search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Toy"

    • சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர்.
    • கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சோமவாரப்பட்டியில் மால கோவில் என அழைக்கப்படும் ஆல் கொண்டமால் (கிருஷ்ணன்) கோவில் உள்ளது. பொங்கல் திருநாளை ஒட்டி இந்த கோவிலில் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 3 நாள் தமிழர் திருவிழா கொண்டாடப்படும்.

    கால்நடைகள் நோய் நொடியின்றி வாழவும் செல்வம் பெருகவும் கால்நடைகளின் உருவார பொம்மைகளை நேர்த்திக்கடன் செலுத்தியும், கன்றுகளை தானமாக அளித்தும், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், விவசாயிகள் கொண்டாடுகின்றனர்.

    நேற்று முன்தினம் கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியது. இதில் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோவிலில் குவிந்தனர். நேற்று காலை கிருஷ்ணனுக்கு சிறப்பு அலங்காரம், பாலாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நேர்த்திக்கடனாக கால்நடைகளின் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தினர். இதனால் கோவிலில் உள்ள நந்தி சிலை முன்பு உருவார பொம்மைகள் மலை போல் குவிந்தன. மேலும் சில விவசாயிகள் ஆடு, மாடுகளை கோவிலுக்கு தானமாக வழங்கினர். சலகருது ஆட்டம், தேவராட்டம் நடந்தது.

    விழா இன்றுடன் நிறைவு பெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அமரநாதன், செயல் அலுவலர் ராமசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது
    • விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்த மொய்தீன் என்பவரது நடத்தை சந்தேகப்படும் வகையில் இருந்தது. அவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனைத்தொடர்ந்து அவரது உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள், கார்கள் போன்றவற்றை அவர் வைத்திருந்தார். அவற்றை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதில், சுருள் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தியது தெரிய வந்தது. ரூ.18.79 லட்சம் மதிப்பிலான 352.40 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    • குழந்தைகள் ரெயில் மற்றும் இசை நீரூற்று சேர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.
    • பறவைகள் பூங்கா சிறுவர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலக அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை பயிற்சி பட்டறையை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியரகம் தற்போது தஞ்சையின் பெருமைகளை எடுத்துச் சொல்லும் அருங்காட்சியகமாக கடந்த 14.01.2023 முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் நில அளவை காட்சியரை, சரஸ்வதி மகால் நூலக காட்சியரை, உலோக, கற்சிற்ப காட்சியரை, பொது நிர்வாக காட்சியரை, நடந்தாய் வாழி காவிரி, விவசாய காட்சியரை, சோழர் ஓவிய காட்சியரை, கைத்தறி காட்சியரை, புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள், இசைக்கருவிகள், நிகழ்த்துக்கலை காட்சியரை என மொத்தம் 12 காட்சி அறைகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளது.

    தஞ்சாவூர் அருங்காட்சிய கத்தில் அமைந்துள்ள 7டி திரை அரங்கம் மற்றும் பறவைகள் பூங்கா சிறுவர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. எண்ணற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்தை கண்டு களித்து வருகின்றனர். தஞ்சாவூர் அருங்காட்சி யகத்தில் கடந்த 25.01.23 முதல் 29.01.23 வரை தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு கலை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் குழந்தைகளை மேலும் கவரும் வண்ணம் 14.04.2023 முதல் குழந்தைகள் ரயில் மற்றும் இசை நீரூற்று சேர்க்கப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

    தஞ்சாவூர் அருங்காட்சிய கத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கண்காட்சி மற்றும் பட்டறை கூடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கூடத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றும் கண்காட்சி மற்றும் பல்வேறு பயிற்சி பட்டறை தொடர்ந்து நடத்திட தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மாணவர்க ளுக்கான கைவினைப் பொருள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.

    தஞ்சையின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெற்றது. இன்றைய தலைமுறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வது தான் இப்பயிற்சியின் நோக்கமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் (பொ) உதவி ஆணையர் (கலால்) பழனிவேல், சுற்றுலா அலுவலர் நெல்சன், தாசில்தார் சக்திவேல், பிரபு, கலைச்செல்வி பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இக்கண்காட்ச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலைய வளாகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட கலெக்டர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்துவி ளக்கேற்றி விற்பனையை தொடங்கி வைத்தார் .

