனியின் தொந்தரவு இருக்காது.

    எதிரிகள் அழிவர். பில்லி சூன்யம், திருஷ்டி அகலம். அக்கம் பக்கத்தவர்களின் தொந்தரவு இருக்காது. எமபயம் தவிர்க்கப்படும்.

    பொதுவாக சிவாலயங்களில் காணப்படும் கால பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அவர் அருள் நிச்சயம் கிட்டும்.

    சிறப்புப் பூஜைகள் செய்வதால் சனிதோஷ நிவர்த்திகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.

    Next Story
    ×