என் மலர்
உள்ளூர் செய்திகள்

பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் பூஞ்சை பிடித்த 125 கிலோ வெண்ணை அழிப்பு
- ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
- நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் அருகே கோவிந்த அக்ரஹாரம் பகுதியில், ஏ.எம்.எஸ்., மில்க் புராடக்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தரமற்ற முறையில், பால் உற்பத்தி பொருட்கள் மற்றும் நெய் தயாரிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சுகாதாரமற்ற டிரம்களில், 125 கிலோ அளவில் பூஞ்சை பிடித்த நிலையில் வெண்ணை, பட்டர் கிரீம் உள்ளிட்டவைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த அலுவலர்கள், அவற்றை உடனடியாக அழித்தனர். மேலும் அங்கிருந்து, நெய் பாட்டில்கள் மாதிரியை, பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி, நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






