search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
    X

    பெண் ஒருவர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.

    மகா காளியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

    • பக்தர்கள் ஒருவர்பின் ஒருவராக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி தீமிதி திருவிழா கடந்த 4-ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் வைபவம் நடைபெற்றது.

    அப்போது மகாகா ளியம்மன் மணிமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதனைத் தொடர்ந்து விரதமிருந்து காப்புகட்டி கொண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்கினர்.

    செண்டை மேளம் முழங்க, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பூக்குழி இறங்கும் வைபவத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றன்பின் ஒருவராக பூக்குழி இறங்கி பக்தி பரவசத்துடன் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர்.

    அதன் பின்னர் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காளி அம்மனுக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது.

    தீமிதி திருவிழாவில், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 64 கிராம மீனவ மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×