search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "decorum"

    • பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்து அம்மனை தரிசனம் செய்வர்.
    • அதிகாலையில் நடை திறந்தவுடன் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த புன்னைநல்லூரில் உலக புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து செல்வர். இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது. இதனால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய் ,வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். அதிலும் ஆவணி மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த நாட்களில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்து அம்மனை தரிசனம் செய்வர்.

    அதன்படி கடந்த ஆவணி மாத முதல் மற்றும் 2-வது ஞாயிற்றுக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். இன்று ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் நடை திறப்பதற்கு முன்பே பக்தர்கள் குவிய தொடங்கினர். ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர். அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

    அதன்படி பாதுகாப்பில் இருந்த போலீசார் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றது. கோவில் அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் முதல் நாள் இரவே வந்து கோவிலில் தங்கி இருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று மூலவர் அம்மனுக்கு தாழம்பூ பாவாடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பலர் முடி காணிக்கை, மாவிளக்கு எடுத்தல் பல்வேறு வகையான நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டிருப்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இதைவிட கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×