search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yoga Day"

    • புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் பொறியியல்-தொழில் நுட்பக்கல்லூரியில் சர்வதேச யோகாதினம் கொண்டாடபட்டது
    • இதில் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

    புதுக்கோட்டை,

    மவுண்ட்சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நு ட்பக்கல்லூரி யில் சர்வதேச யோகாதினம் அனுசரிக்கப்பட்டது. மவுன்ட்சியோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியின் இயக்குநர் முனைவர் ஜெய்சன் ஜெய பரதன் வழிகாட்டுதலின் கீழ், கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா ஆசிரியர் ஜெயசீலன் மேற்பார்வையின் கீழ் 50 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஆரோக்கியம் மற்றும் சுய முன்னே ற்றத்திற்கான அர்ப்ப ணிப்பில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணி யாளர்களை ஒன்றி ணைக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாக இந்த சர்வதேச யோகாதினம் அமைந்தது. வாழ்க்கையை நேர்மறை யாக மாற்றுவதற்கும் ஆரோக்கியமான மற்றும் இணக்கமான உலகத்தை உருவாக்குவதற்கும் யோகாவின் ஆற்றலை நினைவூட்டுவதாக இந்த நிகழ்வு அமைந்தது. உடற்கல்வி இயக்குனர், செல்வகண்ணன் நன்றி தெரிவித்தார்.

    • கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார்.
    • பேராசிரியர் லிங்கத்துரை யோகாசனம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகாசன விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கத்திற்கு கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கி பேசினார். ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விலங்கியல் ஆய்வுத்துறை பேராசிரியர் லிங்கத்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகாசனம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் பப்பி வின்சென்ட் வரவேற்று பேசினார். தமிழ் பேராசிரியர் கதிரேசன் அறிமுக உரையாற்றினார். முடிவில் பேராசிரியர் ஸ்ரீஜா நன்றி கூறினார். இதில் மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசன செய்முறை பயிற்சி எடுத்துக் கொண்டனர்.

    • செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தின விழா நடந்தது.
    • புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    காரைக்குடி

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் யோகா தினவிழா நடந்தது. பள்ளி தாளாளர் சத்யன் தொடங்கி வைத்தார்.

    நிர்வாக இயக்குநர் சங்கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை தலைமை அதிகாரி சங்கர்குமார் ஜா கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில், ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை மேம்படுத்த யோகா உதவுகிறது. உலகெங்கிலும் யோகா தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    தொடர்ந்து விழாவில் மாணவர்கள் பல்வேறு ஆசனங்களை செய்து தனி திறமைகளை வெளிப்படுத்தினர். புது முயற்சியாக 300 பேர் இணைந்து யோக முத்திரை வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்.

    விழாவை பள்ளியின் கல்வி இயக்குநர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தார். முதல்வர் தேவராஜூலு நன்றி கூறினார்.

    • நாடார் வித்தியாசாலை பள்ளியில் யோகா தின கொண்டாட்டப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தியாசாலை பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் நகராட்சி முன்னாள் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவரது குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு பிராணிக் ஹீலிங் யோகா பயிற்சி அளித்தனர்.

    இதில் 700 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைவர் பார்த்திபன், உறவின்முறை துணை செயலாளர் அருஞ்சுணை ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.

    • கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • பயிற்சியில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அருகே கருமாத்தூரில் உள்ள அருள் ஆனந்தர் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. முதல்வர் அன்பரசு தலைமை வகித்தார். அதிபர் ஜான் பிரகாசம் வாழ்த்திப் பேசினார். கல்லூரி செயலர் அந்தோணிசாமி பேசுகையில் உடல்நலம், மனநலம் ஆரோக்கியமாக இருக்க தினந்தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல், உள்ளம், ஆன்மா இவைகளை பாதுகாக்கலாம் என்றார்.

    செல்லம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் புனிதா, செல்வக்குமார் ஆகியோர் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை நடத்தினர். இதில் உடற்கல்வியியல் துறை, தேசிய மாணவர் படை மற்றும் உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியில் அருட்தந்தையர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விதமான யோகா பயிற்சினை செய்தனர்.
    • யோகா ஆசிரியர் செந்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவை சிறப்பித்தார்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள நேஷனல் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் சார்பில் சர்வதேச யோகா தினவிழா நிகழ்ச்சி புதுக்குப்பம் கடற்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு விதமான யோகா பயிற்சினை செய்

    தனர். நிகழ்ச்சியை பள்ளியின் மேலாண் இயக்குநர் கிரண்குமார் தொடங்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் எழிலரசி மற்றும் தலைமை ஆசிரியை உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    யோகா ஆசிரியர் செந்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து விழாவை சிறப்பித்தார். ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள் செய்தனர்.

    • அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினம் கொண்டாட்டப்பட்டது.
    • கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் நந்தகுமார் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது ''யோகா என்றால் அலைபாயும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் ெசயல்'' உடல் மற்றும் மனதை ஒரு சமநிலைக்கு கொண்டு வர யோகா உதவுகிறது. படிப்பில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு தினமும் யோகா செய்வது நல்லது என்றார்.

    நிகழ்ச்சியில் கல்லூரியின் விளையாட்டுத்துறை, தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட அலகு, மாணவர் சேவை அலகு ஆகிய பிரிவைச்சேர்ந்த அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்து பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி மதனகோபால் செய்திருந்தார்.

    • உலகயோகா தினத்தை முன்னிட்டு 1000-த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ேயாகாசனம் செய்தனர்.
    • வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம்.

    நாகப்பட்டினம்

    நாகை அருகே உதவி கலெக்டர் தலைமையில் நடந்த உலக யோகா தின நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் யோகா செய்து அசத்தினர்.

    ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அருகே ஐசக் நியூட்டன் கல்லூரி வளாகத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் பானோத் ம்ருகேந்தர் லால் தலைமை தாங்கி, யோகாசனம் செய்தார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் கூறியதாவது:-

    யோகா பயிற்சிகளை செய்ய வேண்டியும், அதன் பயன்களை அனைவரும் பெறவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந்தேதி அன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    யோக பயிற்சிகளை செய்தால் உடல் நலன் மட்டுமின்றி, மன நலனும் மேம்படுகிறது. மனதை புத்துணர்ச்சி ஆக்குகிறது. எப்போதெல்லாம் யோக பயிற்சிகளை செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம் மனதை ஒருநிலைப்படுத்தி கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம்.

    மாணவ- மாணவிகளுக்கு ஒழுக்கம் என்பது முக்கியமானதாகும். சிறு வயதில் இருந்தே ஒழுக்கத்தை கடைப்பிடித்தால், என்னை போன்று உயர் பதவிக்கு வரலாம் என்றார். நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஆனந்த் உள்பட 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    • தலைமை ஆசிரியர் நன்மைகள் குறித்து விளக்கிக் கூறினார்
    • ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்

    போளூர்:

    ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துரிஞ்சுக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் யோக தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்து காட்டினர்.

    பள்ளியின் தலைமை ஆசிரியர் மன்னர் சாமி யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் உடல் ஆரோக்கியம், மன அமைதி, உற்சாகம் கொடுத்தல், மனதை ஒருமுகப்படுத்துதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்று விளக்கிக் கூறினார்.

    இதனை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் பார்வையிட்டார். இதில் உதவி ஆசிரியர்கள் அருள் வைத்தியநாதன் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் பள்ளியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
    • இயன்முறை மருத்துவர் புனிதா தொடக்க உரையாற்றி மாணவர்களின் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் பள்ளியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் தவமணி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இயன்முறை மருத்துவர் புனிதா தொடக்க உரையாற்றி மாணவர்களின் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பாசிரியை சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியர்கள் மகேஸ்வரி, முத்துலட்சுமி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • யோகா பயிற்சியாளர் சுமதி பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டினார்.
    • பேராசிரியர் கனகாம்மாள் யோகாவின் அவசியம் குறித்து பேசினார்.

    ஊட்டி,

    ஊட்டி ஜே.எஸ்.எஸ். கல்லூரியில் சர்வதேச யோகா தினம், முதல்வர் எஸ்.பி.தனபால் தலைமையில் நடந்தது. இதில் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.

    அப்போது பயிற்சியாளர் சுமதி பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டி, பயிற்சி வகுப்புகளை நடத்தினார். இதனை தொடர்ந்து அரசு கலை கல்லூரி பேராசிரியர் கனகாம்மாள் நோயற்ற வாழ்வுக்கு யோகாவின் அவசியம் குறித்து விரிவாக பேசினார்.

    • ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 9-வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • வேல்முருகன் யோகா கலையில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம், மணவெளி, ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 9-வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    விழாவில் பதஞ்சலி யோகா மையத்தின் இயக்குனர்வேல்முருகன் யோகா கலையில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார். யோகா உடல், மனநலத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி பள்ளி முதல்வர் பெர்லின் ஜெயக்குமார் எடுத்து ரைத்தார்.

    யோகா கலையை நடைமுறை வாழ்வில் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை பள்ளி ஆசிரியை மாலா விளக்கிக் கூறினார்.

    விழா வினை ஆசிரியர்கள் பரமேஸ்வரி, ஆலிஸ், மணிமேகலை, சிவகங்கா, ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பள்ளி ஆசிரியை லீமா ரோஸ் நன்றி கூறினார்.

    ×