என் மலர்
நீங்கள் தேடியது "ராஜ்கமல் பிலிம்ஸ்"
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.
இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.
ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்பட்டது.
இதற்கிடையே, ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.
இத்தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ரஜினி- கமல்- சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அறிவிப்பு ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.
1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக 'அருணாச்சலம்' படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

- நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல்' பிலிம்ஸ் பல படங்களை தயாரித்து வருகிறது.
- போலியான விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை செலுத்தியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்ட இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் கமல்ஹாசனின் 'ராஜ்கமல்' பிலிம்ஸ் பல படங்களை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று போலி விளம்பரம் ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வந்தது. இந்த விளம்பரத்தை நம்பி பலர் பணத்தை செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி சி.இ.ஓ நாராயணன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

கைது செய்யப்பட்ட சுதாகர் மற்றும் புகழேந்தி
இந்நிலையில், கடலூரை சேர்ந்த புகழேந்தி மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்த சுதாகர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களை விசாரணை செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் பல வாட்ஸ்அப் குழுக்கள் வைத்து டிரெய்டிங் ஆலோசகராக செயல்பட்டு வந்துள்ளனர். இதில் பலர் பணத்தை இழந்ததால் இந்த பணத்தை மீட்பதற்கு இவர்கள் போலியான விளம்பரம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோன்று பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி விளம்பரங்களை பரப்பி சுமார் மூவாயிரம் பேரிடம் ரூ.10 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்களை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.






