என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாட்டிற்கு வஞ்சகம், துரோகம் செய்யும் அரசாக மத்திய அரசு உள்ளது- டி.கே.எஸ் இளங்கோவன்
    X

    தமிழ்நாட்டிற்கு வஞ்சகம், துரோகம் செய்யும் அரசாக மத்திய அரசு உள்ளது- டி.கே.எஸ் இளங்கோவன்

    • 5 ஆண்டு கால சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல பரப்புரை பயணம் தொடங்க உள்ளோம்.
    • 4 துறைகளில் பல சீரிய திட்டங்களை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென முதலமைச்சர் பல திட்டங்களை அறிவித்துள்ளார் என்று டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

    சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அனைவரும் கல்வி கற்க வேண்டுமென முதலமைச்சர் பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

    கல்வி, மருத்துவம், உணவு பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் ஆகிய 4 துறைகளில் பல சீரிய திட்டங்களை வழங்கி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் நாளை முதல் திராவிட முன்னேற்றக் கழகம் பிரச்சாரத்தை தொடங்குகிறது.

    திமுக அரசு கொண்டு வந்த நல்ல திட்டங்களையும், 5 ஆண்டு கால சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்ல பரப்புரை பயணம் தொடங்க உள்ளோம்.

    திமுக மீது சொல்லப்படும் குற்றங்களை பொதுமக்களிடம் விளக்க தமிழ்நாடு தலைகுனியாது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் மற்றும் துரோகம் செய்யும் அரசாக மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் மத்திய பாஜக அரசு வழங்கவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×