என் மலர்
நீங்கள் தேடியது "டிகேஎஸ் இளங்கோவன்"
- தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.
- அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.
காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், அண்ணாவை தற்போது தி.மு.க.வினர் மறந்தவிட்டனர். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தி.மு.க. மீது த.வெ.க. தலைவர் விஜய் அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
இதுதொடர்பாக தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
* விஜய்க்கு அண்ணாவை பற்றி தெரியாது, அண்ணா முதலமைச்சராக வேண்டும் என கட்சி ஆரம்பிக்கவில்லை.
* மக்களுக்காக போராடுவேன் என கூறி கட்சி தொடங்கி சிறை சென்றவர் அண்ணா.
* முதல் தேர்தலில் முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணத்தோடு விஜய் வந்துள்ளார்.
* தி.மு.க.வினர் கொள்கைக்காக சிறைக்கு சென்றவர்கள்.
* அண்ணாவின் கொள்கைகளை தான் தி.மு.க. தற்போது வரை நிறைவேற்றி வருகிறது.
* கட்சி பதவிக்காக கொள்ளை அடிப்பதாக த.வெ.க.வினரே குற்றம்சாட்டுகின்றனர்.
* மெட்ரோவிற்கு அனுமதி கொடுக்காத பா.ஜ.க.வை எதிர்த்து விஜய் பேசாதது ஏன்?
* தமிழ்நாட்டு பிரச்சனை பற்றி என்ன பேசியிருக்கிறார் விஜய்?
* பா.ஜ.க.வின் அடிமையாக விஜய் உள்ளார் என்றார்.
* தன்மீது தவறு இருப்பதால் விஜய் கரூர் விவகாரம் குறித்து ஒருபோதும் பேசமாட்டார்.
* கரூர் கூட்டத்திற்கு விஜய் தாமதமாக வந்தது தான் உயிரிழப்புகளுக்கு காரணம் என்றார்.
- சில அதிமுக தொண்டர்கள் த.வெ.க. கொடியை பிடித்திருந்தனர் எனச் சொன்னது மற்றும் சரியானது.
- விஜய் முதல்வராக விரும்புகிறார் என்பதால் த.வெ.க. தொண்டர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் த.வெ.க. கொடி பறந்ததை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு உள்ளதாக பேசினார்.
இதையடுத்து கூட்டத்தில் த.வெ.க. கொடிகளை வைத்திருந்தவர்கள் த.வெ.க.வினர் இல்லை. அ.தி.மு.க. இளைஞர்கள் என தெரியவந்தது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அ.தி.மு.க. டி-ஷர்ட் அணிந்தபடி த.வெ.க. கொடியை இளைஞர்கள் அசைத்துள்ளனர்.
அந்த இளைஞர்களைப் பார்த்து "கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க" என இ.பி.எஸ். பேசினார் என்பது தெரிய வந்தது.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் "தன் கட்சி தொண்டர்களை வைத்தே த.வெ.க. கொடியை தூக்கிப் பிடிக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதில் இருந்தே தெரிகிறது விஜயின் தலைமையை ஏற்று கூட்டணிக்கு செல்ல எடப்பாடி பழனிசாமி தயாராகி விட்டார். அந்த அளவிற்கு அ.தி.மு.க. பலவீனமாகி விட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார். த.வெ.க. தலைவர் விஜய் கூட்டணி வருவார் என்றால் பா.ஜ.க.வை எடப்பாடி பழனிசாமி கழற்றி விடுவார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா விஜய் கட்சி தொடங்கி உள்ளார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தற்போது பலமிழந்து காணப்படுகிறது. இந்த கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில் த.வெ.க. கொடி, எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டத்தில் பறந்து தொடர்பாக டி.டி.வி. தினகரன் விமர்சித்தது குறித்து திமுக nசய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு இளங்கோவன் பதில் அளிக்கையில் "அவர் என்ன நினைக்கிறார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், சில அதிமுக தொண்டர்கள் த.வெ.க. கொடியை பிடித்திருந்தனர் எனச் சொன்னது மற்றும் சரியானது. அவர்கள் தவெக தொண்டர்கள் இல்லை.
அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள். ஏனென்றால், விஜய் முதல்வராக விரும்புகிறார் என்று சொல்கிறார். ஆகவே, எடப்பாடி பழனிசாமி இந்த கண்டிசனை ஏற்பாரா?. அவர் விஜயை முதலமைச்சராக்குவாரா?" என்றார்.
