என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறியாமல் அற்பத்தனமாக அறிக்கை விடுகிறார் இபிஎஸ்- அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
- சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளது.
- சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஃபின்லாந்து உள்ளிட்ட பல நாட்டு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறியாமல் அற்பத்தனமாக அறிக்கை விடுகிறார் இபிஎஸ் என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
அப்போது, மாநிலத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல், வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ 'கிண்டி'த் தருவதை ஆளுநரும் இ.பி.எஸ்-ம் மென்று கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பாவோஸில் தமிழ்நாட்டு பிரதிநிதகள் மேற்கொண்ட தொழில் முயற்சிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பட்டியலிட்டார்.
அப்போது அவர், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளது.
சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஃபின்லாந்து உள்ளிட்ட பல நாட்டு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.
செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு குறித்து சிங்கப்பூர் துணை பிரதமருடன் கலந்துரையாடியுள்ளோம்.
மருத்துவ தொழில்நுட்பம், மருந்து, உணவு ஏற்றுமதி பற்றி சிங்கப்பூர் துணை பிரதமருடன் விவாதித்து, சாதக பதிலை பெற்றுள்ளோம்.
உணவு ஏற்றுமதி, தொழில்நுட்ப துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து ஐக்கிய அரபு நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டது என்றார்.






