search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel PM"

    • ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது.
    • இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது.

    இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. இதில் ஹமாசின் காசா முனை பகுதி மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஒன்றரை மாதங்களுக்கு பிறகு 4 நாள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்தது. மேலும், பிணைக்கைதிகளையும் ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று காசா பகுதியில் பாதுகாப்புப் படையினரை சந்தித்து பேசியதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

    பெஞ்சமின் நெதன்யாகு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தளபதிகளுடன் பேசினார் என்றும், பாதுகாப்பு தொடர்பான விளக்கத்தைப் பெற்றார் என்றும் அவரது அலுவலகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில்"எதுவும் எங்களைத் தடுக்காது. போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கான பலம், சக்தி, விருப்பம் மற்றும் உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அதையே நாங்கள் செய்வோம்," என்று அவர் கூறினார்.

    • இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
    • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரேல் பிரதமராக மூன்றாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றார்.

    இஸ்ரேலில் கடந்த மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும். இத்தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகும்- யாயிர் லாபிட் இடையே நேரடி போட்டி நிலவியது.

    இந்நிலையில் நடந்த தேர்தலில் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி 64 இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட கூட்டணிக்கு 51 இடங்கள் மட்டுமே பெற்றது.

    நெதன்யாகுவின் லிகுட் கட்சி சுமார் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதன்மூலம், பெரும்பான்மையுடன் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 120 உறுப்பினர்களில் 63 பேர் புதிய அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், 54 பேர் எதிராகவும் வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து இஸ்ரேல் பிரதமராக ஆறாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு பதவியேற்றார்.

    காஷ்மீர் மாநிலத்தில் 40 வீரர்கள் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர், இஸ்ரேல் பிரதமர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #WhiteHouse #AfghanPresident #IsraelPM #PulwamaAttack
    ஜெருசலேம்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி நேற்று நடத்திய தற்கொலைப்படை தாக்குதலைத் தொடர்ந்து, மிகவும் முக்கியத்துவமான நாடு என வர்த்தகத்துக்கான முன்னுரிமையுடன் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது.

    டெல்லியில் இன்று பிற்பகல் பாகிஸ்தான் தூதரை வரவழைத்து இந்திய உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.

    இதைதொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள இந்தியாவுக்கான தலைமை தூதரை உடனடியாக டெல்லி வருமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  

    இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்தது.

    தெற்காசிய பகுதியில் பீதியையும், வன்முறைகளையும், குழப்பத்தையும் அதிகரிக்கச் செய்யும் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிக்கும் நடவடிக்கையையும், தங்களது மண்ணில் பாதுகாப்பான புகலிடம் அளிக்கும் செயலையும் பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும்.



    புல்வாமா தாக்குதலை போன்ற கொடூரமான செயல்கள் வன்முறையை நசுக்கும் அமெரிக்கா-இந்தியா இடையிலான கூட்டு நடவடிக்கைக்கு சாதகமாக அமையும் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் சாரா சான்டெர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு உள்ளிட்டோரும் பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பாகிஸ்தானால் தூண்டி விடப்படும் பயங்கரவாதம் தெற்காசிய பிராந்தியத்தில் புற்றுநோயாக மாறி வருவதாகவும், இந்த பயங்கரவாதிகளை அழிப்பதற்கு கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ள அஷ்ரப் கானி, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்தார்.

    கொடூரமான இந்த தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் பலியான சம்பவத்துக்கு இஸ்ரேல் நாட்டு மக்களின் சார்பில் இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, துயரமான இந்த வேளையில் இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடியுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார். #WhiteHouse #AfghanPresident #IsraelPM #PulwamaAttack
    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மகன் முஸ்லிம்களுக்கு எதிராக பதிவிட்டதால் அவரது கணக்கை பேஸ்புக் முடக்கி வைத்தது. #IsraelPM #YairNethanyahu #Facebookbanned
    ஜெருசலேம்:

    இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாகு. இவரது மகன் யாய்ர் நேதன்யாகு. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த இரு போலீசார் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வகையில் யாய்ர் நேதன்யாகு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.



