search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருங்கைகீரை"

    • முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
    • முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.

    முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

    முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் வல்லது. முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

    சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

    ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

    குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. இது நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

    முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் 'சி' கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

    • மேட்டூர், கொளத்தூர் , மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் பல ஏக்கர் பரப்பளவில் முருங்கை மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • ஒரு கட்டு முருங்கைகீரை ரூ.15-க்கு விற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வீரபாண்டி, மகுடஞ்சாவடி, மாவேலிபாளையம், சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் முருங்கை மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதைத்தவிர மேட்டூர், கொளத்தூர் , மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் முருங்கை மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து முருங்கை கீரை அறுவடை செய்து, அதனை வியாபாரிகள் சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள், தினசரி சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    தற்போது முருங்கை கீரை வரத்து அதிகரித்துள்ளது. ஒரு கட்டு முருங்கைகீரை ரூ.15-க்கு விற்கப்படுகிறது. அதிக எண்ணிக்கை கொண்ட ஒரு கீரை கட்டு ரூ.20 வரை விற்கப்படுகிறது. 

    ×