என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தோல்வி பயத்தில் கீழடி, தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க. கையில் எடுத்துள்ளது - எல்.முருகன்
    X

    தோல்வி பயத்தில் கீழடி, தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க. கையில் எடுத்துள்ளது - எல்.முருகன்

    • சென்னை தாம்பரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுக்கு இல்லை.

    உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

    சர்வதேச யோகா தினத்தையொட்டி சென்னை தாம்பரத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று எல்.முருகன் யோகா செய்தார்.

    இதையடுத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் இருக்கும்.

    * தோல்வி பயத்தில் கீழடி, தொகுதி மறுசீரமைப்பை தி.மு.க. கையில் எடுத்துள்ளது.

    * கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுக்கு இல்லை.

    * அடிமைப்படுத்திய ஆங்கில மொழியில் இருந்து வெளியே வரவேண்டும் என்றுதான் அமித்ஷா கூறினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×