    1. இஸ்ரேல் மண்ணை விட்டு யூதர்கள் அனைவரும் வெளியேறும் வரை.., 2. இஸ்ரேல் மண்ணை விட்டு முஸ்லிம்கள் அனைவரும் வெளியேறும் வரை.. இந்த நாட்டில் அமைதி இருக்காது. நான் இரண்டாவதை நம்புகிறேன் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த பதிவு வெளியான சில நிமிடங்களில் யாய்ர் நேதன்யாகுவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது. பின்னர், சர்ச்சைக்குரிய அந்த கருத்து நீக்கப்பட்டு சுமார் 24 மணிநேரத்துக்கு பின்னர் அந்த பக்கம் செயல்பட தொடங்கியது.

    இதுதொடர்பாக மீண்டும் கருத்து தெரிவித்த யாய்ர் நேதன்யாகு, பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து விட்டது, வாழ்த்துகள்! என குறிப்பிட்டார்.

    ஹமாஸ், ஹெஸ்புல்லா மற்றும் ஈரான் அரசை சேர்ந்தவர்களுக்கு பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வ கணக்குகள் உள்ளன. இதுதவிர யூதர்களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான பேஸ்புக் கணக்குகளும் செயல்பட்டு வருகின்றன.

    இவற்றின் மூலமாக யூதர்களை ஒழித்துக்கட்ட வேண்டும். யூதர்களை கொல்ல வேண்டும் என்றெல்லாம் பிரசாரம் செய்யப்படுகிறது. என்னையும் என் குடும்பத்தாரையும் கொல்லப்போவதாக நேரடியாகவே மிரட்டல்கள் வருகின்றன. ஆனால், இவை எல்லாம் பேஸ்புக் போலீஸ் கண்களில் படவில்லை.

    கருத்து சுதந்திரம் என்ற முத்திரையுடன் இவற்றை எல்லாம் அனுமதிக்கும் பேஸ்புக் போலீஸ் என்னை கண்டுபிடித்து எனது கணக்கை முடக்கியது கண்டனத்துக்குரியது என அந்த பதிவில் யாய்ர் குறிப்பிட்டுள்ளார். #IsraelPM #YairNethanyahu  #Facebookbanned
    ‘வழக்கு எண் 4000’ என குறிப்பிடப்படும் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் போலீசார் இன்று பத்தாவது முறையாக விசாரணை நடத்தினர்.
    ஜெருசலேம்:

    யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார்.

    தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், தன் மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேதன்யாகுவிற்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில், விசாரணையின் அறிக்கையை நேற்று வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர்.

    ’வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.

    இந்நிலையில், இன்று பிரதமர் பெஞ்சமின் நேதயாகுவின் வீட்டுக்கு வந்த போலீசார், அவரிடம் வழக்கு எண் 4000 தொடர்பாக சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினர். ஊழல் தொடர்பாக அந்நாட்டு போலீசார் அவரிடம் இதுவரை பத்துமுறை விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். இருந்தாலும், பெஞ்சமின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், அவர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #Netanyahucorruption #Netanyahuquestioned
    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை வரும் 11-ம் தேதி மாஸ்கோ நகரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
    ஜெருசலேம்:

    ‘பிபா 2018’ உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் உள்ள பல நகரங்களில் நடைபெற்று வருகின்றன. இறுதி ஆட்டம் வரும் 15-ம் தேதி மாஸ்கோ நகரில் நடைபெறுகிறது.

    இந்த ஆட்டத்தை காண பல்வேறு வெளிநாட்டு பிரமுகர்கள் ரஷியா வருகின்றனர். அவ்வகையில், மாஸ்கோ நகருக்கு வரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரும் 11-ம் தேதி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.

    இதேபோல், இறுதிப்போட்டியை காணவரும் கத்தார் நாட்டு மன்னர் உள்ளிட்டவர்களையும் சந்தித்துப் பேச அதிபர் புதின் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PutinNetanyahumeet 
    ×