search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govinda"

    • 2004-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • 2009-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். தற்போது சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

    பாலிவுட் நடிகர் கோவிந்தா 2004-ல் அரசியலில் களம் இறங்கினார். அப்போது பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ராம் நாயக்கை தோற்கடித்து ஜெயன்ட் கில்லர்-ஆக திகழந்தார். காங்கிரஸ் கட்சி சார்பாக 2004-ல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    2009-ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். அதன்பின் அரசியலில் இருந்து விலகினார். தற்போது சுமார் 14 ஆண்டுகள் கழித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

    சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் பிரபல நபராக இருந்தவர் கோவிந்தா என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

    2004-2009 அரசியலுக்குப் பிறகு அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். மீண்டும் அரசியலுக்கு திரும்புவேன் என்ற நினைத்து பார்க்கவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியலுக்கு திரும்பியுள்ளேன். வாய்ப்பு வழங்கப்பட்டால் கலை மற்றும் கலாசாரம் துறையில் பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    1980-ல் சினிமாத்துறையில் நுழைந்த கோவிந்தா, ஏராளமான குடும்ப பொழுதுபோக்கு படங்களில் நடித்துள்ளார்.

    • வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.
    • பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர்.

    வெங்கடாசலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு.

    சிலர் பாயாசமும் படைப்பர்.

    வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது.

    பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்திப் பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர்.

    பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர்.

    இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறிய படி இருந்தால் திருமாலே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்

    • வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.
    • எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும்.

    வெங்கடா சலபதிக்கு நிவேதனம் செய்யும் பொருட்களில் சர்க்கரைப் பொங்கல் மற்றும் வடை இடம் பெறுவதுண்டு. சிலர் பாயாசமும் படைப்பர். வெண்ணெயும், சர்க்கரையும் கலந்த கலவையான நவநீதமும் படைப்பதுண்டு.

    அன்புடன் இலையை அர்ப்பணித்தாலும் ஏற்பேன் என்று கீதையில் கண்ணன் கூறியது இங்கே கருதத்தக்கது. பெருமாளுக்குப் படையலிட்டுப் பூஜை செய்யும்போது உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து கலந்து கொள்ள செய்ய வேண்டும்.

    எல்லோரும் பக்தி பெருக்குடன், கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட வேண்டும். பூஜை முடிந்த பிறகு பக்திப் பாடல்களைப் பாடி வணங்கி, வழிபாடு செய்வர். பிறகு வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு உணவளித்து, தாம்பூலம் கொடுப்பர். இப்படி அவரவர் இருப்பிடத்திலேயே கோவிந்தா என்ற திருநாமத்தைக் கூறியபடி இருந்தால் பெருமாளே அந்த இல்லத்துக்கு எழுந்தருள்வார்.

    • ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி 2 லட்சம் பேரிடம் ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர்.
    • கோவிந்தாவுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலிவுட் திரை உலகில் புகழ் பெற்ற நடிகராக விளங்கியவர் கோவிந்தா.

    இந்நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் நாடு முழுவதும் அதிக வட்டி மற்றும் போனஸ் தருவதாக கூறி பொது மக்களிடம் கோடிக்கணக்கில் வசூலித்துள்ளது.

    இந்த திட்டங்களை நடிகர்களை வைத்து விளம்பரப்படுத்தி உள்ளது. இதில் பாலிவுட் நடிகர் கோவிந்தா இந்த நிறுவனம் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ஒடிசாவில் மட்டும் 10 ஆயிரம் பேரிடம் ரூ.30 கோடியை வசூலித்துள்ளனர். இது தவிர மகாராஷ்டிரா, பீகார், உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், அரியானா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் வசூல் வேட்டையை கோடிக்கணக்கில் நடத்தியுள்ளது.

    இது குறித்து ஒடிசா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்துள்ளனர்.

    முதலீட்டாளர்களிடம் கூடுதல் முதலீட்டாளர்களை அழைத்து வந்தால் அதற்கு வட்டி மற்றும் போனஸ் அதிகமாக கிடைக்கும் என்று ஆசை காட்டி உள்ளனர். ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி 2 லட்சம் பேரிடம் ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளனர்.

    இந்நிலையில் கோவாவில் கடந்த ஜூலை மாதம் நடந்த இந்த நிறுவனத்தின் விழாவில் நடிகர் கோவிந்தா நிறுவனத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

    எனவே கோவிந்தாவுக்கு இந்த மோசடியில் தொடர்பு இருக்குமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து ஒடிசா பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி பங்கஜ் கூறுகையில், "இதுவரை கோவிந்தாவை நாங்கள் சந்தேகப்படவில்லை. அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் அவருக்கு எந்த அளவுக்கு பங்கு உள்ளது என தெரியும். அவரை இந்த வழக்கில் சாட்சியாக மட்டும் சேர்த்துக் கொள்வோம். அவரிடம் விசாரணை செய்ய தனிப்படை போலீசார் மும்பை செல்ல உள்ளனர்" என்று தெரிவித்தார்.

    ×