search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elegance"

    • சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர்.
    • கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மால கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் உள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி இந்த கோவிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3 நாள் தமிழர் திருவிழா கொண்டாடப்படும்.

    கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் செல்வம் பெருகவும் கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    நேற்று முன்தினம் கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர். நேற்று காலை கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் உள்ள நந்தி சிலை முன்பு உருவார பொம்மைகள் மலை போல் குவிந்தன. மேலும் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கினர். சலகருது ஆட்டம், தேவராட்டம் நடந்தது.

    விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார்.
    • சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுத பூஜை, நவராத்திரி விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் தங்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

    கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பாக அமர்ந்தனர்.

    அப்போது ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார். பின்னர் கோவில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.

    அதனைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமியை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • நினைத்த காரியத்தை நிறைவேற்றித்தர சாக்கு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல்நாயக் கன்பட்டி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரியமல் லம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு தினமும் விஷேச பூஜை மற்றும் அபி–ஷேகம், அலங்காரம் நடை–பெற்று வந்தது.

    பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். விழா–வின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் இரவு முதல் காலை வரை 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய, விடிய நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பெண், ஆண் பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்து வந்தனர்.

    மேலும் 21 சட்டி, ஆயிரம் கண் பானை மற்றும் பால்கு–டம் போன்ற நேர்த்திக்கடன் களை செலுத்தினர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் உடல் முழுவதும் அடையாளம் தெரியாத அளவில் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு, கோவிலில் இருந்து மேள தாளத்துடன் நடனமாடி ஊரை நகர் வலம் வந்து கரியமல்லம்மனை வழிபட்ட–னர்.

    நேற்று மாலை முளைப் பாரி ஊர்வலம் நடைபெற் றது. வாண வேடிக்கை, மேளதாளத்துடன் நடை–பெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து சென்றனர். இதில் பக்தர்கள் உடல் முழுவதும் வைக்கோலை வைத்து, சாக்கு ஆடை அணிந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இவ்வாறு சாக்கு வேடம் அணிவதால் நினைத்த காரி–யத்தை கரியமல்லம்மன் நிறைவேற்றி தருவதாக தங்களது நம்பிக்கை என்று கூறினர். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட முளைப்பாரி அப்பகுதியில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட் டது.

    இந்த திருவிழாவில் தமிழ–கத்தின் பல்வேறு பகுதியிலி–ருந்து 2000-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டு கரியமல்லம்மனை வழிபட்ட–னர். விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • தேவகோட்டை முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவ விழா நடந்தது.
    • கோவில் முன்பு பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேத்து கடனை செலுத்தினர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை அருணகிரிபட்டினம் பகுதியில் மிகப் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் ஆடி உற்சவ விழா நடைபெறுவது வழக்கம் கடந்த கொரோனா காலகட்டத்தில் திருவிழாக்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இரு பிரிவினர் இடையே கருத்து வேறுபாடுகளால் திருவிழா தடைபட்டது. இந்த ஆண்டு ஆடி உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. காப்பு கட்டிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகமும் நடைபெற்றது. 31ந்தேதி சுமார் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பூச்சொரிதல் விழாவும் நேற்று இரவு சக்தி கரகம் எடுத்தல் நடைபெற்று சக்தி கரகம் வீதி உலா வந்தடைந்தது.

    ஆடி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பால்குடம், தீச்சட்டி, வேல் குத்துதல் போன்ற சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கருதாவூரணி விநாயகர் கோவிலில் இருந்து செங்கக்கோவிலார் வீதி, கண்டதேவி ரோடு போன்ற முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து கோவில் முன்பாக பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் நேத்து கடனை செலுத்தினர்.

    • பூக்குழி திருவிழாவில் 5 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்-தென்காசி ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 24-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.

    முதல் நாள் திருவிழா சிங்கராஜாகோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 2-ம் நாள் திருவிழா சக்கராஜா கோட்டை ராஜுக்கள் சமூகத்தார் சார்பிலும், 3-ம் நாள் திருவிழா பிள்ளைமார் சமூகத்தார் சார்பிலும், 4-ம் நாள் திருவிழா புதுப்பாளை யம் ஆசாரியர்கள் சமூகத் தார் சார்பிலும், 5-ம் நாள் திருவிழா பூபால்ராஜாபட்டி ஆசாரியர்கள் சமூகத்தார் சார்பிலும், 6-ம் நாள் திருவிழா மடத்துப்பட்டி தெலுங்கு செட்டியார்கள் சமூகத்தார் சார்பிலும் நடந்தது.

    7-ம் நாள் திருவிழா புதுப்பாளையம் தேவர்கள் சமூகத்தார் ஆண்டதம்மன் கோவில் தெரு நாட்டாமை சார்பிலும், 8-ம் நாள் திருவிழா துரைச்சாமிபுரம் வணிக வைசியர்கள் சமூகத்தார் சார்பிலும், 9-ம் நாள் திருவிழா சாலியர்கள் சமூகத்தார் சார்பிலும் நடைபெற்றது.