- தற்போது அதிமுக, குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினரை பாதுகாக்க விரும்புகிறார்.
- அவர்கள் பாஜக-வின் அடிமையாகிவிட்டார்கள்.
சென்னை துறைமுகம், எழும்பூர் தொகுதிகளின் பாக முகவர்கள் மற்றும் இளைஞர் அணியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இளைஞரணிச் செயலாளர் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது உதயநிதி "எப்படியாவது காவிக்கு இங்கு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. கருப்பு, சிவப்பு வேஷ்டி அணிந்திருக்கிற தி.மு.க.வினர் இருக்கின்ற வரைக்கும் தமிழ்நாட்டிற்குள் காவியை தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டிற்குள் நுழைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை எப்படியாவது பறித்துவிட முடியாதா? என்று தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார்கள். தொகுதி மறுவரையறை என்று சொல்லி தமிழ்நாட்டில் இருக்கிற 39 எம்.பி. தொகுதிகளை 31 தொகுதியாக குறைப்பதற்கான முயற்சியிலும் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபட்டு இருக்கிறது.
தேர்தல் வந்தவுடன் தி.மு.க., தமிழ்நாட்டு மக்களின் வீட்டுக் கதவுகளை தட்டுகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்கிறார். நாங்கள் ஒன்றும் உங்களை மாதிரி அமித் ஷா வீட்டுக் கதவையோ, கமலாலயம் கதவையோ திருட்டுத்தனமாக சென்று தட்டவில்லை.
எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு செய்து இருக்கிற திட்டங்களின் உரிமையுடன் சென்று ஒவ்வொரு வாக்காளரையும், தைரியமாக சென்று சந்தித்து கொண்டு இருக்கிறோம். உங்களால் சந்திக்க முடியுமா? எனவே நிச்சயம் நம்முடைய கூட்டணிதான் வெற்றி பெறும்" எனப் பேசினார்.
எப்படியாவது காவிக்கு இங்கு பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முயற்சி செய்து கொண்டு இருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது தொடர்பாக திமுக செய்தி தொர்பாக டி.கே.எஸ். இளங்கோவனிடம கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதில் அளித்து கூறியதாவது:-
அதிமுக மூலமாக பாஜக தமிழ்நாட்டில் நுழைய விரும்புகிறது. அவர்கள் கூட்டி பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தனியாக நின்றால் வெற்றி பெற முடியாது. தற்போது அதிமுக, குறிப்பாக எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தினரை பாதுகாக்க விரும்புகிறார். அவர்கள் பாஜக-வின் அடிமையாகிவிட்டார்கள். தமிழக மக்கள் அதிமு-பாஜக கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் கருப்பு சிகப்பு தமிழகத்தில் உள்ளது. காவிக்கு இடமில்லை.
1999-ல் நாங்கள் பாஜக-வில் இணைந்தபோது, அது ஒரு நிலையற்ற அரசாங்கமாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குள், 3 தேர்தல்கள் நடந்தன. இனிமேல் பாஜகவுடன் எந்த தொடர்பும் இருக்காது என்று ஜெயலலிதா திட்டவட்டமாகக் கூறியிருந்தும், எடப்பாடி பாஜக-வின் காலில் விழுந்துவிட்டார். ஏனென்றால் பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ளது, மேலும் ED போன்ற நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
- வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள்.
- மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை பொதுத் தேர்தலுக்கு பிறகு வெற்றி பெறும் கட்சிகள் தனித்து ஆட்சி அமைக்குமா? கூட்டணி ஆட்சி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே பேசும் பொருளாகி விட்டது.
ஆளும் கட்சியான தி.மு.க. 200 தொகுதிகளை வெல்ல இலக்கு நிர்ணயித்து உள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி என்று தி.மு.க. தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் வரும். அதில் காங்கிரசார் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள் என்றும் பேசி வருகின்றனர்.
திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பேசும் போது, 'நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் மந்திரி சபையில் இடம் பெறுவார்கள்' என்று கூறினார்.
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் மலரும். கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டால்தான் அந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்றும் பேசி இருக்கிறார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவிக்கையில், 'திருச்சி வேலுச்சாமி ஒரு மூத்த தலைவர். அவரது கூற்றுகள் எப்போதும் சரியானவை' என்று கூறி இருந்தார்.
இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது இதுவரை சாத்தியம் இல்லை. மக்கள் பெரும்பான்மை பலத்துடன் உள்ள ஆட்சியைத்தான் தந்து கொண்டு இருக்கின்றனர். அதேபோல் வருகிற பொதுத் தேர்தலிலும் தி.மு.க. தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள். எனவே கூட்டணி அரசாங் கங்களுக்கு ஏற்ற சூழ்நிலை தமிழ்நாட்டில் இல்லை.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகே இது குறித்தும் விவாதிக்கலாமே தவிர இப்போது அதற்கான அவசியம் எதுவும் ஏற்படவில்லை.
இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
- தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
- கடைசியில் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பால் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான விளக்கம் அளித்து விட்டார்.
சென்னை:
தமிழக கவர்னர். ஆர்.என். ரவிக்கும், தி.மு.க. அரசுக்கும் இடையே பல விஷயங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்தது.
இதன் உச்சககட்டமாக தமிழ்நாடு என்று சொல்வதற்கு பதில் தமிழகம் என்ற வார்த்தையை கவர்னர் பயன்படுத்த தொடங்கினார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியதால் கவர்னர் ஆர்.என்.ரவி தனது நிலைப்பாட்டை மாற்றினார்.
எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது என்று கூறி இருந்தார்.
எனது பேச்சின் அடிப்படை புரியாமல் கவர்னர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாத பொருளாகி இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்றும் கவர்னர் தெளிவுப்படுத்தி இருந்தார்.
இது பற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழை பற்றி உள்ளார்ந்தமாக புரிந்து கொள்ளாமல் யாரோ எழுதி கொடுப்பதை பொது வெளியில் சொல்கிறார். திருக்குறளை தப்பாக மொழி பெயர்த்தனர் என்று ஆரம்பத்தில் பேசி வந்தார்.
திராவிடம் என்ற வார்த்தை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்த வார்த்தை என்ற அர்த்தத்தில் பேசினார். ஆனால் அதற்கு முன்பே திராவிடம் இருக்கிறது. திராவிடம் என்ற வார்த்தைைய சங்கராச்சாரி யாரே சொல்லி உள்ளார்.
தி.மு.க.வை பிரிவினைவாத கட்சி மாதிரி சித்தரிக்க கவர்னர் நினைத்தார். ஆனால் அது எடுபடவில்லை. இப்போது நாங்கள் தனிநாடு கோரவில்லை. 1964-ம் ஆண்டே அதை தெளிவுப்படுத்திவிட்டோம்.
தமிழ்நாடு என்று நாம் சொல்வதால் தனிநாட்டுக்காக போராடும் சக்தியாக தி.மு.க.வை தவறாக சித்தரிக்கலாம் என்ற எண்ணத்தில் தமிழகம் என்ற வார்த்தை தான் பொருத்தமானது என்று கவர்னர் பேசி இருந்தார்.
ஆனால் அவர் நினைத்தது வேறு. நடந்தது வேறு. கடைசியில் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பால் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான விளக்கம் அளித்து விட்டார்.
டெல்லி மேலிடம் சொன்னதின் பேரிலேயே அவர் அந்த விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார்.
இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
- அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜ.க. கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்று இருக்கின்றன.
- தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் இல்லை.
சென்னை:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 4 கோடியே 36 லட்சத்து 19 ஆயிரத்து 470 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில் தி.மு.க. கூட்டணி 2 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரத்து 693 வாக்குகள் பெற்றன. அது 46.97 சதவீதம் ஆகும். அ.தி.மு.க. கூட்டணி 23.05 சதவீதமும், பா.ஜ.க. கூட்டணி 18.28 சதவீதமும், நாம் தமிழர் கட்சி 8.10 சதவீத வாக்குகளும் பெற்று இருக்கின்றன.
இதுதவிர சுயேச்சைகள் மற்றும் இதர கட்சியினர் 2.66 சதவீத வாக்குகளும், நோட்டா 1.07 சதவீத வாக்குகளும் பெற்று உள்ளன.
