search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deposits"

    • இழப்பீடு கொடுக்கப்படாததை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம்.
    • நகை மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது

    பல்லடம்:

    பல்லடம் அருகே, கேத்தனூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:- கேத்தனூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் மந்தராசலம் என்ற விவசாயி கடன் பெற்றிருந்தார்.

    அந்தக் கடனுக்கான வைப்பு தொகையை கடந்த 5 மாதங்களாக அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்காமலும், மேலும் அதற்குண்டான வட்டி தொகையை வழங்காமலும் வங்கி நிர்வாகம் தொடர்ந்து காலம் தாமதம் செய்து வந்தது. எனவே காலம் தாழ்த்தி வந்ததை கண்டித்தும், இதே வங்கியில் நகை மோசடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு கொடுக்கப்படாததை கண்டித்தும் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்த அவர்களை அழைத்தனர்.இதில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வைப்புத் தொகையை திருப்பி வழங்கியும், மேலும் அதற்குண்டான வட்டி தொகையை அவரது வங்கி கணக்கில் வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் நகை மோசடியில் பாதிக்கப்பட்ட 603 நபர்களில் 402 வங்கி வாடிக்கையாளர்களுக்கு நகை மோசடியில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 201 வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பி உடனடியாக இழப்பீட்டை வழங்க வங்கி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்தது. மேலும் வங்கியில் இருந்து நகையை மீட்டு சென்ற 84 வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற ஒரு மாத காலத்திற்குள் அவர்களுக்கும் நகை மோசடியால் ஏற்பட்ட இழப்பீட்டினை உடனடியாக வழங்குவதாக வங்கி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

    இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, இந்திய உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் நல்லாக் கவுண்டர், மாநிலத் தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன், மாநில துணைத்தலைவர் அரசேந்திரன், திருப்பூர் தெற்கு மாவட்ட அவை தலைவர் வரதராஜன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.பி.டி மகாலிங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்,மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் 60 சதவீத ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் போட்டியிட்டால் டெபாசிட் கிடைக்காது என பா.ஜனதா நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. #RajasthanAssemblyElection #BJP
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. வசுந்தரா ராஜேசிந்தியா முதல்-மந்திரி பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைகிறது.

    இதையடுத்து இம்மாத இறுதியில் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதற்கிடையே பா.ஜனதா மேலிடம் ராஜஸ்தானின் தேர்தல் பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. மேலிட பொறுப்பாளரான அவினாஷ்ராய் கன்னா ஜெய்ப்பூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    குறிப்பாக எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு பற்றி கருத்துக்கள் கேட்டார். மீண்டும் அவர்களுக்கு டிக்கெட் வழங்கலாமா? அல்லது புதுமுகங்களை களத்தில் இறக்கலாமா? என்று ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவினாஷ் கன்னா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜஸ்தான் தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த தவறான கருத்தும் இல்லை.

    ஆனால் செயல்பாடு சரி இல்லாத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு பதில் புதுமுகங்கள் களத்தில் இறக்கப்படுவார்கள். மக்கள் மத்தியில் பெயர் பெற்று நல்ல முறையில் பணியாற்றியவர்களுக்கு மட்டும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 எம்.எல்.ஏ.க்களில் பா.ஜனதாவின் பலம் 160 ஆக உள்ளது. அவர்களது செயல்பாடுகள் பற்றி பா.ஜனதா ரகசியமாக கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 60 சதவீத எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடு சரியில்லை என்றும் அவர்களுக்கு மீண்டும் தேர்தல் டிக்கெட் வழங்கினால் டெபாசிட் இழப்பார்கள் என்றும் தகவல் வெளியானது.

    இதுபற்றியும் அவினாஷ் ராய் கன்னா ஆலோசனை நடத்தினார். எனவே 60 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் டிக்கெட் வாய்ப்பு இல்லை என்றும் அவர்களுக்கு பதில் மக்கள் செல்வாக்கு பெற்ற புதுமுகங்களுக்கு டிக்கெட் வழங்க பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது. #RajasthanAssemblyElection #BJP
    அமித் ஷா இயக்குனராக இருக்கும் அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக டெபாசிட் எதுவும் செய்யப்படவில்லை என நபார்டு வங்கி விளக்கம் அளித்துள்ளது. #AmitShah #NABARD
    புதுடெல்லி:

    அமித்ஷாவை இயக்குனராக கொண்ட அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி, 2016-ல் பணமதிப்பு நீக்கம் அமலில் இருந்த போது, 5 நாட்களில் ரூ.745 கோடி செல்லாத நோட்டுகளை பெற்றதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நபார்டு வங்கி விளக்கம் அளித்துள்ளது. அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் முறைகேடாக டெபாசிட் எதுவும் செய்யப்படவில்லை என நபார்டு வங்கி கூறியுள்ளது.

    இது தொடர்பாக நபார்டு வங்கி அளித்துள்ள விளக்கம் வருமாறு:-

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500 ரூ.1000 நோட்டுகள் வழக்கத்துக்கு மாறாக அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில்  டெபாசிட் செய்யப்படவில்லை. ரிசர்வ் வங்கியின் விதிப்படியே பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 

    அகமதாபாத் கூட்டுறவு வங்கியில்  மொத்தம் 17 லட்சம் பேர் கணக்கு வைத்துள்ளார்கள். 1.6 லட்சம் வாடிக்கையாளர்கள் சராசரியாக ரூ.46 ஆயிரத்து 795 டெபாசிட் செய்தனர். ஒட்டுமொத்த கணக்குதாரர்களில் 9.37 சதவீதம் வாடிக்கையாளர்களே செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றினார்கள்.

    98.94 சதவீதம் கணக்குதாரர்கள் ரூ.2.5 லட்சத்துக்கு குறைவாகவே டெபாசிட் செய்தனர், செல்லாத ரூபாய்களைக் கொடுத்து பரிமாற்றம் செய்தனர். 5 நாட்களில் 1.60 லட்சம் கணக்குதாரர்கள் மூலம் ரூ.746 கோடி டெபாசிட் வந்தது உண்மைதான். இது வங்கியின் டெபாசிட்களில் 15 சதவீதம் மட்டுமே. டெபாசிட்கள் அனைத்தும் விதிமுறையின்படியே நடந்தது. குஜராத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்களைக் காட்டிலும், மராட்டிய கூட்டுறவு வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட்தான் அதிகமாகும். நாட்டில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் அகமதாபாத் கூட்டுறவு வங்கி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது. அகமதாபாத் கூட்டுறவு வங்கியில் வர்த்தக அளவு என்பது ரூ.9 ஆயிரம் கோடியாகும்.

    சமீபத்தில் இந்த வங்கிக்குச் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதும் வழங்கப்பட்டுள்ளது. வங்கியில் விதிமுறைப்படியே டெபாசிட்கள் செய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு நபார்டு வங்கி தெரிவித்துள்ளது. #AmitShah #NABARD
    ×