என் மலர்
நீங்கள் தேடியது "Minister TRB Raja"
- விண்வெளித் துறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவிலேயே முதல் முறையாக விண்வெளிக்கு என்று கொள்கையை தமிழ்நாடு வகுத்துள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமைச்சரவை கூட்டத்தில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் தமிழகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி தமிழ்நாடு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் அரும்புநிலை நிறுவனங்களை ஊக்குவிக்க புதிய தொழில் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
விண்வெளித்துறையில் நிறுவனங்களையும், புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ரூ.10,000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்ப்பது தான் இந்த கொள்கையின் முக்கிய பங்கு.
இந்தியாவிலேயே முதல் முறையாக விண்வெளிக்கு என்று கொள்கையை தமிழ்நாடு வகுத்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டி.
- பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டியை மக்கள் இன்னமும் தங்களின் வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இலவசம் என்றார்கள்...
பொழுதுபோக்கு என்றார்கள்...
கலைஞருக்கு மட்டுமே தெரிந்தது அது,
பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல் என்று,
பெண்கள் வெளியுலகை எளிதில் எட்டி பார்ப்பதற்கு உதவும் ஜன்னல் என்று.
உலக செய்திகளை, உலகத்தின் வளர்ச்சியை, மனிதனின் படைப்புகளை தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒளிக்கீற்று என்று.
தமிழினத்தை உலகம் போற்றும் மாபெரும் இனமாகவும் தமிழ்நாட்டை உலகே வியந்து பார்க்கும் வளர்ச்சியின் விளைநிலமாகவும் மாற்றக் கூடிய அற்புத விளக்கு என்று.
இலவசம் இல்லங்க அது.
மக்கள் நல திட்டம்.
பொழுதுபோக்கு இல்லைங்க அது,
பொது அறிவுப் பெட்டகம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், ரூ.9 ஆயிரம் கோடிக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையை அமைக்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
டாடா மோட்டார்ஸ் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில், ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இதுபோன்ற ஒரு முதலீடு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு இதற்கு முன் வந்ததா என்று தெரியவில்லை.
தொழில் முதலீட்டாளர்களை தமிழகம் ஈர்க்க பல்வேறு காரணங்கள் உள்ளன.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் நோக்கி வரத் தொடங்கி உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.
- ஓசூரில் கண்டிப்பாக விமான நிலையம் அமையும்.
தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 1,500 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் 1,000 ஏக்கர் பரப்பளவில் புதிய SIPCOT தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
கரூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதம் புதிய மினி Tidel Park அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் வட்டத்தில் சுமார் 175 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டத்தில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மற்றும் மன்னார்குடி வட்டங்களில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
சென்னை வெளிவட்டச் சாலையை ஒட்டி சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்படும்.
தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2,100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
திருப்போரூரில் உள்ள Godrej உற்பத்தி ஆலை வருகிற டிசம்பர் திறக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டை விண்வெளி தொழிலில் முன்னணி மாநிலமாக மேம்படுத்த விண்வெளி தொழில் கொள்கை வெளியிடப்படும்.
சுழற்பொருளாதார துறைகளில் முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சுழற்பொருளாதார முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கை வெளியிடப்படும்
முதலீடுகளை ஊக்குவிக்க உதவியாக 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் கிளை அலுவலகம் கோயம்புத்தூரில் அமைக்கப்படும்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 'Guidance TamilNadu' நோடல் ஏஜென்ஸியின் ஊக்குவிப்பு அமைவு(Japan Desk) உருவாக்கப்படும்.
ஓசூரில் புதிய விமான நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வெளியே இருக்கும் சிலர், இதில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
தீவிர ஆய்வுக்கு பிறகே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக விமான நிலையம் அமையும். கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வெகுவிரைவில் தொடங்கும். சேலம் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் எடுப்பு தொடங்கிவிட்டது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 2100 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும்.
ஆலங்குளம் சிமெண்ட் ஆலையில் எம்-சாண்ட் உற்பத்தி ஆலை சுமார் 25 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாட்டில் 40% மின்சார வாகனங்கள் உற்பத்தி இங்குதான் உற்பத்தியாகிறது.
- ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் 1 நிலையில் உள்ளது.
மஹிந்திராவின் BE 6, XEV 9E SUV கார்களின சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது:-
மஹிந்திரா நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஆராய்ச்சியும் தமிழ்நாட்டில்தான்
நடைபெறுகிறது. மின்சார வாகனங்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தமிழ்நாட்டில்தான் நடைபெற வேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம்.
'தமிழ்நாட்டில் 40% மின்சார வாகனங்கள் உற்பத்தி இங்குதான் உற்பத்தியாகிறது, ஆட்டோமொபைல் துறையில் நீண்ட காலமாக தமிழ்நாடு நம்பர் 1 நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளது.
- சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஃபின்லாந்து உள்ளிட்ட பல நாட்டு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறியாமல் அற்பத்தனமாக அறிக்கை விடுகிறார் இபிஎஸ் என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
அப்போது, மாநிலத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல், வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ 'கிண்டி'த் தருவதை ஆளுநரும் இ.பி.எஸ்-ம் மென்று கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பாவோஸில் தமிழ்நாட்டு பிரதிநிதகள் மேற்கொண்ட தொழில் முயற்சிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பட்டியலிட்டார்.
அப்போது அவர், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளது.
சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஃபின்லாந்து உள்ளிட்ட பல நாட்டு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு குறித்து சிங்கப்பூர் துணை பிரதமருடன் கலந்துரையாடியுள்ளோம்.
மருத்துவ தொழில்நுட்பம், மருந்து, உணவு ஏற்றுமதி பற்றி சிங்கப்பூர் துணை பிரதமருடன் விவாதித்து, சாதக பதிலை பெற்றுள்ளோம்.
உணவு ஏற்றுமதி, தொழில்நுட்ப துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து ஐக்கிய அரபு நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டது என்றார்.






