search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்"

    • சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
    • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    வாழை இலையை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? வாழை இலையில் தொடர்ந்து உணவு உண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.

    நம் பாரம்பரியத்தோடு நெருங்கிய தொடர்புடையது வாழை இலை. விருந்துகள், விழாக்கள், திருமணம் உள்ளிட்ட வைபவங்களில் இதில் உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடு.

    வாழை இலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடைய செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

    தெய்வீக மரமாக கருதப்படும் வாழை மரத்தின் இலையில் விருந்தோம்பல் செய்வது, தமிழர்களில் பாரம்பரிய கலாச்சாரமாகும். அதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

    * ஆரோக்கியமான உணவுகளை வாழை இலையில் சாப்பிட்டு வந்தால் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழலாம்.

    * வாழை இலையில் உள்ள குளோரோபில் அல்சர் மற்றும் தோல் நோய்கள் வருவதைத் தடுக்கும். தோல் ஆரோக்கியம் காக்கவும் உதவும்.

    * ரத்தத்தை சுத்திகரிக்கும்.

    * சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கும். சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களுக்கு நல்ல தீர்வு தரும்.

    * நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உணவை எளிதில் செரிக்க உதவும்

    * சமச்சீர் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

    * காலை உணவை ஒருபோதும் தவிர்க்க கூடாது.

    * காலை உணவில் ஒரு பழம் அல்லது காய்கறிகளை சேர்க்க வேண்டும்.

    * நார்ச்சத்துள்ள பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

    * பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * செயற்கை இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.

    * புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ×