search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    • மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
    • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் இரவில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்பு இருந்த பணி நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சை மாவட்ட குழ சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் தனசீலி, மாவட்ட துணை செயலாளர் எஸ்தர் லீமா, பொருளாளர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

    நிர்வாக குழு உறுப்பினர் சேவையா சிறப்புரையாற்றினார்.மாநகர செயலாளர் பிரபாகர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

    தஞ்சை மாநகர செயலாளர் பத்மாவதி, ஒன்றிய நிர்வாகிகள் தஞ்சைமல்லிகா, ஒரத்தநாடு எலிசபெத், பட்டுக்கோட்டை ஜானகி, சகுந்தலா, பேராவூரணி கலைச்செல்வி, திருவோணம்தவமணி, மதுக்கூர்ஜெனிதா, சேதுபாசத்திரம் கனகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×