அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த NDA எம்.பி.க்கள்

வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த NDA எம்.பி.க்கள்
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.

Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற NDA நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைக்காக பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com