search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தா.பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
    X

    தா.பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

    தா.பழூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்தனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 26-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மன் வீதி உலாவும், இரவில் அரிச்சந்திரா நாடகமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கும் அதிகமான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி அம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஒரு சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீ மிதித்தனர். அப்போது அருகில் இருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி கோஷங்களை எழுப்பினர். விழாவில் தா.பழூர் மற்றும் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×