search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பால்குடம், பறவை காவடி எடுத்து இலங்கை தமிழர்கள் நேர்த்திக்கடன்
    X

    பால்குடம், பறவை காவடி எடுத்து இலங்கை தமிழர்கள் நேர்த்திக்கடன்

    • உலக நலன் வேண்டி பால்குடம், பறவை காவடி எடுத்து இலங்கை தமிழர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    உலக நலன் வேண்டியும் உலகத்திலுள்ள தமிழர்கள் நலம் பெற வேண்டியும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று மதுரை கப்பலூர் அருகே உள்ள உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் திருப்பரங்குன்றத்தில் இருந்து உச்சப்பட்டி சித்தி விநாயகர் கோவில் வரை பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் 30-வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவையொட்டி திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் புனித நீராடி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்்த்திக்கடன் செலுத்தினர்.

    தொடர்ந்து பக்தர்கள் காவடி அலகு மற்றும் பறவை காவடி எடுத்து திருப்பரங்குன்றம், தனக்கன்குளம், முல்லை நகர் வழியாக உச்சப்பட்டி முகாமில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு விநாயகருக்கு பாலாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    Next Story
    ×