என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2026-ல் தி.மு.க., ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு- சத்யராஜ்
    X

    2026-ல் தி.மு.க., ஆட்சி அமைந்தால்தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு- சத்யராஜ்

    • விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும்.
    • வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் மதத்தால் பிரிந்தாலும் மனதால் இணைவோம் என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    விஞ்ஞானத்தை பயன்படுத்தினால் தான் நன்றாக வாழ முடியும். மதத்தால் சண்டையிட்டால் வாழ முடியாது. என்றும் மத நல்லிணக்கம் என்பது தான் முக்கியம். குரங்கை விட மோசமானவனாக மனிதன் உள்ளான். பள்ளியில் படிக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் கிடையாது. நான் பெரியார் புத்தகங்களை படித்த பிறகு தான் கடவுள் என்பது கற்பனை என உணர்ந்தேன்.

    திருப்பூர் எவ்வளவு வளர்ந்து உள்ளது. ஆனால் அமெரிக்காகாரன் திடீரென ஆப்பு வைத்து விட்டான்வடமாநில இளைஞர்களிடம் உங்கள் ஊருக்கு செல்கிறீர்களா? என கேட்டால் அவர்களுக்கு கோபம் வந்து விடும். அந்த அளவுக்கு அவர்கள் இங்கு சிறப்பாக உள்ளனர்.

    மும்பையில் பீப் ஸ்டால் இல்லை. அங்கு அவ்வளவு கொடுமை உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டி தான் பேசி வருகிறார்கள். இந்தி எதிர்ப்பு மகாராஷ்டிராவிலும் வளர்ந்துள்ளது. இந்தியாவிற்கு தமிழ்நாடு தான் முன்மாதிரியாக உள்ளது. 2026ல் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை தற்போது மிக அவசிய மாகிறது.

    தமிழகத்தில் நீதிக்கட்சி முதல் தி.மு.க., ஆட்சி வரை சமூக நீதி ஆட்சி நடை பெறுகிறது. வடமாநிலங்களில் இன்னும் பெண்ணடிமை, சாதிய மோதல் நிறைந்துள்ளன. தமிழ்நாட்டு சிந்தனைகள்தான் இன்று நாடு முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. எனக்கு சினிமா மார்க்கெட் உள்ளது. பணம் உள்ளது. யார் ஆட்சி வந்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. 2026ம் ஆண்டு தி.மு.க., ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு பாதுகாப்பு.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×