ஒவ்வொரு கட்சி ரீதியாக பார்த்தால் 4 கட்சிகள் மட்டும் 10 சதவீத வாக்குகளை தாண்டி இருக்கின்றன. தி.மு.க.- 26.9, அ.தி.மு.க.- 20.46, பா.ஜ.க.- 11.24, காங்கிரஸ் - 10.67 சதவீத வாக்குகள் பெற்று இருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜ.க.விற்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுவது குறித்து தி.மு.க. மூத்த தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், தமிழகத்தில் பா.ஜ.க.வால் வளர முடியாது. பா.ம.க. மற்றும் அதன் மற்ற கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சில வாக்குகளை பெற்றிருக்கலாம். அவர்களுக்கு என தனிப்பட்ட ஆதரவு இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எந்த இடமும் இல்லை. அவர்கள் பெற்ற வாக்குகள் அனைத்தும் கூட்டணி கட்சிகளால்தான் என்று கூறியுள்ளார்.
- அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும்.
- புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள்.
விஜய்யின் பேச்சுக்கு திமுக செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தனக்கு அரசியல் புரிதல் இல்லை என்பதை அவரே வெளிகாட்டிக் கொள்கிறார். 1938ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி போய் காங்கிரஸ் ஆட்சி வந்த உடனேயே இந்தி மொழி திணிக்கப்பட்டது.
அன்றைக்கே தமிழகத்தில் தமிழ் அறிஞர்கள் அனைவரும் இந்திக்கு எதிராக திராவிடக் கட்சி தலைவர்கள் அனைவரும் போராட்டத்தை நடத்தி திருச்சியில் இருந்து சென்னை வரை நடந்தே வந்து போராட்டம் நடத்தி மக்களிடம் கருத்தை பரப்பினார்கள். இதெல்லாம் அவருக்கு தெரியாது.
1952ல் மீண்டும் இங்கே முதல் தேர்தலில் ராஜாஜி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி மொழி கற்பிக்கப்படும் என்று கூறியபோது அதையும் எதிர்த்து போராடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.
1957ல் இரண்டே இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட நேரத்தில் ஈவிகே சம்பத் அவர்கள் நேருவிடம் இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்று பேசினார். அப்போது நேரு உத்தரவாதமாக இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிக்கும் என்று ஒரு உத்தரவாதம் அளித்தார்.
அனுபவமின்னை. அரசியல் தெரியாதவர்கள் அரசியல் பேசும்போது இதுபோன்ற சிக்கல்கள் வரும். அது அவருடைய அறியாமை.
திமுக என்ன செய்திருக்கிறது. திராவிடக் கழகம் தமிழை காப்பாற்ற என்ன செய்திருக்கிறது. இந்தி திணிப்புக்கு எதிராக எத்தகைய போராட்டம் நடத்தி இருக்கிறது ? எவ்வளவு உயிர்களை பலி கொடுத்திருக்கிறது ?என்பதெல்லாம் விஜய்க்கு தெரியாது.
புதிதாக கட்சி தொடங்கிபவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசை இருந்தால் உடனே ஆட்சியில் இருப்பவர்களைதான் கடிந்துக் கொள்வார்கள். அவர்கள் மீது குறை சொல்வார்கள்.
அந்த குறையில் எதுவும் நியாயம் இருக்கிறதா ? என்று அவர்களுக்கு சிந்தித்து பார்ப்பதற்கு கூட தெரியாது. இந்தி மொழி பிரச்சினையிலும் அப்படிதான் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நலிவு காரணமாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்.
- சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கு புதிதாக நாங்கள் எந்த காரணமும் கூற முடியாது.
சென்னை:
தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நலிவு காரணமாக கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால் இதே பொறுப்பு வகித்த வி.பி.துரைசாமி அரசியல் ரீதியாக தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். அது வேறு. இது வேறு. இரண்டையும் ஒப்பிடக்கூடாது. சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து விலகினாலும் தி.மு.க. உணர்வுடன்தான் இருக்கிறார். அவர் பா.ஜ.க.வில் இணைகிறேன் என்று சொல்லவில்லை. சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகலுக்கு புதிதாக நாங்கள் எந்த காரணமும் கூற முடியாது.
ஆனாலும் அவரது கணவர் ஜெகதீசன் சமூக வலைதளங்களில் தி.மு.க.வை பற்றி விமர்சித்து வருகிறார். அவரது பதிவுகளை நீக்கக்கோரி எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருக்கிறோம். அவர் தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை. நாங்கள் வேறு என்ன செய்ய முடியும்?
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.வின் செய்தி தொடர்புச் செயலாளராக இருந்தவர் டி.கே.எஸ். இளங்கோவன்.
