search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free entry"

    • 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை.
    • இதில் இந்தியாவும் அடங்கும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி எஸதுல்லாஹ் சர்காமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.

    • கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் பொருட்காட்சி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.
    • பொருட்காட்சியை பள்ளி மாணவர்கள் இலவசமாக காணும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் முதல் முறையாக அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகில் சிவன் கோவில் மைதானத்தில் பிரமாண்டமான லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி கடந்த 23-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

    கண்கவர் பொழுது போக்கு அம்சங்களுடன் நடக்கும் பொருட்காட்சி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.

    கண்காட்சி மைதான முகப்பில் உள்ள லண்டன் பிரிட்ஜ் பொதுமக்களை பெரிதும் கவரும் வகையில் உள்ளது. அதில் பொதுமக்கள் ஏறி செல்பி எடுத்து மகிழ்கின்றனர். துபாயில் உள்ள அல்அராபா லோட்டஸ், ரிப்பன் பில்டிங்க் ஆகியவை வண்ண வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன.

    3டி செல்பி புகைப்படங்கள் ஏராளமாக உள்ளன. ஆதிவாசிகள் வாழ்க்கை முறை, இயற்கை அங்காடி, குட்டியை சுமந்தபடி இருக்கும் கங்காரு, பாண்டா கரடி, வரிக்குதிரை, மான்கள், சிங்கம் உள்ளிட்ட வனவிலங்குகள் அழகாக வடிவமைக்கப்பட்டு குழந்தைகளை கவரும வகையில் உள்ளது.

    மேலும் பொருட்காட்சியில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பர்னிச்சர், பேன்சி பொருட்கள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    சிறுவர்களுக்கான நீச்சல் குளம், பொருட்காட்சி திடலை சுற்றி வரும் ரெயில், தொங்கும் பாலம், ராட்டினம் போன்ற பொழுது போக்கு விளையாட்டுகளும், டெல்லி அப்பளம், வாழைத்தண்டு சூப், ஜிகர்தண்டா போன்ற சுவையான திண்பண்டங்கள் கடைகளும் பொருட்காட்சி யில் இடம்பெற்றுள்ளன.

    பொருட்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது. நுழைவு கட்டணமாக ரூ.70 செலுத்தி டிக்கெட் பெற்று பொருட்காட்சியை கண்டு ரசிக்கலாம்.

    பொருட்காட்சியை பள்ளி மாணவர்கள் இலவசமாக காணும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக இலவச பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பாசை கொண்டு வந்து மாணவர்கள் பொருட் காட்சியை பார்வை யிடலாம் என பொருட்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது.
    • நினைவுச் சின்னம், அருங்காட்சியகங்களை பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களைப் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ×