search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maduro"

    தென்னமெரிக்கா நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மடுரோ, தங்கள் நாட்டின் மருத்துவ பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி டாலரை அமெரிக்க அதிபர் டிரம்ப் திருடி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். #Maduro #Trumpstole #Venezuelamedicine
    மெக்சிகோ சிட்டி:

    தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான வெனிசுலா நாட்டு அதிபர் பதவிக்கு நடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் நிக்கோலஸ் மடுரோ பெற்ற வெற்றி செல்லாது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், எதிர்க்கட்சி தலைவரான ஜுவான் குவய்டோ தன்னை வெனிசுலா அதிபராக பிரகடனப்படுத்தி கொண்டார்.

    அவருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. அதைதொடர்ந்து 50-க்கும் அதிகமான நாடுகளும் அவரை பிரதமராக அங்கீகரித்த நிலையில் நிக்கோலஸ் மடுரோ தனது பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

    ரஷியா, சீனா, கியூபா, பொலிவியா உள்ளிட்ட சில நாடுகள் மடுரோவை ஆதரித்து வருகின்றன.

    இந்நிலையில், நிக்கோலஸ் மடுரோ தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த பல உதவிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டின் சுமார் 700 கோடி டாலர் மதிப்பிலான பெட்ரோல் கிணறும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தங்கள் நாட்டின் மருத்துவ பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 500 கோடி டாலரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திருடி விட்டதாக நிக்கோலஸ் மடுரோ குற்றம்சாட்டியுள்ளார்.

    வெனிசுலா நாட்டில் தேசிய மருந்து தயாரிப்புத்துறை வளர்ச்சி திட்டத்தை மீண்டும் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பேசிய மடுரோ, ‘நம் நாட்டில் மருந்துகள் தயாரிப்பு, மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய முக்கிய மருந்துகள், மருந்தகங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் இயக்கம் ஆகியவற்றுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 கோடி டாலர் பணத்தை டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திருடி விட்டது.

    வெனிசுலா நாட்டு மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த மோசமான கிரிமினல் நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளார். #Maduro #Trumpstole #Venezuelamedicine 
    பனிப்போரை வெளிப்படையான அரசியல் நிலைப்பாடாக மாற்றும் வகையில் அமெரிக்காவில் உள்ள தூதரகத்தை மூடுமாறு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடுரோ உத்தரவிட்டுள்ளார். #Maduro #Venezuelaembassy #UnitedStates
    காரகாஸ்:

    வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மடுரோவின் ஆட்சியில், அரசியல் சர்ச்சைகள் மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களால் நிலையற்ற தன்மை ஏற்பட்டது. இந்த எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியால் புறக்கணிக்கப்பட்ட இந்த தேர்தலில், நிகோலஸ் மடுரோ வெற்றி பெற்று மீண்டும் அதிபரானார்.
     
    ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், நிகோலஸ் மடுரோ பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றன. மடுரோவுக்கு எதிரான போராட்டம் மற்றும் ஆதரவு போராட்டங்களால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோதல் வெடித்தது.

    அதிபர் மடுரோவுக்கு எதிராக, ராணுவத்தில் உள்ள ஒரு குழுவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டதுடன், பொதுமக்களையும் வீதிக்கு வந்து போராடும்படி அழைப்பு விடுத்தனர். அதன்பின்னர், போராட்டம் தீவிரமடைந்து பதற்றம் அதிகரித்துள்ளது.

    மடுரோவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இதில் போர்ச்சுகீசா, பரினாஸ், டாச்சிரா, காரகாஸ், அமமேசானஸ் மற்றும் பொலிவார் மாநிலங்களில் நடந்த மோதல்களில் 25-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.


