என் மலர்
நீங்கள் தேடியது "International Day Of Yoga"
+2
- தன்னுடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்த இளைஞர்களுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
- 11-வது யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
விசாகப்பட்டினம்:
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் யோகா கலையை உலக அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதற்காக இந்தியா சார்பில் ஐ.நா. சபையிடம் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்தது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று (சனிக்கிழமை) காலை கொண்டாடப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு இந்த தினத்தை கொண்டாடும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 191 நாடுகளில் 1,300 இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்த இந்திய கலாச்சார தொடர்பு மையத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
யோகா கலை தோன்றிய இந்தியாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் யோகா நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதாவது ஒரு நகரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதை வழக்கத்தில் வைத்துள்ளார். அதன்படி இன்று அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக அவர் நேற்று பீகார், ஒடிசா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இரவே விசாகப்பட்டினத்துக்கு வந்து தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரைக்கு வந்தார். அங்கு அவர் யோகா பயிற்சி செய்வதற்கு சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய தயார் நிலையில் இருந்தனர்.
காலை 6 மணிக்கு யோகா பயிற்சி தொடங்கியது. இளைஞர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி யோகா பயிற்சி செய்தார். பல்வேறு வகையான யோகாசனங்களை அவர்கள் ஒருங்கிணைந்து செய்தனர். ஒவ்வொரு யோகாசனத்தின் போதும் பிரதமர் மோடி அமைதியான முறையில் செய்தார்.
அவரை சுற்றி இருந்த இளைஞர்களும் யோகா பயிற்சியை நேர்த்தியுடன் செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி நடைபெற்றது. பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
யோகா பயிற்சி முடிந்ததும் பிரதமர் மோடி உரையாற்றினார். பிறகு அவர் தன்னுடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்த இளைஞர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். முன்னதாக 11-வது யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மிக பிரமாண்டமான யோகா நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இது உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது. அதற்கு ஏற்ற வகையில் விசாகப்பட்டினத்தில் இன்று மிக விரிவான அளவுக்கு யோகா பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
யோகா நிகழ்ச்சி நடைபெற்ற ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் என்ற பகுதி வரை சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் மற்றும் சாலையையொட்டிய பகுதிகளில் யோகா பயிற்சிகள் செய்ய அரங்குகளும், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்த பகுதிகளில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து யோகா செய்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 லட்சத்து 20 ஆயிரம் பேரும் எளிதாக வந்து செல்வதற்கு விசாகப்பட்டினம் நகருக்குள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அந்த பஸ்கள் மூலம் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், பணிபுரிபவர்கள் மிக எளிதாக தங்களுக்கு ஒதுக்கப் ட்ட பகுதிக்கு சென்று வந்தனர்.
இவர்கள் யோகா பயிற்சி செய்வதற்கு தேவையான யோகா விரிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்காக 5 லட்சம் யோகா விரிப்புகளை ஆந்திர மாநில அரசு விசாகப்பட்டினத்தில் நேற்று தயார் நிலையில் வைத்தது குறிப்பிடத்தக்கது.
விசாகப்பட்டினம் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களது வருகையை பதிவு செய்தனர். இதற்காக தனி வலைதளம் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா கூறி இருந்ததால் யோகா பயிற்சிக்கான மாற்று ஏற்பாடுகளையும் ஆந்திர அரசு செய்து இருந்தது.
3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பிரதமர் மோடி ஒரே பகுதியில் இருந்ததால் விசாகப்பட்டினத்தில் ஆர்.கே. கடற்கரை பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. யோகா பயிற்சி நடைபெற்ற 26 கிலோ மீட்டர் தொலைவும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு படையும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த 26 கிலோ மீட்டர் தூரத்துக்கும் சாலையின் இரு பகுதிகளிலும் 1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பார்வையாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். அந்த பகுதியில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
யோகா நிகழ்ச்சியை சமூக விரோதிகள் சீர்குலைத்து விடக்கூடாது என்பதற்காக விசாகப்பட்டினத்தில் உயர் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டு இருந்தது.
- இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி.
- மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இதையொட்டி தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்றைய தினம் எனது இல்லத்தில் யோகா பயிற்சி மேற்கொண்டதில் மகிழ்ச்சி.
நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஐநா சபை, நமது பாரத நாட்டின் அடையாளங்களில் ஒன்றான யோகாசனத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
யோகா பயிற்சிகள், உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மன ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நல்வாழ்வை மேம்படுத்துவதை , உலக நாடுகள் உணர்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில், மக்கள் பலரும் யோகாவை தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளனர்.
யோகா பயிற்சி செய்வது வழக்கமான உடற்பயிற்சியைத் தாண்டி, உடல் மற்றும் மன நல்வாழ்வை மேம்படுத்துவதோடு, சுவாசத்தை சீரமைப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது என, அன்றாட வாழ்வை மேம்படுத்துகிறது.
அனைவரும் யோகாசனம் செய்வோம். நமது உடலையும், உள்ளத்தையும் மேம்படுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
- வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண்.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
யோகா மனிதர்களுக்கு காலம் கொடுத்தக் கொடை. வாழ்க்கை முறை மாற்றங்கள், மன அழுத்தங்கள் ஆகியவற்றால் உடல் நலனுக்கு கேடு வராமல் தடுக்கும் அரண். ஆரோக்கியம் காக்கும் அருமருந்து யோகா கலைக்கு ஈடு இணை எதுவுமில்லை. விலையில்லா மருத்துவக் கலையான யோகாசனத்தை நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்; உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை தாம்பரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
- கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை தாம்பரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று எல்.முருகன் யோகா செய்தார்.
இதையடுத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இருக்கும்.
* தோல்வி பயத்தில் கீழடி, தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க. கையில் எடுத்துள்ளது.
* கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
* அடிமைப்படுத்திய ஆங்கில மொழியில் இருந்து வெளியே வரவேண்டும் என்றுதான் அமித்ஷா கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டேராடூனில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று யோகா செய்தார்.
- பரிதாபாத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. யோகா தினத்தையொட்டி நாடு முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் எல்லாம் காலை முதல் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. யோகா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும் பங்கேற்று யோகா செய்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து பொதுமக்களுடன் இணைந்து அவர் யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று யோகா செய்தார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் யோகாசனம் செய்தனர்.
டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா யோகா செய்தார்.
அகர்தலாவில் திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா யோகா செய்தார்.
லண்டனில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்யில் பங்கேற்று யோகா செய்த பொதுமக்கள்.
நெல்லையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரெயில் பாலமான செனாப் ரெயில் பாலத்தின் அருகில் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிவில் நிர்வாக அதிகாரிகள், வடக்கு ரெயில்வே, சிஆர்பிஎஃப், உள்ளூர்வாசிகள் மற்றும் யோகா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் செனாப் பள்ளத்தாக்கின் அமைதியான நிலப்பரப்பில் ஆசனங்களைச் செய்தனர்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பையில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.
சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. அவர் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.
உத்தரபிரதேசம் மாநிலம் மதுராவில் பா.ஜ.க. எம்.பி. ஹேமா மாலினி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவர் கூறுகையில், அனைவரும் யோகா செய்ய வேண்டும். யோகா நம் வாழ்க்கைக்கு முக்கியமானது, மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நான் எப்போதும் அதைச் செய்கிறேன். எனக்கு ஒரு சிறிய முழங்கால் பிரச்சனை உள்ளது. மேலும் சில ஆசனங்களை என்னால் சரியாகச் செய்ய முடியவில்லை, ஆனால் நான் யோகா செய்கிறேன் என்று கூறினார்.
தெலுங்கானாவில் மத்திய அமைச்சர் வீரேந்திர குமார் ரங்கரெட்டி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அட்டாரி எல்லையில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பங்கேற்று யோகா செய்தனர்.
டெல்லியில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கூறுகையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் யோகாவை ஊக்குவித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆரோக்கியமாக இருக்க யோகா செய்வது மிகவும் முக்கியம் என்று கூறினார்.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, ஏராளமான பொதுமக்களுடன் சேர்ந்து, ஜெய்சால்மரில் யோகா செய்தார்.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் பிற இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் யோகா செய்தனர்.
- இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் எல்லாம் காலை முதல் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. யோகா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும் பங்கேற்று யோகா செய்தனர்.
இந்த யோகா நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்துவதற்கு, ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்து இருந்தது. ஆந்திராவில் இன்று 3 லட்சம் பேர் பங்கேற்கும் கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து பொதுமக்களுடன் இணைந்து அவர் யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்றார்.
- சர்வதேச யோகாசன தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள்.
- யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
சா்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சர்வதேச யோகாசன தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள். யோகா இன்று முழு உலகத்தையும் இணைத்துள்ளது பெருமைக்குரியது, மகிழ்ச்சி தருகிறது. யோகா அனைவருக்குமானது. அதற்கு எல்லைகள் கிடையாது.
யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. விசாகப்பட்டினத்தில் இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி விசாகப்பட்டினத்தில் நடந்த பிரமாண்டமான யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்த பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஐ.நா. சபை அறிவித்ததால் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாவை உலகம் முழுக்க இந்தியா கொண்டு சென்று இருக்கிறது. இதன் மூலம் உலகின் பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள் அல்ல. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய ஒரு அங்கமாக இருக்கிறோம். அந்த வகையில் உலகம் முழுக்க சென்றுள்ள யோகா பயிற்சி மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது.
இன்று யோகா உலகத்தையே இணைத்து இருக்கிறது. உலக மக்களை ஒற்றுமையாக இருக்க செய்ய யோகா வழிவகுக்கிறது. இதை நினைத்து பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கி றது. யோகா மூலம் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்.
தற்போது உலகில் ஆங்காங்கே மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் தீர்த்து வைக்கும் மிகப்பெரிய ஆயுதமாக யோகா திகழ்கிறது. இந்தியாவில் பல கோடி மக்களின் வாழ்க்கையை யோகா மாற்றி உள்ளது.
யோகா பயிற்சி செய்ய வயது, அனுபவம் என்று எதுவும் தேவையில்லை. யோகாவுக்கு எல்லைகளே கிடையாது. அதனால்தான் அது உலகம் முழுக்க தனது சிறகை விரித்துள்ளது. உலக மக்களை இணைக்கும் பாலமாக அது மாறி வருகிறது.
யோகா பயிற்சி உலகில் அமைதி நிலவுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் யோகா பயிற்சி சக்தி வாய்ந்த ஆயுதமாகும். யோகா செய்வதற்கு எந்த பின்னணியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திறன் இருந்தால் எல்லோரும் யோகா பயிற்சி செய்யலாம்.
இன்று உலகை இணைத்துள்ள யோகாவை பல கோடி மக்கள் தினமும் மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள். இது உலக மக்களுக்கு இந்தியா கொடுத்த பரிசும், அருமருந்தும் என்று சொல்லலாம். அந்த வகையில் நாம் யோகா பயிற்சியை புரட்சிகரமான ஒன்றாக மாற்றி இருக்கிறோம்.
யோகா பயிற்சி செய்யாதவர்கள் இன்று முதல் அந்த பயிற்சியை செய்ய தொடங்குங்கள். ஏற்கனவே நான் மனதின் குரல் நிகழ்ச்சியில் உடல் பருமன் பற்றி பேசி இருக்கிறேன். உணவில் எண்ணெய் சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.
இப்போது யோகா தினத்தை முன்னிட்டு நீங்கள் ஒவ்வொருவரும் தினமும் யோகா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுக்க பரவி வரும் யோகா பயிற்சியை நான் பார்த்துதான் வருகிறேன். அது என் மனதில் நிறைய மாற்றங்களையும், ஆச்சரியங்களையும் தருகிறது. 2015-ம் ஆண்டே மிக குறுகிய நாட்களில் 175 நாடுகளுக்கு யோகா பயிற்சியை கொண்டு சென்று சேர்த்தோம்.
