search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Butter"

    • நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது.
    • மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    இந்த ஆண்டு தற்போது குளிர் சீசன் துவங்கியுள்ளதால், நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், கும்பாபிசேகத்திற்குப் பிறகு, முதல் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை சுமார் 5 மணிக்கு ெதாடங்கி இரவு 8 மணி வரை, சுமார் 120 கிலோ வெண்ணெய் மூலம் சுவாமியின் உடல் முழுவதும் அலங்காரம் செய்து வெண்ணெய்க்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.
    • எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    வெங்கடா சலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் பெருமாளே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

    • வீட்டில் அலுத்து போன சமையலுக்கு டா டா சொல்லுங்க.
    • குடும்பத்தினருக்கும் ரொம்பவே பிடிக்கும்.

    வீட்டில் அலுத்து போன சமையலுக்கு டா டா சொல்லுங்க. சப்பாத்தி செய்ற நேரத்தை விட கம்மியான நேரத்தில் சூப்பரான கார்லிக் பட்டர் குல்ச்சா செய்யலாம். கொஞ்சம் வித்தியாசமாகவும் இருக்கும். உங்கள் குடும்பத்தினருக்கும் ரொம்பவே பிடிக்கும். இதற்காக தனியாக பொருட்கள் எதுவும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் தினசரி சமையல் பொருட்களே போதும் எளிதாக செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா - 1 கப்

    ஓமம்- ஒரு சிட்டிகை

    ஆரிகேனோ- ஒரு சிட்டிகை

    பூண்டு- துருவியது 3 பல்

    பால் - 1/2 கப்

    சர்க்கரை - 1 ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 2 ஸ்பூன்

    பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன்

    வெண்ணெய் - தேவைக்கேற்ப.

    கொத்தமல்லி தழை

    செய்முறை:

    முதலில் குல்ச்சாவுக்கு மாவு தயார் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் துருவிய பூண்டு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி தழைகள், ஒரு சிட்டிகை ஓமம், ஆரிகேனோ, பால், சர்க்கரை, உப்பு ஒரு சிட்டிகை மற்றும் எண்ணெய், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை 30 நிமிடம் காத்து புகாத அளவிற்கு துணிபோட்டு மூடி வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து மாவு நன்றாக ஊறியதும் அதனை உங்களுக்கு ஏற்ற அளவுக்கு எடுத்து உருட்டி, சப்பாத்தி போல தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடேற்றி குல்ச்சாவை போடவும். அதன் மீது வெண்ணெய் தடவி திருப்பி போடவும். இதேபோன்று அனைத்தையும் போட்டு எடுக்க வேண்டும். சூடான கிரேவியை சேர்த்து சாப்பிடும் போது சூப்பரா இருக்கும். இவ்ளோ தான் சிம்பிளான பட்டர் குல்ச்சா தயார். குடும்பத்திற்கு செய்து கொடுத்து சாப்பிட்டு மகிழுங்கள்.

    • ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர்.
    • சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர்.

    புத்தி, பலம், புகழ், உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்குவன்மை, நோயற்ற வாழ்வும், சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவார். நவக்கிரஹங்களும் ஆஞ்சநேயரின் வாலில் ஆவாஹனம் ஆகி உள்ளார்.

    நவகிரஹ தோசங்கள பில்லி சூன்யங்கள் செய்வினை கோளாறுகள் ஆகிய தோஷங்களையும் தீர்ப்பவர். குழந்தை பேறு இல்லாமை தீராத வியாதி திருமணத்தடை மேலதிகாரிகள் தொல்லை குடும்ப வாழ்க்கை பதவி உயர்வு மற்றும் ஏவல் பேய் பிடித்தவர்களுக்கு நிவர்த்தியும் உண்டாகும்.

    ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பழம், தேங்காய், தயிர்சாதம், வெண்ணெய், உளுந்துவடை நிவேத்தியம் செய்யலாம். பசுநெய் தீபம் ஏற்றலாம். துளசிமாலை ஸ்ரீ ராம நாம வடைமாலை பழ மாலைகள் பவள மல்லி மாலைகள், வெற்றிலை மாலை சாத்துபடி செய்யலாம்.

    யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவர் ஸ்ரீராமதூதர். ஆயிரம் யோசனை தூரம் கடலைத் தாண்டியவர் அஞ்சனாகுமாரர். சிரசை வாயில் புகுந்து வெளியே வந்தவர். மைநாக மலையினால் கௌரவிக்கப்பட்டவர். சமுத்திராஜனால் ஆதரிக்கப்பட்டவர்.

    நிழல் இழுக்கும் சிம்ஹீயைக் கொன்றவர் கையினால் அடித்தே லங்கினியை வீழ்த்தியவர். அசோகவனத்தை அழித்தவர். ராவணணை புல்லுக்கு சமமாக நினைத்தவர். வாலில் வைத்த தீயினால் இலங்கையை அழித்தவர். லஷ்மணரை காப்பாற்ற நிமிடத்தில் சஞ்சீவி மலையை கொண்டு வந்த மகாத்மாவான ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை சேவிப்போம். நமது இடர்களை களைந்து சகல மேன்மைகளையும் பெறுலாம்.

    • பங்குனி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தங்க கருடா வாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந்தேதியும் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து, விழாவில் தங்க சூரிய பிரபை 20-ந்தேதியும், தங்க கருடா வாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந்தேதியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இதில் நவநீத கோலத்தில் காட்சியளித்த ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணெய் அடித்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கி ழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இது தவிர கட்டளைதாரர்கள் மூலம் தினசரி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை பனிக்காலத்தில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் (2023) முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது.

    120 கிலோ வெண்ணை கொண்டு, சுவாமியின் உடல் முழுவதும் பூசி, பல வண்ணங்களால் அலங்காரம் செய்தனர். 3 மணி நேரத்துக்கு மேலாக ஆஞ்சநேயருக்கு இந்த அலங்காரம் நடைபெற்றது. அலங்காரம் முடிந்த பின்னர் திரை விலக்கப்பட்டு சுவாமிக்குத் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 8-ந்தேதி) தினந்தோறும் இரவு 7 மணிக்கு மேல் கட்டளைத்தாரர்களால் செய்யப்படுகிறது.

    • பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார்.
    • திருமணமான தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.சத்யபாமா பூமாதேவி அம்சம் ஆகும். ருக்மணி லெட்சுமி அம்சம் ஆகும்.

    பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார். அதனை லெட்சுமி தேவி பகவானிடம் சமர்ப்பித்தது பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தருகிறார்.

    இதனை உணர்த்தும் வண்ணம் நவநீத கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு இன்று வெகுவிமரிசையாக நடந்தது. காலை பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    இன்று மாலை 6மணிக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு ஆராதனை, தீபாராதனை நடைபெறுகிறது.

    இக்கோயிலில் பக்தர்கள் ஐந்து தீபமேற்றி 5முறை வலம் வந்து நவநீதகிருஷ்ணரை வழிபாடு செய்கிறார்கள்.தொடர்ந்து ரோகிணி நட்சத்திரத்தில் நவநீதகிருஷ்ணனை வழிப்பட்டால் குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.திருமண தோஷங்கள் நீங்கும்.

    கலியுக உபாதைகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் பல்லாண்டுகளாக குருவாயூர் போன்று துலாபாரம் நடைபெற்று வருகிறது.

    திருமணம் ஆன தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் 5 வயதுக்குள் துலாபாரம் ஆக வெண்ணெய் மற்றும் வாழைப்பழங்கள், வெல்லம், கல்கண்டு என விரும்பும் பொருட்களை கொண்டு துலாபாரம் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருவது தனிச்சிறப்பு ஆகும்.

    கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    ×