என் மலர்
நீங்கள் தேடியது "Charitable organizations"
- சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று இணையத்தில் தகவல் பரவியது
- அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்த்தது
வரும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது என்று சூர்யா நற்பணி இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
சூர்யா நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊடக நண்பகர்களுக்கும். சமூக வலைத்தள நண்பர்கள், சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பில் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா அவர்கள் களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.
இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல. அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.
சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு தமிழ்நாடு மட்டுமின்றி உலகு தழுவிய அளவில் கவனம் ஈர்க்கப்பட காரணமானவர்களாகிய உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி தங்கைகள், நண்பர்களின் வாழ்த்துக்களோடு சினிமாவில் மட்டுமே அண்ணனின் கவனம் இருக்கும்.
எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி!" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மொடச்சூர் வாரச்சந்தையில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வரு கிறது
- விடுதியை பராமரித்து நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பி க்கலாம்
கோபி,
கோபிசெட்டி பாளையம் மொடச்சூர் வாரச்சந்தையில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி செயல்பட்டு வரு கிறது. இந்த விடுதியை பராமரித்து நடத்த தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பி க்கலாம்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் மொடச்சூர் வார சந்தை பகுதியில் உள்ள வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதியை வழிகாட்டு தலுக்கிணங்க பணப் பயன் ஏதுமின்றி நடத்துவதற்கு அரசு சார்பி ல்லா விருப்பமுள்ள தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பங்கள் அனுப்ப லாம்.
ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் கோபிசெட்டி பாளையம் நகராட்சி ஆணையர் என்ற முகவரிக்கு வரும் 15-ந் தேதிக்குள் எழுத்து பூர்வமாக விண்ணப் பிக்க வேண்டும்.
தொண்டு நிறுவனங்கள் இது வரை ஈடுபட்டுள்ள முன் அனுபவ சேவை விபரங்களை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நக ராட்சி மூலம் ஆய்வு செய்து தகுதியான தொண்டு நிறு வனங்களை தேர்வு செய்ய ப்படும்.
மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி தேர்வு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்திடம் விடுதி ஒப்டைக்கப்படும் என நகராட்சி ஆணையர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கை.
- ஜூன் 10-ந் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகா் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கு சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் விருது வழங்கப்படவுள்ளது.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தமிழகத்தை சோ்ந்தவராகவும், 18வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சாா்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணியாற்றியவராகவும், தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றியிருக்க வேண்டும். ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்த சமூகசேவகா் மற்றும் தொண்டு நிறுவனம் இருந்தால் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் ஜூன் 10-ந்தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
- இதன் திறப்பு விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசினார்.
சிவகங்கை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் ஒக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இதை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர் பேசியதாவது:-
இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாகவும், அவர்களின் உடல்நலத்தை பேணிக்காக்கும் வகையிலும் விளையாட்டு அடிப்படையாக அமைகிறது. அந்த விளையாட்டை கிராம பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பெறுவதற்கு ஏதுவாக அரசுடன் இணை ந்தும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர். ஒக்கூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு நிதி ரூ.13.56 லட்சமும், பங்களிப்பு நிதியாக ரூ.13.50 லட்சமும் என மொத்தம் ரூ.27.06 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இறகுபந்து உள்விளையாட்டு அரங்கம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கிராம மக்களுக்கு பயனுள்ள வகையிலும், அருகிலுள்ள கிராமப்புறப்பகுதிகளைச் சார்ந்த இளைஞர்களுக்கு பயனுள்ள வகையிலும், உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
இதுபோன்று கிராமப்புற பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அரசுடன் இணைந்து, மக்கள் பணியாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சேக்கப்ப செட்டியார், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் வானதி, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் மகேஸ்வாி கண்ணன். ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாசலம், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன், வட்டாட்சியர் தங்கமணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து உள்ப பலர் கலந்து கொண்டனர்.






