search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 ஆயிரம் மரக்கன்று நடும்விழா
    X

    மரக்கன்று நடும் விழாவில் கலந்து கொண்டவர்கள்.

    2 ஆயிரம் மரக்கன்று நடும்விழா

    • தேசிய நெடுஞ்சாலையோரம் 2 ஆயிரம் மரக்கன்று நடும்விழா நடந்தது.
    • தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தென்மாபட்டு அருகே புதிதாக 45 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது.

    இந்த விழாவில் தேசிய நெடுஞ்சாலை மதுரை மண்டல அலுவலர் அஜய் பிஸ்நோய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அலுவலர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். திட்ட இயக்குநர் நாகராஜ், இணை மேலாளர் சுமித் தேவ்டா, சிறப்பு வட்டாட்சியர்கள் மூர்த்தி, செந்தில்வேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகாரி களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வழக்கறிஞர் நவநீதன், வாணியங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×