    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக நேற்று பிரகடனம் செய்தார். அவருக்கு அமெரிக்கா, கனடா, அர்ஜெண்டினா, பிரேசில், சிலி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    குறிப்பாக,  ஜூவான் கெய்டோவை அதிகாரப்பூர்வமான வெனிசுலா அதிபர் என்று அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நிகோலஸ் மடுரோ உடனடியாக பதவி விலகவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    ஆனால், எனது பதவிக்காலம் 2025-ம் ஆண்டுவரை உள்ளது. அதற்குள் நான் பதவியை விட்டு இறங்க மாட்டேன் என நிகோலஸ் மடுரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  மடுரோவுக்கு ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ஜூவான் கெய்டோவுக்கு அமெரிக்கா அளித்துவரும் ஆதரவை கண்டு நிகோலஸ் மடுரோ ஆத்திரமடைந்துள்ளார். இதன்விளைவாக, வெனிசுலா நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இன்னும் 72 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என நேற்று உத்தரவிடப்பட்டது.

    இதேபோல், அமெரிக்காவில் உள்ள வெனிசுலா தூதரகத்தை மூடுமாறு நிகோலஸ் மடுரோ இன்று உத்தரவிட்டுள்ளார். இதனால், வெனிசுலா-அமெரிக்கா இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. #Maduro #Venezuelaembassy #UnitedStates
    வெனிசுலா அதிபர் மதுரோ பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த குண்டுவெடிப்பில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Maduro #Venezuela
    கராகஸ் :

    வெனிசுலா தேசிய படைகளின் 81-வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று நடைபெற்றது. இதில், பங்கேற்ற அதிபர் மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.   


    வெனிசுலா தொலைத்தொடர்பு துறை மந்திரி ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடங்களிடம் கூறுகையில், மதுரோ உரையாற்றிய போது ஆளில்லா சிறிய விமானங்கள்(ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அதிபர் மதுரோ உயிர்பிழைத்துள்ளதாகவும், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இந்த, தாக்குதல் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், ராணுவ உயரதிகாரிகள் புடைசூழ நின்றிருக்க, மனைவியுடன் மதுரோ உரையாற்றிய போது குண்டுவெடிப்பு சத்தம் கேட்கிறது. பின்னர் படை வீரர்கள் அலறியடித்து ஓட்டம் பிடிப்பது போல் பதிவாகியுள்ளது. #Maduro #Venezuela
    சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றிய நிக்கோலஸ் மதுரோ இன்று பதவி ஏற்றுக்கொண்டார். #Madurosworn #Venezuelapresident
    கராகஸ்:

    வெனிசுலா நாட்டில் நிக்கோலஸ் மதுரோ அதிபராக கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்தார். சமீபத்தில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முறைகேடு நடப்பதாக கூறி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.

    இதையடுத்து அதிக சிரமம் இன்றி நிக்கோலஸ் மதுரோ மீண்டும் அதிபர் பதவியை கைப்பற்றினார். இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா போன்ற நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. மதுரோவின் வெற்றி ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என அமெரிக்கா அறிக்கை வெளியிட்டது.

    மேலும், மதுரோவின் வெற்றியைத் தொடர்ந்து வெனிசுலா மீது புதிய பொருளாதார தடையையும் அமெரிக்கா விதித்தது.

    இந்நிலையில், இன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், அரசியலமைப்புச் சட்டத்தினை பாதுகாப்பேன் என்றும், புரட்சிகர வழிமுறைகள் மூலம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்று சத்திய பிரமாணம் செய்தபடி, அடுத்த 6 ஆண்டுகளுக்கான அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றார்.

    மீண்டும் அதிபராக மதுரோ பதவியேற்றாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே அவரது ஆட்சிக்காலம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது #Madurosworn #Venezuelapresident
    வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில் முக்கிய எதிர்கட்சி புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.#Venezuela #NicolasMaduro
    கராகஸ்:

    வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தில்லுமுல்லுகள் முறைகேடுகள் நடந்ததாக கூறி முக்கிய எதிர்கட்சி தேர்தலை புறக்கணித்தது.

    இதையடுத்து, நேற்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில் இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்ததால் 46.1 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதில் அதிபர் மதுரோ 58 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அதிபர் தேர்தலில் மீண்டும் மதுரோ வெற்றி பெற்றதையடுத்து அவரது ஆதரவாளர்களும் தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்து அவரது வெற்றியை கொண்டாடிவருகின்றனர். #Venezuela #NicolasMaduro
    ×