search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Insulation"

    நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கி ழமையன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. இது தவிர கட்டளைதாரர்கள் மூலம் தினசரி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டின் ஜனவரி மாதம் வரை பனிக்காலத்தில் வெண்ணைக்காப்பு அலங்காரம் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டின் (2023) முதல் வெண்ணைக்காப்பு அலங்காரம் நேற்று நடந்தது.

    120 கிலோ வெண்ணை கொண்டு, சுவாமியின் உடல் முழுவதும் பூசி, பல வண்ணங்களால் அலங்காரம் செய்தனர். 3 மணி நேரத்துக்கு மேலாக ஆஞ்சநேயருக்கு இந்த அலங்காரம் நடைபெற்றது. அலங்காரம் முடிந்த பின்னர் திரை விலக்கப்பட்டு சுவாமிக்குத் தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வெண்ணெய் காப்பு அலங்காரம் புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக் கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை (ஜனவரி 8-ந்தேதி) தினந்தோறும் இரவு 7 மணிக்கு மேல் கட்டளைத்தாரர்களால் செய்யப்படுகிறது.

    • மொட்டையரசு திருவிழாவில் தங்க குதிரை வாகனத்தில் தெய்வானையுடன், முருகப்பெருமான் எழுந்தருளினார்.
    • காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 3-ந் தேதி வசந்த உற்சவ திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி தினமும் இரவு முருகப்பெருமான் தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி, அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மீண்டும் உற்சவர் சன்னதிக்கு வந்தடைவார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வைகாசி விசாக திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம், காவடி, பறவைக்காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்து திருப்பரங்குன்றம் சண்முகர், வள்ளி, தெய்வா னைக்கு பாலா பிஷேகம் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக மொட்டை யரசு திருவிழா இன்று நடந்தது. காலையில் உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    சிறப்பு அலங்காரத்தில் முருகன்,தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். கோவிலில் இருந்து புறப்பட்டு முருகப்பெருமான் பல்வேறு மண்டபங்களில் திருக்கண் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மொட்டையரசு திடலில் எழுந்தருளிய முருகப்பெருமான் அங்கு ஒவ்வொரு மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மாலை வரை மொட்டை அரசு திடலில் இருக்கும் முருகப்பெருமான் இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வந்தடைவார். வழியெங்கும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணை யர் சுரேஷ் மற்றும் பணி யாளர்கள் செய்திருந்தனர்.

    ×