என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் தி.மு.க.வுக்கு தோல்வி- அண்ணாமலை பேட்டி
- தமிழ்நாட்டில் இன்று 1200 இடங்களில் யோகா திருவிழா நடைபெறுகிறது
- தமிழகத்தில் 39 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறுவது நிச்சயம்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் இன்று 1200 இடங்களில் யோகா திருவிழா நடைபெறுகிறது. யோகக்கலையின் மையப் புள்ளி தமிழ்நாடு தான். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 39 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறுவது நிச்சயம்.
திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் வரவில்லை. இதில் இருந்து அகில இந்திய அளவில் தி.மு.க.வுக்கு மரியாதை இல்லை என்பது தெரிகிறது. நிதிஷ்குமார் தமிழகம் வராமல் இருந்தது தி.மு.க.வின் எதிர்க்கட்சி ஒருங்கிணைப்புக்கு கிடைத்த தோல்வி ஆகும்.
செந்தில் பாலாஜி விஷயத்தில் தமிழக மனித உரிமை ஆணையம் தி.மு.க.வின் ஆணையமாக செயல்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை அரசு ஆஸ்பத்திரியில் இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளது. அப்படியானால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் தரம் இல்லையா? இதனை மக்கள் கவனித்து வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்