search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saving scheme"

    • இந்த திட்டத்தில் 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படும்.
    • திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

    திருப்பூர் :

    இந்திய அஞ்சல் துறை சார்பில் மகளிர் மேன்மை சேமிப்புபத்திரம்-2023 என்ற திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தை பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்தி இந்த திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

    இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி வரை திருப்பூர் அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் நலன் காக்க சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    ×