search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு வாசலை அழகுபடுத்துங்கள்"

    • தெய்வ சிலைகளை வாசலில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
    • வீட்டின் வாசலில் சூரிய வெளிச்சம் நன்றாக பட வேண்டும்.

    வீட்டு வாசலை சுத்தமாகவும், அலங்கரித்தும் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள் நுழையும். இது அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு நற்பலன்களையும், செல்வச்செழிப்பையும் கொடுக்கும். வாசல் கதவை மாவிலை தோரணங்கள், அலங்காரப்பொருட்கள் கொண்டு அலங்கரியுங்கள். தெய்வ சிலைகளை வீட்டு வாசலில் வைத்து அலங்கரிப்பது, நேர்மறை ஆற்றலை அதிகரித்து அதிர்ஷ்டத்தை அளிக்கும்.

    வாசலின் அருகில் கண்ணாடி பவுலில் தண்ணீர் நிரப்பி அதில் மலர்களை மிதக்க விடுவதும், வாஸ்து சாஸ்திரத்தின்படி நன்மை தரும் விஷயமாகும். வீட்டின் வாசல் எப்போதும் நல்ல வெளிச்சத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். காலை வேளையில் வீட்டின் வாசலில் சூரிய வெளிச்சம் நன்றாக பட வேண்டும்.

    மாலை வேளையில் நுழைவு வாயிலில் நல்ல வெளிச்சம் இருக்குமாறு விளக்குகளை பொருத்துங்கள். மணி பிளான்ட் போன்ற அதிர்ஷ்டத்தை வரவழைப்பதாக நம்பப்படும் செடிகளை வீட்டின் முன்பக்க கதவுக்கு அருகில் வளர்க்கலாம். உடைந்த பொருட்கள், குப்பைக்கூடைகள், செருப்புகளை அடுக்கி வைக்கும் ரேக்குகள் ஆகியவற்றை வீட்டு வாசலுக்கு முன்பாக வைப்பதை தவிருங்கள்.

    ×