search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயன்பெற"

    • பழமர செடிகள் மானிய விலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக வழங்கப்படுகிறது.
    • தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ போன்றவற்றினை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

    குண்டடம்

    குண்டடம் வட்டார பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறுவதற்காக பழமர செடிகள் மானிய விலையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ச.சசிகலா தெரிவித்துள்ளதாவது:-

    நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக 5 வகையான பழமரச் செடிகளான மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி மற்றும் எலுமிச்சை போன்றவை அடங்கிய தொகுப்பானது 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ.200, மானிய விலையில் ரூ.50-க்கு 5 வகை பழ மர செடிகள் அடங்கிய தொகுப்பினை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.

    கிராமம் ஒன்றிற்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் மூலமாக 176 எண்களும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 எண்களும் வழங்கப்படும். 2023- 24 நிதியாண்டில் குண்டடம் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களான பெரியகுமாரபாளையம், கண்ணாங்கோவில், செங்கோடம்பாளையம் மற்றும் பெல்லம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு 80 சதவீத தொகுப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். மீதம் உள்ள 20 சதவீத தொகுப்புகளை மற்ற கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்கும் இத்தகைய பழமரச்செடிகளை அனைவரும் பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்களது விபரங்களை www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ போன்றவற்றினை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர் ரத்தின பாரதி 9488928722, உதவி தோட்டக்கலை அலுவலர் சிவமூர்த்தி 9750327875, மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் அபிராமி 6385536512 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    • உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை 50சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) ராஜ கோபால், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் உடனடி தேவையை பூர்த்தி செய்யவும், அவர்களின் வருமானத்தை உயர்த்தவும், பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய மாநில வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற புதிய திட்டத்தினை இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு, வேளாண்மை – உழவர் நலத்துறை யால் அறிமுகப்ப டுத்தப்பட்டுள்ளது. தென்னை வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தென்னையில் காய்ப்புத்தி றனை அதி கரிக்கவும், எண்ணெய் சத்தை உயர்த்தவும், குரும்பை உதிர்வைத் குறைக்கவும், தென்னை நுண்ணூட்டம், பசுந்தாள் உரப் பயிர் விதை, உயிர் உரங்கள், போராக்ஸ் ஆகியவை 50 சதவீதம் மானியத்திலும், ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி, உயிரியியல் கட்டுப்பாட்டு காரணிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் ஆகியவை 50சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மேலும் தென்னையில் நிலக்கடலை மற்றும் பயறுவகைப் பயிர்கள் ஊடுபயிர்சாகுபடி குறித்த செயல் விளக்கதிடல் அமைக்கவும் மானியம் வழங்கப்பட உள்ளது.

    தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் தென்னை வருமானத்தை உயர்த்தி கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×