கனமழை பாதிப்பு- மின் கட்டணம் செலுத்த மேலும் 6 மாவட்டங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம்.வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று அறிவிப்பு.
கனமழை பாதிப்பு- மின் கட்டணம் செலுத்த மேலும் 6 மாவட்டங்களுக்கு அவகாசம் நீட்டிப்பு
Published on

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது.

இதன் எதிரொலியால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளிலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதனால், ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளித்து அறிவிக்கப்பட்டது.

அதன்படி, வரும் டிசம்பர் 10ம் தேதி வரை மின் கட்டணம் எந்தவித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மேலும் 6 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு அவகாசம் நீட்டித்து அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com