search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
    X

    ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக நவநீதகிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

    நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு

    • பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார்.
    • திருமணமான தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.சத்யபாமா பூமாதேவி அம்சம் ஆகும். ருக்மணி லெட்சுமி அம்சம் ஆகும்.

    பூமாதேவி பூலோகத்தில் உள்ள மக்களின் பிரார்த்தனைகளை வானத்தில் உள்ள லெட்சுமி தேவியிடம் எடுத்துரைக்கிறார். அதனை லெட்சுமி தேவி பகவானிடம் சமர்ப்பித்தது பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றி தருகிறார்.

    இதனை உணர்த்தும் வண்ணம் நவநீத கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக காட்சி அளிக்கிறார் என்பது ஐதீகம்.

    இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு இன்று வெகுவிமரிசையாக நடந்தது. காலை பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    இன்று மாலை 6மணிக்கு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு ஆராதனை, தீபாராதனை நடைபெறுகிறது.

    இக்கோயிலில் பக்தர்கள் ஐந்து தீபமேற்றி 5முறை வலம் வந்து நவநீதகிருஷ்ணரை வழிபாடு செய்கிறார்கள்.தொடர்ந்து ரோகிணி நட்சத்திரத்தில் நவநீதகிருஷ்ணனை வழிப்பட்டால் குழந்தை பேறு கிட்டும் என்பது ஐதீகம்.திருமண தோஷங்கள் நீங்கும்.

    கலியுக உபாதைகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயிலில் பல்லாண்டுகளாக குருவாயூர் போன்று துலாபாரம் நடைபெற்று வருகிறது.

    திருமணம் ஆன தம்பதியர்கள் நவநீதகிருஷ்ணனிடம் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனைகள் செய்கிறார்கள்.

    குழந்தை பிறந்தவுடன் 5 வயதுக்குள் துலாபாரம் ஆக வெண்ணெய் மற்றும் வாழைப்பழங்கள், வெல்லம், கல்கண்டு என விரும்பும் பொருட்களை கொண்டு துலாபாரம் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருவது தனிச்சிறப்பு ஆகும்.

    கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா, கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×