2018-ம் ஆண்டு உலகம் முழுக்க சுமார் 10 கோடி பேர் ஜூன் 21-ந்தேதி யோகா பயிற்சி செய்தார்கள். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சுமார் 25 கோடியாக அதிகரித்து சாதனை படைத்தது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.
இப்படி உலகம் முழுக்க யோகா செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது உலகம் முழுவதும் ஒற்றுமையையும், ஆதரவையும் நிச்சயம் மேம்படுத்தும். இது சாதாரண செயல் அல்ல.
யோகா செய்தால் மனதில் இருக்கும் அழுத்தம் குறையும். ஈகோவை குறைக்கும். மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். இத்தகைய சக்தி வாய்ந்த யோகாவை அவசியம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
யோகா என்பது நமது மனதில் சமநிலையை கொண்டு வருவதற்கான ஒரு அற்புதமான பட்டன் ஆகும். இடைவெளியை ஏற்படுத்தி தரும் அந்த பட்டனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
- இன்று கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க தொல்லியல்துறை இன்று அனுமதி அளித்துள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்த புராதன சின்னங்கள் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் யோகா தொடர்பான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
புவனேஸ்வர்:
பிரதமர் நரேந்திர மோடி செல்லும் இடமெல்லாம் உடல் நலன் குறித்துப் பேசிவருகிறார். அப்படி, 2014-ம் ஆண்டு ஐ.நா.சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறி அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவளித்த நிலையில், 2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா.சபை அறிவித்தது.
சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த பண்டைய நடைமுறையை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்றுக்கொள்ள ஊக்குவிப்பதே சர்வதேச யோகா தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்கிடையே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரமாண்டமான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
அந்தச் சிற்பத்தில் பிரதமர் மோடி யோகா செய்வது போலவும், Yoga for One Nation One Health என குறிப்பிட்டுள்ளார்.
- யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது என்றும் மோடி தெரிவித்தார்.
- விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர்.
நியூயார்க்:
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
அவர்களோடு அமர்ந்து யோகாசனம் செய்த பிரதமர் மோடி, பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில், யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை என்றும் சீரான வாழ்க்கையை தரக்கூடியது என்றும் தெரிவித்தார்.
'யோகா இந்தியாவில் தோன்றிய மிகவும் பழமையான பாரம்பரியம். யோகா என்பது உண்மையில் உலகளாவியது. பதிப்புரிமை,காப்புரிமைகள், ராயல்டி என எதுவும் இல்லாதது. யோகா என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. யோகாவின் சக்தி என்ன என்பதை உலகத்திற்கு தெரிவிப்போம். விஞ்ஞானிகளும் அறிவியல் ரீதியாக யோகா உடலுக்கு நன்மை தரக்கூடியது என கூறி உள்ளனர். யோகாவை தனி நபராகவோ குழுவாகவோ சேர்ந்து செய்யலாம். எங்கள் வளர்ச்சிக்கு எங்களுடன் ஒத்துழைக்கும் அனைத்து நாடுகளுக்கும் நன்றி' எனவும் பிரதமர் மோடி பேசினார்.
- புல்வெளியில் அமர்ந்து அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.
- ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றிருப்பதாக பிரதமர் மோடி பேசினார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் இன்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
மேடையில் யோகா கலைஞர்கள் யோகாசனங்களை செய்ய, புல்வெளியில் அமர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் யோகாசனம் செய்து பிரமிக்க வைத்தனர்.
இந்த யோகாசன நிகழ்ச்சியானது, கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி என்ற உலக சாதனையை படைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக யோகா நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வருகை தந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உங்கள் அனைவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறிய மோடி, ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களும் இன்று இங்கே வந்திருப்பதை பார்க்க முடிகிறது, என்றார்.
- கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று நடக்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும் 75 நகரங்களில் யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மைசூரு:
ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை 2015ல் அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நம் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுதும், 75 நகரங்களில் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள அரண்மனையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி செய்தார்.






