search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communist India"

    • கூட்டத்தில், உணவு பண்டங்கள், இன்சூரன்ஸ் பாலிசி தொகை மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
    • தஞ்சை வழியாக இயங்கிய அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை,நிதிய ளிப்பு வழங்கும் என இருபெரும் விழா நடைபெற்றது. பின்னர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு கணேசன் தலைமை தாங்கினார். சொக்கலிங்கம் வரவேற்றார்.

    மாவட்ட குழு பாலசுப்பிரமணியன் உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட குழு விஜயலெட்சுமி நிதிபெற்று பேசினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாநகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த கூட்டத்தில், உணவு பண்டங்கள், இன்சூரன்ஸ் பாலிசி தொகை மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    மின்சார கட்டண உயர்வை மாநில அரசு திரும்பபெற வேண்டும். தஞ்சை வழியாக இயங்கிய அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் ஜார்ஜ்துரை ஆகியோர் நன்றி கூறினர்.

    ×