அவரை நேற்று அந்த பதவியில் இருந்து நீக்கி, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டார். அதில் டி.கே.எஸ். இளங்கோவன் பதவி நீக்கத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தநிலையில் டி.கே.எஸ். இளங்கோவனின் பேச்சுக்களால்தான் அவர் மீது மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தி அடைந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மு.க.அழகிரி பற்றி யாரும் பேசக் கூடாது என்று மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் அதை மீறி மதுரையில் நடந்த கூட்டம் ஒன்றில் மு.க.அழகிரி குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் பேசினார். இது மு.க.ஸ்டாலினிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சில தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தேர்தல் ஒத்திவைப்பு குறித்து மு.க.ஸ்டாலின் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். ஆனால் மறுநாள் அதற்கு எதிர்மாறான கருத்தை டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். இதுவும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே நேற்று பேட்டியளித்த டி.கே.எஸ். இளங்கோவன், ‘‘அறிவாலயத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக சோனியா வர இருக்கிறார்’’ என்ற தகவலை வெளியிட்டார். சிலை திறப்பு விழாவுக்கு டெல்லியில் உள்ள தலைவர்களை அவரே அழைத்து வருவது போன்றும் அவரது பேட்டி அமைந்திருந்தது.

இதைத்தொடர்ந்து டி.கே.எஸ். இளங்கோவனின் பதவியை தி.மு.க. தலைமை பறித்து நடவடிக்கை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.
தி.மு.க. செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து இளங்கோவன் நீக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு அவர் பேட்டி அளித்த போது 2016 தேர்தலில் தி.மு.க. எத்தனை இடத்தில் போட்டியிடும் என்பது பற்றி சில தகவல்களை வெளியிட்டார்.
இதனால் அதிருப்தி அடைந்த கருணாநிதி உடனடியாக அவரை செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கினார். உடனே டி.கே.எஸ். இளங்கோவன் மன்னிப்பு கோரி கடிதம் அளித்தார்.
அதை ஏற்று அவருக்கு மீண்டும் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் கருணாநிதி சிலை திறப்பு விழா, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி விவரங்களில் அவர் அளித்த தகவல்கள் அதிருப்தியை ஏற்படுத்தியதால் மீண்டும் பதவி பறிபோக காரணமாகி விட்டது. #DMK #TKSElangovan #MKStalin #Karunanidhi
திமுக செய்தித்தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ்.இளங்கோவன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
திமுக சார்பாக ஊடக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் என க.பொன்முடி, ஆர்.எஸ் பாரதி, செல்வகணபதி, ஆ.ராசா, ஜெ. அன்பழகன், பழ.கருப்பையா மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட 7 பேர் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் தலைமை கழகம் இன்று வெளியிட்டது.
"கழகத்தின் சார்பில் ஊடக நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் விவரம்”
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) October 15, 2018
-தலைமைக் கழகம். @Kalaignarnews@sunnewstamil@polimernews@PTTVOnlineNews@News18TamilNadu@news7tamil@ThanthiTV@vikatan@nakkheeranweb@sathiyamnews@maalaimalar@MadhimugamTV@cauverytv@RajtvNetworkpic.twitter.com/J7kj2RrG27
இந்நிலையில், திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் பொருப்பில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரும், திமுக அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் வேறு ஒருவர் உடனடியாக நியமிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #TKSElangovan #DMK

இக்கூட்டம் முடிந்ததும் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க மட்டுமே இன்றைய செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டதாக கூறினார். மேலும், காலம் வரும்போது பொதுக்குழு கூடி திமுக தலைவரை தேர்வு செய்யும் என்றும் தெரிவித்தார்.
திமுகவை உடைக்க யாருக்கும் வலிமை கிடையாது என்றும், அடுத்தவர்களின் சதிக்கும் திமுகவினர் உடன்பட மாட்டார்கள் என்றும் இளங்கோவன் கூறினார். #DMKExecutiveCommittee #TKSElangovan
தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி நாட்டில் தி.மு.க தொண்டர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று இரவு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் கருணாநிதி காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து பரவிவரும் வதந்திகளால் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்திலும், கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனையிலும் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்து பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராகி விட்டதாகவும், இருப்பினும் இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் கருணாநிதி இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார். #DMK #Karunanidhi #KauveryHospital #TKSElangovan






