என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A.D.M.K"

    • சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது.
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் பல கட்சிகள் இணையும்.

    கோவை:

    பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    பா.ஜ.க என்பது ஜனநாயக ரீதியில் இயங்கூடிய ஒரு கட்சி. பா.ஜ.க தலைவராக இருந்த அண்ணாமலை தனது பதவியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். கட்சி பணியிலும் சரி, தேர்தல் பணியிலும் சரி அவர் சிறப்பாகவே தனது பணியை செய்துள்ளார்.

    பா.ஜ.க தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் ஏற்கனவே அமைச்சர், எம்.எல்.ஏ.வாக இருந்தவர். கட்சி விரிவுபடுகிற போது கட்சியில் இணைபவர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அவர்களின் செயல்பாட்டை பா.ஜ.க. பார்த்து வருகிறது. நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. கட்சி சிறப்பாக செயல்படும். அவரது செயல்பாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

    நான் மாநில தலைவராக அல்ல, தேசிய தலைவராக இருக்கிறேன். இந்தி தெரியாத எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கிறது பா.ஜ.க. பொறுப்பு வேண்டும் என்று நானாக எப்போதும் கேட்டதில்லை. கட்சி கொடுக்கும் பணிகளை செய்கிறேன்.

    தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்படும். இந்த கூட்டணியின் ஒரே நோக்கம் 2026-ல் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்புவது தான்.

    2026-ம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்போம். கூட்டணி ஆட்சி பற்றி தலைவர்கள் முடிவு செய்வார்கள்.

    சட்டசபையில் நான் பேசும் போது மட்டும் மைக் ஆப் செய்யப்பட்டு வருகிறது. மற்ற கட்சி தலைவர்கள் பேசும் போது அவர்களின் பேச்சு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஆனால் நான் பேசுவது மட்டும் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. சட்டசபையில் பேரவை தலைவரின் செயல்பாடு திருப்தியாக இல்லை.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் 6 மாதத்தில் மேலும் பல கட்சிகள் இணையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தர்காவில் நடந்த உரூஸ் விழாவில் ஜோதிமணி எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அரசு ஆஸ்பத்திரிக்கு குளிர்சாதன பெட்டி, கடிகாரம் வழங்கினார். பின்னர் முன்னாள் எம்.எல்.ஏ. தண்டபாணி, வேடசந்தூர் வட்டார தலைவர் சதீஸ் தாயார் செல்லம்மாள், காங்கிரஸ் கட்சி நிர்வாகி பழனியப்பன் ஆகியோர் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றியம் வாரியாக நூலகங்களுடன் இணைந்து பொதுத் தேர்வுகளுக்கான அறிவுசார் மையம் தொடங்கப்பட உள்ளது. பள்ளிகளுக்கு அடுத்தபடியாக அரசு ஆஸ்பத்திரி தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

    தொகுதியில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் தொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்ட திருத்தம் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

    நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக தமிழக ஆளுனருக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாகும். அரசியல் சாசனத்தை மதிக்கும் ஆளுனராக இருந்தால் இந்நேரம் ஆர்.என்.ரவி ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    ஆனால் இதுவரை அவ்வாறு செய்யவில்லை. பா.ஜ.க.வுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் அதனை திசை திருப்பும் செயலில் சீமான் ஈடுபட்டு வருகிறார். பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து அந்த கட்சியை காலி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எனக்கு எந்த சம்மனும் வரவில்லை.
    • எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.

    நெல்லை:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நெல்லை மாவட்டத்தில் பாளை வ.உ.சி மைதானத்தில் தொடங்கியது.

    இதனை சபாநாயகர் அப்பாவு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை. எனினும் எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.

    அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'.
    • அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெண்ணின் விடுதலையைப் பறைசாற்றியதில் மகாகவி பாரதிக்குப் பெரும் பங்கு உண்டு. பெண்ணின் விடுதலைக்காக அவர் எழுச்சியூட்டும் வகையில் பாடிய பாடல் வரிகளை உள்வாங்கி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றையெல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா.

    "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்தை முழங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையிலான பொற்கால ஆட்சியில், பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம். அனைத்து மகளிர் காவல் நிலையங்கள். பெண் கமாண்டோ படை. பெண்களின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம்.

    தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம். மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு.பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு. நாட்டிலேயே முதன் முறையாக பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம்.

    கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம். மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம். அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம். பெண் உடல் எடை பரிசோதனைத் திட்டம்.

    பெண்களுக்கான மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், மகப்பெறு உதவித் தொகையை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியது. பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தியது.

    பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம். அம்மாவின் பெயரை இன்ஷியலாகப் பயன்படுத்தலாம். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்திட 'காவலன் செயலி' திட்டம். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்ச திட்டம்.

    இந்தியாவிலேயே, தமிழ் நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், பெண்களின் நலன்களுக்காகவும் சிறப்பான திட்டங்களை அறிவிப்ப தில் முதன்மையாகத் திகழ்ந்தவர் பஅம்மா தான் என்பதை நான் இங்கு பெருமையோடு நினைவு கூறுகிறேன்.

    இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர். இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணா கவும், புரட்சிப் பெண்ணாகவும் விளங்கி வருகின்றார்கள். பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்! என்ற வாழ்த்துதலோடு, மீண்டும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×