என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world heritage week"

    • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
    • நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை நாளை கட்டணமின்றி சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவதாக தொல்லியல்துறை அறிவித்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    அந்த வகையில், நாளை உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாக சுற்றிப்பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • மாமல்லபுரம் புராதன சின்னங்களை கட்டணமின்றி பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மதுரை திருமலை நாயக்கர் மகாலை ஒருவார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    உலக பாரம்பரிய வாரம் நவம்பர் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கைள இன்று ஒருநாள் மட்டும் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னமான கடற்கரை கோவில், கலங்கரை விளக்கம், 5 ரதம் உள்ளிட்டவைகளை காண கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் உலக பாரம்பரிய வாரத்தையொட்டி இந்த புராதனச் சின்னங்களை இலவசமாக பார்க்க அனுமதித்து தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல், மதுரை திருமலை நாயக்கர் மஹாலை ஒரு வார காலம் கட்டணமின்றி பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    ×