    அம்மன் பொட்டி பல்லக்கு, கண்ணாடி சப்பரம், பூதவாகனம், தண்டியல் கண்ணாடி சப்பரம், பூ சப்பரம் போன்ற சப்பரங்க ளில் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலித்தார். 10-ம் திருவிழாவில் நாராயண ராஜா வகையறாக்கள் சார்பில் மேற்படியாளர்கள் மஞ்சள் பட்டு, சாலியர்கள் மஞ்சள் பட்டுடன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    காப்பு கட்டிய குழந்தைகள் பெண்கள் உள்பட 5080 பக்தர்கள் அணிவகுத்து வந்து தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினார்கள். பின்னர் அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது.

    விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ரவி ராஜா தலைமையில் அறங்காவலர் குழுவினர் ரமேஷ்ராஜா, ராமராஜ் ராஜா, ஜெயக் குமார்ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் செய்தி ருந்தனர். டி.எஸ்.பி. பிரீத்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கடந்த 14-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை தீமிதி தெப்பத் திருவிழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித்தல் நடைபெற்றது.

    காலை முதலே அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. 500 பக்தர்கள் காவடி எடுத்து கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது.

    அப்போது மகாகா ளியம்மன் மணிமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்புகட்டி கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர்.

    செண்டை மேளம் முழங்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பூக்குழி இறங்கும் வைபவத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றன்பின் ஒருவராக பூக்குழி இறங்கி பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர்.

    அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.

    தீமிதி திருவிழாவில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 64 கிராம மீனவ மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் தீப்பந்தம் பிடித்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்
    • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், நோய் நொடியின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    பொன்னமராவதி:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித்திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. மறுநாள் அக்கினிப்பால்குட விழா நடைபெற்றது. இதன் பின்னர் கடந்த 26ம் தேதி சுவாமிக்கு காப்புக்கட்டப்பட்டது. அன்று முதல் தினசரி மண்டகப்படி தாரர்கள் சார்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், நள்ளிரவு சுவாமி வீதி விழா நடைபெறுகிறது. உற்சவ அம்மன் ரதத்தில் வைத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடைபெறும்.

    அப்போது தீப்பந்தம் பிடிப்பதால் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு திருமணம் ஆகும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும், நோய் நொடியின்றி வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக ரதத்தின் இருபுறமும் தீப்பந்தம் பிடித்து கோவிலை சுற்றி வந்து அம்மனை வழிபாடு செய்தனர்.

    தா.பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மன் வீதி உலாவும், இரவில் அரிச்சந்திரா நாடகமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி அம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஒரு சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்தனர். அப்போது அருகில் இருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷங்களை எழுப்பினர். விழாவில் தா.பழூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    • 8 பட்டறை பத்திரகாளியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
    • பூக்குழி விழாவில் திருமங்கலம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜேடி விஜயன் பூக்குழி இறங்கி தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் 8 பட்டறை பத்திரகாளி முத்து மாரியம்மன் கோவில் கொல்லர்திடலில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவிலில் 25-வது ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த 30-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்றிலிருந்து தினந்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

    மாவிளக்கு எடுத்தல், திருவிளக்கு பூஜை, அக்னிச்சட்டி எடுத்தல் போன்றவை விமரிசையாக நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக 12-ம் நாள் திருவிழாவில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பூக்குழி இறங்கினர். பூக்குழி விழாவில் திருமங்கலம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜேடி விஜயன் பூக்குழி இறங்கி தன்னுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    • பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்து அம்மனை தரிசனம் செய்வர்.
    • அதிகாலையில் நடை திறந்தவுடன் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த புன்னைநல்லூரில் உலக புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து செல்வர். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது. இதனால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய் ,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் ஆவணி மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த நாட்களில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்து அம்மனை தரிசனம் செய்வர்.

    அதன்படி கடந்த ஆவணி மாத முதல் மற்றும் 2-வது ஞாயிற்றுக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் நடை திறப்பதற்கு முன்பே பக்தர்கள் குவிய தொடங்கினர். ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி பாதுகாப்பில் இருந்த போலீசார் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றது. கோவில் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல் நாள் இரவே வந்து கோவிலில் தங்கி இருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று மூலவர் அம்மனுக்கு தாழம்பூ பாவாடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பலர் முடி காணிக்கை, மாவிளக்கு எடுத்தல் பல்வேறு வகையான நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இதைவிட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலக நலன் வேண்டி பால்குடம், பறவை காவடி எடுத்து இலங்கை தமிழர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    உலக நலன் வேண்டியும் உலகத்திலுள்ள தமிழர்கள் நலம் பெற வேண்டியும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மதுரை கப்பலூர் அருகே உள்ள உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றத்தில் இருந்து உச்சப்பட்டி சித்தி விநாயகர் கோவில் வரை பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் 30-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவையொட்டி திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் புனித நீராடி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பக்தர்கள் காவடி அலகு மற்றும் பறவை காவடி எடுத்து திருப்பரங்குன்றம், தனக்கன்குளம், முல்லை நகர் வழியாக உச்சப்பட்டி முகாமில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு விநாயகருக்கு பாலாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    ×