என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    #UdhayanidhiStalin இன்று மாலை நெல்லை வருகை- உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு
    X

    #UdhayanidhiStalin இன்று மாலை நெல்லை வருகை- உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு

    • ரூ.100 கோடி மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.
    • அரசு விழாவிற்கு பின்னர் பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

    நெல்லை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக இன்று மாலை காரில் நெல்லைக்கு வந்தடையும் உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்லை சங்கர் நகரில் மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் திரண்டு தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.

    அப்போது ரூ.100 கோடி மதிப்பில் சுமார் 15 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    பின்னர் கே.டி.சி.நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பிலான பெட்ரோல் பங்க், கூட்டுறவு துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை திறந்து வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார், ராபர்ட் புரூஸ் எம்.பி., நெல்லை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மேயர் ராம கிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, மாநகர தி.மு.க. பொறுப்பாளர்கள் (மேற்கு) சுப்பிரமணியன், (கிழக்கு) தினேஷ், கிறிஸ்தவ தேவாயலங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யா னந்த், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

    அரசு விழாவிற்கு பின்னர் பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் நடக்கும் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் கட்சியின் 28 சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட திரளான அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி பல்வேறு ஆலோசனைகளை உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

    தொடர்ந்து இரவு தென்காசி மாவட்டத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். இரவில் குற்றாலத்தில் தங்கும் உதயநிதி ஸ்டாலின் நாளை(வெள்ளிக்கிழமை) காலை அங்கு நடைபெறும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அங்கிருந்து மாலையில் புறப்பட்டு வள்ளியூர் வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார்.

    அவரது வருகையையொட்டி நெல்லை மாநகர பகுதி முழுவதும் சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையையொட்டி நெல்லை மாநகர போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். நெல்லை மாநகரில் டிரோன் பறக்க தடை விதித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நிகழ்ச்சிகளில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பாளை வடக்கு ஒன்றிய செயலாளர் வேலன்குளம் கண்ணன், தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மனோஜ்குமார், வக்கீல் மாயா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் அனுராதா ரவிமுருகன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×