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான பூம்புகார் விற்பனை நிலையம் உள்வளாகத்தில் "கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை" தொடங்கப்பட்டுள்ளது.

    முக்கியமான பண்டிகை களில் ஒன்றான நவராத்திரி பண்டிகை அனைவராலும், மிகவும் பக்தியுடனும், மகிழ்வுடனும் கொண்டாடப்படுவதாகும்.

    தமிழ்நாட்டில் இவ்விழா "நவராத்தரி" என்ற பெயரிலும் கர்நாடகத்தில் "தசரா" என்ற பெயரிலும் குஜராத்தில் "தாண்டியா" என்ற பெயரிலும்மேற்கு வங்கத்திலும் வடஇந்தி யாவின் பிறபகுதிகளிலும் "துர்கா பூஜை" என்ற பெயரிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    பூம்புகார் என்ற பெயரில் புகழ்பெற்று விளங்கும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறத்தொழல்கள் வளர்ச்சிக் கழகம், கைவினைஞர்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்த பல்வேறு கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

    இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கொலு பொம்மைகளை வழங்குவதற்காக பூம்புகார் நிறுவனம் ஆண்டுதோறும் "கொலு பொம்மைகள் கண்காட்சி" என்றபெயரில் சிறப்பானதொரு கண்காட்சி யினை நடத்தி வருகிறது.

    இக்கண்காட்சி அடுத்த மாதம் 6-ந் தேதி வரை (ஞாயிறு உட்பட) தினசரி காலை 10 மணி முதல் இரவு 8 மணி முடிய நடைபெற உள்ளது.

    இக்கண்காட்ச்சியில் இடம்பெற்றுள்ள அனைத்து கொலு பொம்மைகளுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அனைத்து கடன் அட்டைகளும் எவ்வித சேவைக்கட்டணமுமின்றி ஏற்று கொள்ளப்படும்.

    இக்கண்காட்சி வாயிலாக ரூ.20 லட்சம் விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது.

    இக்கொலு கண்காட்ச்சி யில் களிமண், காகிதக்கூழ், பளிங்குத்தூள், மரம், கருங்கல், ரேடியம், கொல்கத்தா களிமண் போன்ற பலவகை கைவினைப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்ப ட்டுள்ளன.

    அந்த வகையில் கொலு ப்படி செட், கிரகப்பிரவேச செட், வேதமூர்த்திகள், அஷ்டதிக் பாலகர்கள், அஷ்ட பைரவர்கள், நவகிரகங்கள், அத்திவரதர் நின்ற கோலம், தசாவதாரம் செட், அஷ்டலெட்சுமி செட், விநாயகர் செட், குபேரன் செட், கிரிவலம் செட், திருமலை செட், கோபியர் செட், தர்பார் செட், மைசூர் தசரா செட், கிரிக்கெட் விளையாட்டு செட், சங்கீத மும்மூர்த்திகள் செட், கருட சேவை செட், வைகுண்டம் செட், துர்கா பூஜை செட், அஷ்ட வராகி செட், நவதுர்க்கை செட், பூதகணங்கள், கிருஷ்ணர் விளையாட்டு செட் போன்ற சிறப்பான செட் பொம்மைகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ராஜஸ்தான், கொல்கத்தா, புனே, புதுடெல்லி போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் தருவிக்கப்பட்டு விற்ப னைக்கு வைக்கப்ப ட்டுள்ளன.

    சிறப்பு பொம்மைகளாக கல்கத்தா களிமண் பொம்மை கள், சென்னப்பட்டினா மர பொம்மைகள், ஒட்டிகோப்பா பொம்மைகள், டிரஷிங் டால்ஸ் போன்ற புதிய வகை பொம்மைகளும் விற்பனையில் இடம் பெற்றுள்ளன.

    எனவே தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) மரு.என்.ஓ.சுகபுத்ரா., தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர்சரவணகுமார், பூம்புகார் விற்பனை நிலையம் மேலாளர்சக்தி தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×