என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதானமாக கையாளுகிறார்- டிடிவி தினகரன்
    X

    கரூர் விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதானமாக கையாளுகிறார்- டிடிவி தினகரன்

    • எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது மோசம், பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது.
    • தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை.

    பதவி வெறியில் கரூர் துயரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட கரூர் துயரம் குறித்து நிதானமாக பேசுகிறார், ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பதவி வெறியில் பேசுகிறார்.

    தலைகீழாக நின்றாலும் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வரமுடியாது, எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வர அமமுகவும் விடாது. கரூர் துயரத்தில் ஆளுங்கட்சியை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது மோசம், பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது.

    இபிஎஸ்-க்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை.

    கரூர் துயர சம்பவத்தை சதி என அண்ணாமலை கூறியது வருத்தம் அளிக்கிறது. வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி பேசுவது அநாகரீகமாக தான் உள்ளது. கூட்டணி குறித்து பேசும் நேரமா இது.

    புரட்சி வெடிக்கும் என்ற தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பதவி பொறுப்பற்றது. கரூர் விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதானமாக கையாளுகிறார்.

    கரூர் விவகாரத்தை முதலமைச்சர், காவல்துறை சரியாக கையாண்டுள்ளனர். எந்த தலைவனும் தனது கட்சி தொண்டன் இறப்பதை விரும்ப மாட்டார் என்ற முதல்வரின் கருத்து சரியே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×