search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருங்காயம்"

    • அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு.
    • வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம்.

    பெருங்காய பொடியை கடைகளில் வாங்கி பயன்படுத்தாமல் வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதன் மூலம் அதன் வாசனை வலுவாக இருப்பதை பார்க்கலாம். பெருங்காயத்தூள் என்று வாங்கும் சில தயாரிப்புகள் கலப்படமாக இருக்கலாம். நறுமணம் குறைந்து இருக்கலாம். வீட்டில் பெருங்காயத்தூள் தயாரித்து பயன்படுத்தும் போது அதன் நறுமணம் நன்றாக இருக்கும்.

    கலப்படமில்லாத ஆரோக்கியமான தயாரிப்பை வீட்டிலேயே செய்ய முடியும் என்னும் போது செய்முறையை கற்றுகொள்வது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெருங்காய பொடியை வீட்டில் எப்படி தயாரிப்பது என்பதை இப்போது பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கட்டி பெருங்காயம் - 100 கிராம் ( நாட்டு மருந்துகடை அல்லது மளிகை கடைகளில் கிடைக்கும்)

    உப்பு - கால் டீஸ்பூன்

    செய்முறை:

    பாக்கெட்டில் வாங்க கூடிய இந்த கட்டி பெருங்காயம் சில நேரங்களில் மென்மையாக இருக்கும். சில நேரங்களில் கடினமாக இருக்கும். இதை பிரிப்பது கடினமாக இருக்கும். மென்மையாக இருந்தால் சிறு சிறு பகுதியாக பிரித்து வையுங்கள். கடினமாக இருந்தால் உரலில் இட்டு துண்டுகளாக இடித்துக் கொள்ளுங்கள்.

    இரும்பு வாணலில் மிதமான தீயில் இதை வைத்து லேசாக வறுத்து பெருங்காயம் பொரிந்து நிறம் மாறும். லேசான மஞ்சள் நிறமாக, அதன் மேல் வெள்ளை புள்ளிகளாய் (நன்றாக பொரிய வேண்டும்) வரும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

    பெருங்காயத்தை கட்டியாக அப்படியே வாணலியில் சேர்த்தும் சூடு செய்யலாம். பிறகு இறக்கி அதை துண்டுகளாக பிரிக்கலாம். நன்றாக பொரிந்த காயத்துண்டுகளை இப்போது இறக்கி ஆறவையுங்கள். வாணலியில் உப்பு சேர்த்து லேசாக வறுக்கவும்.

    பிறகு இந்த பெருங்காயத் துண்டுகளை சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். அதன்பிறகு மிக்சியில் நைசாக அரைத்து பொடியாக்கி காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.

    பெருங்காயத்தின் பயன்கள்:

    மசாலாக்கள் நிறைந்த உணவுகள் அனைத்திலும் பெருங்காயம் சிட்டிகை சேர்ப்பது மணத்தை அதிகரிக்க செய்யும். பெருங்காயம் கடவுளின் அமிர்தம் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் இவை உணவை அமிர்தமாக்கும் வல்லமை கொண்டவை. ஆரோக்கியம் அளிப்பவை.

    அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. வாயுவை உண்டாக்கும் உணவுகளில் கண்டிப்பாக பெருங்காயம் சேர்க்க வேண்டும். வாயு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் கலந்து குடிக்கலாம். உடனே நிவாரணம் கிடைக்கும்.

    வாழைப்பழத்தை தோல் உரித்து பழத்தின் மேல் பெருங்காய பொடியை வைத்து பல்லில் படாமல் விழுங்கினால் வாயு கழியும் என்பார்கள் வீட்டு பெரியவர்கள். மோரில் பெருங்காயம் சேர்த்தும் குடிக்கலாம். அன்றாட உணவு முறையில் ஏதாவது ஒரு வகையில் பெருங்காயம் சேர்ப்பது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும்.

    • வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும்போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
    • பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும்.

    பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்த பெருங்காயத்தை 'கடவுளின் அமிர்தம்' என்பார்கள். இது சிவப்பு நிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த பயன்படும் 'சனாமிர்' மருந்து போல பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மையை கொண்டது என தைவான் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.

    தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டு பருகினால் உடல் குளிர்ச்சியாகும். 'லாக்டோபேசில்லஸ்' என்னும் நல்ல நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமிகளும் ஓடிவிடும்.

    வாயுவை அதிகரிக்கக் கூடிய வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும்போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

    நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர்பின் பகுதியிலும் வாயு வலி வந்து இதய வலியோ என பயமுறுத்தும் நோய்க்கு பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு 2 பங்கு, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளி கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரைகளாக்கி காலை, மாலை என 7 நாட்கள் சாப்பிட்டால் வாயுக்குத்து நீங்கும். ஆனால் அது ஜீரணம் தொடர்பாக வந்த வலியா என உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.

    'இரிடபிள் பவுல் சிண்ட்ரோம்' என்னும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாக போகும் குடல் அழற்சி நோய்க்கும் பெருங்காயம் பலன் தரும்.

    பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும். துடிப்பை உண்டாக்கிப் பெண் இச்சைக் கிளர்ச்சியை உண்டாக்கும்.

    கக்குவான் நோய்க்கு இதை நீர் விட்டு அரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

    பிறந்த குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் என்னும் நோய்க்கு பால் பெருங்காயத்தை உரசி தாயின் மார்பில் தடவி குழந்தையை பால் உண்ணும்படி செய்தால் நோய் நீங்கும்.

    ×