search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accomplish"

    • நினைத்த காரியத்தை நிறைவேற்றித்தர சாக்கு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பாம்புல்நாயக் கன்பட்டி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கரியமல் லம்மன் கோவிலில் ஆடி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுடன் தொடங்கியது. அன்று முதல் அம்மனுக்கு தினமும் விஷேச பூஜை மற்றும் அபி–ஷேகம், அலங்காரம் நடை–பெற்று வந்தது.

    பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வந்தனர். விழா–வின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் இரவு முதல் காலை வரை 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விடிய, விடிய நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பெண், ஆண் பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்து வந்தனர்.

    மேலும் 21 சட்டி, ஆயிரம் கண் பானை மற்றும் பால்கு–டம் போன்ற நேர்த்திக்கடன் களை செலுத்தினர். பின்னர் 100-க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் உடல் முழுவதும் அடையாளம் தெரியாத அளவில் களிமண் சேறு பூசி சேத்தாண்டி வேடமிட்டு, கோவிலில் இருந்து மேள தாளத்துடன் நடனமாடி ஊரை நகர் வலம் வந்து கரியமல்லம்மனை வழிபட்ட–னர்.

    நேற்று மாலை முளைப் பாரி ஊர்வலம் நடைபெற் றது. வாண வேடிக்கை, மேளதாளத்துடன் நடை–பெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்து சென்றனர். இதில் பக்தர்கள் உடல் முழுவதும் வைக்கோலை வைத்து, சாக்கு ஆடை அணிந்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இவ்வாறு சாக்கு வேடம் அணிவதால் நினைத்த காரி–யத்தை கரியமல்லம்மன் நிறைவேற்றி தருவதாக தங்களது நம்பிக்கை என்று கூறினர். முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட முளைப்பாரி அப்பகுதியில் உள்ள ஆற்றில் கரைக்கப்பட் டது.

    இந்த திருவிழாவில் தமிழ–கத்தின் பல்வேறு பகுதியிலி–ருந்து 2000-க்கும் மேற் பட்டோர் கலந்துகொண்டு கரியமல்லம்மனை வழிபட்ட–னர். விழாவிற்கான ஏற்பாடு–களை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×