என் மலர்
நீங்கள் தேடியது "பெஞ்சமின் நெதன்யாகு"
- உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும்.
- நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம்.
லண்டன்:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன் வைக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்தால் அவரை இங்கிலாந்து போலீசார் தடுத்து வைப்பார்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.
ஆனால் உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும். நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம் என்றார்.
இதன்மூலம் நெதன்யாகு இங்கிலாந்து வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று இங்கிலாந்து மறைமுகமாக தெரிவித்துள்ளது.
அதேபோல் கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, சுவீடன், பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டுக்கு இணங்கப் போவதாக தெரிவித்து உள்ளன.
- இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.
- பிணைகளை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு இன்று சந்தித்தனர். சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடையே உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர், "அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. உலக வரலாற்றிலேயே 9/11 தாக்குதலுக்கு பிறகு நடைபெற்ற மிகக் கொடூர தாக்குதலாக இது அமைந்தது. இந்த தாக்குதல் கிட்டத்தட்ட இருபது 9/11 தாக்குதல்களுக்கு சமமான ஒன்று ஆகும். ஹாலோகாஸ்ட்-ஐ தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான நடத்தப்பட்ட மிகக் கொடூர தாக்குதல் இது."
"ஹமாஸ் குழந்தைகளை கொன்று, அவர்களின் தலையை துண்டாக்கினர், பாலியல் ரீதியிலான குற்றங்களில் ஈடுபட்டனர். மேலும் பிணைகளை கடத்திச் சென்றுள்ளனர். காசாவில் உள்ள ஹமாஸ்-ஐ அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வோம். ஹமாஸ்-ஐ முழுமையாக வேரறுப்போம்."
"ஹமாஸ்-இன் பயங்கரவாதத்தை அழித்து, அதன் அரசியல் கட்டமைப்பை உடைத்தெறிவோம். எங்களின் பிணைகளை மீட்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்," என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமன் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
- பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது.
- டெல்அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நெதன்யாகு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
டெல்அவிவ்:
இஸ்ரேலில் கடந்த மாதம் நடந்த பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. நெதன்யாகுவின் லிகுட் கட்சி 32 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
யாயிர் லாபிட் தலைமையிலான கூட்டணி 51 இடங்களை பிடித்தது. அந்நாட்டின் நான்கு ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் இதுவாகும். கடந்த 4 முறை நடந்த தேர்தல்களில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இந்த தேர்தலில் நெதன்யாகுவின் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. 120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நெதன்யாகு வெற்றி பெற்று கடந்த 29-ந்தேதி பிரதமராக பதவியேற்றார்.
இந்த நிலையில் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அரசுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. டெல்அவிவ் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் நெதன்யாகு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
ஜனநாயகம், சுதந்திரம் ஆபத்தில் உள்ளது. பாசிசம் மற்றும் நிறவெறிக்கு எதிராக ஒன்றிணைவோம் உள்ளிட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் கொண்டு வந்து இருந்தனர்.
டெல் அவிவ் நகரில் மத்திய மற்றும் தெற்கு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. போராட்டக்காரர்கள் கூறும்போது, எங்கள் நாடு ஜனநாயகத்தை இழக்க போகிறது என்று நாங்கள் உண்மையில் பயப்படுகிறோம். சட்ட விசாரணையில் இருந்து விடுபட விரும்பும் ஒருவருக்காக நாங்கள் சர்வாதிகாரத்துக்குள் செல்கிறோம் என்றனர்.
இஸ்ரேலில் சில ஆண்டுகளாக நிலையான அரசு அமையாமல் இருந்து வந்த நிலையில் தற்போது நெதன்யாகு தலைமையில் அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் அந்த அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.