search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity bills"

    • முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது.
    • 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது.

    திருப்பூர்:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. பல லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் மின் கட்டணத்தை செலுத்தாமல் விசைத்தறியாளர்கள் போராடினர்.

    அதன் பலனாக முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது. ஆனால் நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்பட்டது.மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலேயே மின் கணக்கீடு செய்யப்பட்டது. இதனால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

    கடந்த 8 மாதங்களாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் நிலுவை மின் கட்டணத்துக்கு அபராதம், வட்டியை ரத்து செய்ய வேண்டும், கட்டணம் செலுத்த தவணை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

    விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அபராதம் மற்றும் வட்டியை ரத்து செய்தும், 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் நிலுவை மின் கட்டணத்தை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி, பொருளாளர் பூபதி ஆகியோர் கூறுகையில், அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

    கடந்த 4 நாட்களாக மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று தங்களின் நிலுவை கட்டணம் குறித்து விசாரித்து அதை செலுத்துவதில் விசைத்தறியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றனர்.

    • ஒரு சிலர் இணையவழி மூலமாக கட்டணங்களை செலுத்தி விடுகின்றனர்.
    • வசூல் மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு தற்போது ஒன்று மட்டுமே நடைமுறையில் உள்ளது.

    உடுமலை :

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக தொழிற்சாலைகள், அலுவலகங்கள்,வீடுகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பல்வேறு தரப்பட்ட மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். நாள்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தை கணக்கீடு செய்து அதற்கு தகுந்தவாறு மின் வாரியத்தின் மூலமாக கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்துமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாக மின்கட்டண வசூல் மையத்திற்கு சென்றும் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். ஆனால் உடுமலை ஏரிப்பாளையத்தில் மின் பகிர்மான வட்ட அலுவலக வளாகத்தில் மின் கட்டண வசூல் மையம் ஒன்று மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-உடுமலை மின் பகிர்மான வட்ட அலுவலக வளாகத்தில் மின்சார பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் ஆளுகைக்கு உட்பட்ட வீடுகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்களை சேர்ந்த பொதுமக்கள் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். ஒரு சிலர் இணையவழி மூலமாக கட்டணங்களை செலுத்தி விடுகின்றனர்.ஆனால் படிப்பறிவற்ற பொதுமக்கள் அலுவலகத்திற்கு சென்று செலுத்தி வருகின்றனர். இதற்காக செயல்பட்டு வந்த வசூல் மையங்கள் படிப்படியாக மூடப்பட்டு தற்போது ஒன்று மட்டுமே நடைமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கால் கடுக்க மணிக்கணக்கில் காத்திருந்து கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அப்போது மூத்த குடிமக்கள் வரிசையில் காத்திருப்பதற்கு இயலாத நிலை உள்ளது.மேலும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பொதுமக்கள் தாகம் தீர்ப்பதற்கு ஏதுவாக குடிதண்ணீரும் வைப்பதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கூட்டத்திற்கு தகுந்தவாறு கூடுதல் மையங்களைத் திறந்து சேவையை அளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும்.ஆனால் இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.எனவே மின் கட்டண வசூல் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து கூடுதல் வசூல் மையங்களை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கட்டணங்களை பாரத் பில் பே வாயிலாக செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
    • மின் நுகர்வோர் தங்களது கட்டணத்தை செலுத்த பாரத் பில் பே மற்றுமோர் எளிய வழிமுறையாகும்.

    திருப்பூர் :

    மின் நுகர்வோர் தங்களது கட்டணங்களை பாரத் பில் பே வாயிலாக செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது.இதுதொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோருக்கு கூடுதல் வசதியாக பாரத் பில் பே மூலமும் செலுத்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாரத் பில் பே என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வடிவமைக்கப்பட்டு இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (என்.பி.சி.ஐ.,) நிர்வகிக்கப்படும் ஒன்றாகும்.

    மின் நுகர்வோர் தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் வங்கி மற்றும் வங்கி அல்லாத செயலிகள் மற்றும் இணையதளத்தில் பாரத் பில் பே லோகோவை கிளிக் செய்யவும். அதில் பில் செலுத்தும் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கிளிக் செய்து மின் இணைப்பு விவரங்களைக் கொடுக்க வேண்டும். தகவல்களைச் சரிபார்த்து மின் கட்டணத்தைச் செலுத்தலாம்.மின் நுகர்வோர் தங்களது கட்டணத்தை செலுத்த பாரத் பில் பே மற்றுமோர் எளிய வழிமுறையாகும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
    • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் இரவில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்பு இருந்த பணி நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சை மாவட்ட குழ சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் தனசீலி, மாவட்ட துணை செயலாளர் எஸ்தர் லீமா, பொருளாளர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

    நிர்வாக குழு உறுப்பினர் சேவையா சிறப்புரையாற்றினார்.மாநகர செயலாளர் பிரபாகர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

    தஞ்சை மாநகர செயலாளர் பத்மாவதி, ஒன்றிய நிர்வாகிகள் தஞ்சைமல்லிகா, ஒரத்தநாடு எலிசபெத், பட்டுக்கோட்டை ஜானகி, சகுந்தலா, பேராவூரணி கலைச்செல்வி, திருவோணம்தவமணி, மதுக்கூர்ஜெனிதா, சேதுபாசத்திரம் கனகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×